ஆப்ரேஷன் சிந்தூரை நிறுத்தும்படி இந்தியாவிடம் கெஞ்சியது தாங்கள்தான் எனப் பாகிஸ்தான் வாக்குமூலம் அளித்துள்ளது.
பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையை இந்திய ராணுவம் மேற்கொண்டது.
பாகிஸ்தானின் தீவிரவாத முகாம்களைக் குறிவைத்து இந்திய ராணுவம் துல்லிய தாக்குதல் நடத்திய நிலையில், தாக்குதலை நிறுத்துமாறு இந்தியாவிடம் பாகிஸ்தான் கெஞ்சியதாகச் செய்தி வெளியானது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக ஆப்ரேஷன் சிந்தூரை நிறுத்தும்படி இந்தியாவிடம் கெஞ்சியது தாங்கள்தான் எனப் பாகிஸ்தான் வாக்குமூலம் அளித்துள்ளது.
போர் நிறுத்தத்திற்காகச் சவுதி இளவரசர் ஃபைசல் மூலம் இந்தியாவுக்குத் தூது அனுப்பியதாக பாகிஸ்தான் துணைப் பிரதமர் இஷாக் தார் தெரிவித்துள்ளார். இதனைத் தொலைக்காட்சி விவாதத்தின் போது பாகிஸ்தான் துணைப் பிரதமர் ஒப்புக்கொண்டுள்ளார்.
இதற்கிடையே, போர் நிறுத்தத்தை இந்தியா – பாகிஸ்தான் தலைவர்கள் தான் தீர்மானித்தனர் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முதல் முறையாக ஒப்புக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.