வேர்வை அதிகமாக வந்ததனால் திருநீரை துடைத்தேன் என்று திருமாவளவன் யாரு காதில் பூ சுற்றுகிறார் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் பரைக்கோடு வைகுண்டபுரம் ராமர் கோவில் கும்பாபிஷேகம் இன்று காலை நடைபெற்ற நிலையில் மாலை நடைபெற்ற சமய மாநாடு நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பாஜக தேசிய பொது குழு உறுப்பினர் அண்ணாமலை, சட்டமன்ற உறுப்பினர் எம் ஆர் காந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் உரையாற்றிய அண்ணாமலை, தமிழகத்தில் கடந்த மாதம் முதல் ஆன்மிக சொற்பொழிவாளராக உள்ள அனைவரையும் முறியடித்து சிறந்த பேச்சாளராக நயினார் நாகேந்திரன் உள்ளதாக அவர் கூறினார்.
வரும் காலத்தில் ஆலய வழிபாடு மூலமாக சனாதன தர்மத்தை, இளைய சமுதாயத்திற்கு எடுத்துக்காட்ட வேண்டும் என்றும், அனைத்து மதமும் சமம் என்று நினைக்க கூடியவன் என்றும் கூறியுள்ளார்.
நம்முடைய மதத்தை போற்றி பேணி காக்கக்கூடிய உரிமை நமக்கு இருக்கிறது என்றும்
யாரையும் மதம் மாற விடக்கூடாது என்றும் அவர் தெரிவித்தார். திருமாவளவன் சொன்னது வேர்வை அதிகமாக வந்ததனால் திருநீரை துடைத்தேன் என்று கூறியதற்கு யாரு காதில் பூ சுற்றுகிறார் என்றும் அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.
திமுக-விற்கு வாக்களித்து எந்தப் பயனும் இல்லை என்றும், திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அடுத்த 5 ஆண்டுகளில் எந்த மாற்றமும் இருக்காது என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.