பட்டியலின மக்கள் மீதான வன்முறைகள் திமுக ஆட்சியில் தான் கொடூர உச்சங்களைத் தொட்டிருக்கிறது : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!
Jun 20, 2025, 07:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பட்டியலின மக்கள் மீதான வன்முறைகள் திமுக ஆட்சியில் தான் கொடூர உச்சங்களைத் தொட்டிருக்கிறது : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Jun 20, 2025, 03:49 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பட்டியலின மக்கள் மீதான வன்முறைகள் திமுக ஆட்சியில் தான் கொடூர உச்சங்களைத் தொட்டிருக்கிறது என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தில் மாற்று மதப்பெண்ணை காதலித்து திருமணம் செய்யவிருந்த இந்து பட்டியல் சமூக இளைஞரான தனுஷ் மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அதுவும் அவர் காதலித்த பெண்ணின் வீட்டு மாடியிலேயே அவர் தூக்கிட்டிருப்பது மிகுந்த சந்தேகத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும், அந்தப் பெண்ணின் நெருங்கிய உறவினர்கள் திமுகவில் உள்ளதாக தகவல்கள் வந்துள்ள நிலையில், இந்த வழக்கு முறையாக விசாரிக்கப்படுமா என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழுந்துள்ளது.

நல்லமுறையில் கல்வி கற்று, கோவையில் ஒரு ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் இளைஞரான தனுஷ் தான் காதலிக்கும் பெண்ணின் வீட்டிலேயே தூக்கிட்டுக் கொண்டார் என்பது நம்பும்படியான செய்தியாக இல்லை. கடந்த நான்காண்டுகளில் தமிழகத்தில் சீர்குலைந்து போயுள்ள சட்டம் ஒழுங்கு அதள பாதாளத்திற்கு சென்றுவிட்டது.

குறிப்பாக, பட்டியலின மக்கள் மீதான வன்முறைகள் இந்த ஆட்சியில் தான் கொடூர உச்சங்களைத் தொட்டிருக்கிறது. ஆக, இவ்வழக்கில் எவ்வித அரசியல் தலையீடும் இல்லாமல் முறையான பிரேத பரிசோதனை செய்து உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவர வேண்டியது காவல்துறையினரின் பொறுப்பு.

அந்தப் பெண்ணின் குடும்பத்திற்கும் திமுக-விற்கும் நெருங்கிய தொடர்புகள் இருப்பதால் திமுகவின் வழக்கமான அராஜகப் போக்கிற்கு தமிழகக் காவல்துறை இணங்கக் கூடாது. ஆளுங்கட்சியின் வாக்கரசியலுக்கு துணை போகும் நோக்கத்தோடு ஒருதலை பட்சமாக காவல்துறை செயல்படக்கூடாது.

ஆட்சி மாற்றத்திற்கு இன்னும் ஒரு சில மாதங்கள் தான் உள்ள நிலையில், ஆளும் திமுக-வின் அரசியல் அழுத்தத்திற்கு ஆட்படாமல், இவ்வழக்கின் உண்மைத் தன்மையை விரைவாக வெளிக்கொணர வேண்டுமென தமிழக காவல் துறையினரை வலியுறுத்துகிறேன். மேலும், பாதிக்கப்பட்ட அந்த இளைஞரின் குடும்பத்தின் பக்கம் பாஜக உறுதியாக நிற்கும் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

Tags: DMKMK Stalintn govtViolence against Scheduled Castes people has reached its cruel peak under the DMK regime: Nayinar Nagendran alleges
ShareTweetSendShare
Previous Post

நான்காண்டு காலமாக, அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்கும் திமுக : அண்ணாமலை விமர்சனம்!

Next Post

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு நன்னீராட்டு விழா : ஏடிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதம் ஆய்வு!

Related News

முடங்கும் சன் குழுமம்? : கலாநிதி மீது தயாநிதி மோசடி புகார்!

சென்னை போக்குவரத்து காவல்துறையினர் போல் செல்போனுக்கு குறுந்தகவல் அனுப்பி மோசடி!

புதிய இருசக்கர வாகனங்களுடன் 2 ஹெல்மெட் வழங்க உத்தரவு!

மூதாட்டி அணிந்திருந்த தங்க சங்கிலியை பறித்து சென்றவர்கள் கைது!

முருக பக்தர்கள் மாநாடு : பாஸ் தேவையில்லை – உயர்நீதிமன்றம்!

சென்னை மெரினா கடற்கரையில் அதிவேகமாக காரை இயக்கி அச்சுறுத்திய நபர் – போலீசார் விசாரணை!

Load More

அண்மைச் செய்திகள்

ஆப்ரேஷன் சிந்தூரை நிறுத்தும்படி இந்தியாவிடம் கெஞ்சிய பாகிஸ்தான் : துணை பிரதமர் இஷாக் தார் வாக்குமூலம்!

தேசிய ஜனநாயக கூட்டணியின் இரட்டை இன்ஜின் அரசாங்கம் பீகாரில் செயல்படுகிறது : பிரதமர் மோடி பெருமிதம்!

அலற வைக்கும் DRDO : நவீனமாகும் நாட்டின் ஆயுதக் களஞ்சியம்!

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை ஜூலை மாதம் 18ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மௌன அஞ்சலி!

மகாராஷ்டிராவின் புனேவில் ரெட் அலர்ட்!

சாயல்குடி அருகே பெண் கொலை!

ஒற்றுமை என்பது இந்தியாவின் பாரம்பரியத்தில் வேரூன்றி உள்ளது : அமித்ஷா

மத்திய கிழக்கின் அமைதியை பாதித்த புற்றுநோய் இஸ்ரேல் : வடகொரியா

கிருஷ்ணகிரி : கடன் பிரச்னை தொடர்பாக பெண் மீது தாக்குதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies