கோவை பேரூர் ஆதின மடத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கலந்துகொண்டுள்ளார்.
ஆர்எஸ்எஸ் அமைப்பு மற்றும் 24-வது பேரூர் ஆதினம் சாந்திலிங்க ராமசாமி அடிகளாரின் நூற்றாண்டு விழா கோவை பேரூரில் நடைபெறுகிறது.
இதில் கலந்து கொண்ட ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், ஆதின மடத்தில் நடைபெற்ற சிவ வேள்வி பூஜையில் பங்கேற்று வழிபாடு செய்தார். அப்போது பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தின் வருகையையொட்டி ஆதின வளாகம் முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. அடையாள அட்டை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது.