திண்டுக்கல் : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - இந்து முன்னணி நிர்வாகிகளிடையே கைகலப்பு!
Aug 7, 2026, 05:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திண்டுக்கல் : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் – இந்து முன்னணி நிர்வாகிகளிடையே கைகலப்பு!

Murugesan M by Murugesan M
Jun 20, 2025, 07:02 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்து முன்னணி அமைப்பு நிர்வாகிகளுக்கிடையே கைகலப்பு ஏற்பட்டதால் பதற்றமான சூழல் நிலவியது.

திண்டுக்கல் அருகே உள்ள தாடிக்கொம்பு பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மக்கள் சந்திப்பு பிரச்சாரம், ஒன்றிய செயலாளர் சரத் தலைமையில் நடைபெற்றது. அப்போது ஒன்றிய செயலாளர் சரத், இந்து முன்னணி அமைப்பு பொறுப்பாளர்களான வினோத் உள்ளிட்டோரை ஒருமையில் பேசி விமர்சித்ததாகக் கூறப்படுகிறது.

இந்த தகவல் அறிந்து சம்பவ இடம் வந்த இந்து முன்னணி நிர்வாகி வினோத் உள்ளிட்டோர், தங்களைத் தரக்குறைவாகப் பேசியது குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர். இதனால் இரு தரப்பினரிடையே வாக்குவாதம் முற்றிக் கைகலப்பாக மாறியது. இதில் காயமடைந்த இந்து முன்னணி நிர்வாகி வினோத், சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

தொடர்ந்து தாடிக்கொம்பு காவல் நிலையத்திலும் இரு தரப்பினரிடையே காரசார வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சிலர், திண்டுக்கல் – கரூர் நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்குப் போட்டியாக இந்து முன்னணி மற்றும் பாஜக-வைச் சேர்ந்தவர்களும் சாலை மறியலில் ஈடுபட்டு அக்கட்சியினருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதில் மீண்டும் இரு தரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர் ஒருவர், பாஜக மாவட்ட துணைத் தலைவர் பாலமுருகனைத் தடியால் அடித்துள்ளார். இதில் பாலமுருகனின் மண்டை உடைந்து ரத்த வடிந்த நிலையில், அவரும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த இந்து முன்னணி மற்றும் பாஜக-வை சேர்ந்தவர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை சரமாரியாகத் தாக்கத் தொடங்கினர். இதனால் கலவரத்தைக் கட்டுப்படுத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி அப்புறப்படுத்தினர்.

தொடர்ந்து இந்து முன்னணி மற்றும் பாஜக அமைப்பைச் சேர்ந்தவர்களையும் போலீசார் அப்பகுதியிலிருந்து வெளியேற்றினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன் பதற்றமான சூழலும் நிலவியது.

Tags: திண்டுக்கல்Clashes between Marxist Communist and Hindu Front executivesகைகலப்பு
Share
Tweet
SendShare
Previous Post

ஆப்ரேஷன் சிந்தூரை நிறுத்தும்படி இந்தியாவிடம் கெஞ்சிய பாகிஸ்தான் : துணை பிரதமர் இஷாக் தார் வாக்குமூலம்!

Next Post

பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டோரின் அடையாளங்களை வெளியிடக் கூடாது : தமிழக காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை!

Related News

ஆதவ் அர்ஜுனா தான் எம்எல்ஏ சீட் வாங்கி கொடுத்தார் – ரகசியம் உடைத்த திமுக எம்எல்ஏ!

டாஸ்மாக் மதுபான கடையில் கூடுதல் தொகை வசூலித்தால் காவல்துறையிடம் புகார் அளிக்கலாம் – உயர் நீதிமன்றம்

தேசிய கைத்தறி தினம் – நெசவு ஆடைகளை வாங்கி, கட்சி நிர்வாகிகளுக்கு அன்பளிப்பாக வழங்கிய பாஜக நிர்வாகி!

விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றார் முதலமைச்சர் விஜய் மனைவி சங்கீதா!

கலையும் அமெரிக்கக் கனவு – தாயகம் திரும்பும் இந்திய அமெரிக்கர்கள் – காரணம் என்ன? : சிறப்பு தொகுப்பு!

பிரதமர் மோடி குறித்து அவதூறு பேச்சு – பியூஸ் மானுஷ் மீது வழக்குப் பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு அஞ்சலி – அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி.க்களை கடிந்து கொண்ட சிபிஆர்!

கர்நாடக அணைகள் நிரம்பியதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது – சட்டப்பேரவையில் இபிஎஸ் பேச்சு!

1300 வீடுகளில் தவறாக மின் பயன்பாடு கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது கண்டுபிடிப்பு – மின் வாரிய அதிகாரிகள் தகவல்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் ரவுடியுடன் புலனாய்வு குழு போலீசாருக்கு தொடர்பு – சிபிஐ விசாரணையில் அம்பலம்!

பழனி கோயில் நில மோசடி வழக்கு – கைது செய்யப்பட்ட சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் மருத்துவமனையில் அனுமதி!

காவிரி விவகாரத்தில் தமிழக மக்களுக்காக எந்த அவமானத்தையும் தாங்க தயாராக உள்ளேன் – முதலமைச்சர் விஜய்

600 கோடி ரூபாய் மதிப்பில் மண் வள பாதுகாப்பு திட்டம்; பட்ஜெட்டில் அறிவிப்பு

முதலமைச்சரை புகழ்ந்து அமைச்சர் வினோத்; எதிர்கட்சிகள் கூச்சலிட்டதால் சலசலப்பு

திருப்பூரில் 10 கோடி மதிப்பில் டெக்ஸ்டைல் டெக்னாலஜி சென்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

விவசாய பயிர்கடன் தள்ளுபடிக்கு 5,932 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies