இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் இன்னிங்சில் 600 ரன்கள் குவித்திருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம் என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியைத் தழுவியது. இந்நிலையில் இது குறித்துப் பேசிய கவுதம் காம்பீர் முதல் இன்னிங்சில் 600 ரன்கள் குவித்திருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி பெற முயற்சிப்போம் என்றும் கவுதம் கம்பீர் கூறினார்.