திருப்பூர் மாவட்டம், பெரமியத்தில் திமுக நிர்வாகியைப் பதவிநீக்கம் செய்யக்கோரி அதே கட்சியைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தாராபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளராக துரைசாமி என்பவர் இருந்து வருகிறார். இவர் பட்டியலினத்தவர்களை அவமரியாதையாக நடத்துவதுடன், பெண் உறுப்பினர்களை அவமதிக்கும் வகையில் ஒருமையில் பேசி வருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் பெரமியம் ஊராட்சியில் நடைபெற்ற தார் சாலை பணிக்கான பூமி பூஜை நிகழ்ச்சியில், அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கலந்து கொண்டார்.
அப்போது அவர் முன்னிலையில் துரைசாமியை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.