கண்ணீரில் தென்னை விவசாயிகள் : தேங்காய்களை அரசே கொள்முதல் செய்ய கோரிக்கை!
Oct 16, 2025, 03:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கண்ணீரில் தென்னை விவசாயிகள் : தேங்காய்களை அரசே கொள்முதல் செய்ய கோரிக்கை!

Web Desk by Web Desk
Jul 1, 2025, 07:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விளைச்சல் பாதிப்பு, உரிய விலையின்மை காரணத்தினால் பொள்ளாச்சி பகுதியில் தென்னை சாகுபடி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் தேங்காய்களை அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

தமிழகத்தில் உள்ள சுற்றுலாத் தளங்களில் முதன்மையாகத் திகழும் பொள்ளாச்சியில் தென்னை சாகுபடியே பிரதான விவசாயமாக அமைந்திருக்கிறது. பரம்பிகுளம் ஆழியாறு உள்ளிட்ட பாசனத் திட்டங்களின் வாயிலாக மட்டும் சுமார் 6 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தென்னை விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தென்னை நகரம் எனப் பெயர்பெற்ற பொள்ளாச்சியில் தென்னை விவசாயமும் தென்னை சார்ந்த தொழில்களும் படிப்படியாக அழிவுப்பாதையை நோக்கிச் செல்லும் சூழல் உருவாகியுள்ளது.

நீண்ட காலப் பயிர்களில் ஒன்றாகக் கருதப்படும் தென்னை, பயிரப்பட்ட ஐந்து ஆண்டுகளிலிருந்தே விவசாயிகளுக்குக் கைகொடுக்கத் தொடங்கிவிடுகிறது. தென்னை மரத்திலிருந்து கிடைக்கும் இளநீர் உடலுக்குக் குளிர்ச்சியை ஏற்படுத்துவதோடு பல்வேறு மருந்துகளுக்கும் பயன்படுகிறது. மேலும் தென்னையிலிருந்து பெறப்படும் மட்டை, ஓலை, தென்னங்குச்சிகள் ஆகியவை வணிக ரீதியாகவும் பயன்படுத்தப்படுகின்றன.

சந்தைகளில் கிடைக்கும் தேங்காய் எண்ணெய்யை விடப் பாரம்பரிய முறையில் செக்கில் ஆட்டப்படும் தேங்காய் எண்ணெய் வகைகளுக்கும் மக்கள் மத்தியில் தனி வரவேற்பும் உண்டு. இத்தகைய அளவில்லா பயன் தரக்கூடிய தென்னை கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு நோய் தாக்குதலுக்கு உள்ளாகி விளைச்சல் பாதித்து வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்

தேங்காய் விளைச்சலின்மையால் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாகப் பாரம்பரியமாக நடைபெற்று வந்த செக்காட்டும் தொழில் தற்போது முடங்கிக் கிடக்கிறது. செக்காட்டும் தொழிலையே நம்பியிருந்த தொழிலாளர்கள் வேறு வேலையை நாடிச் செல்ல தொடங்கியுள்ளனர்.

விளைச்சல் பாதிப்பு ஏற்பட்டிருப்பதோடு, கஷ்டப்பட்டு விளைவிக்கப்படும் தேங்காய்களுக்கு உரிய விலையும் கிடைக்காத காரணத்தினால் பெரும்பாலான விவசாயிகள் தென்னை சாகுபடியைக் கைவிடும் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். தென்னை விவசாயிகளைப் பாதுகாக்கும் வகையில் தேங்காய்களை அரசே கொள்முதல் செய்வதோடு, நியாயவிலைக்கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்யும் திட்டத்தைத் தொடங்க வேண்டும் எனத் தென்னை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: Coconut farmers in tears: Request for government to purchase coconutsதென்னை விவசாயிகள்விளைச்சல் பாதிப்புதென்னை
ShareTweetSendShare
Previous Post

சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து : பலி எண்ணிக்கை 6 ஆக அதிகரிப்பு!

Next Post

பாசிச ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம் : நயினார் நாகேந்திரன் உறுதி!

Related News

ஜெர்மனி உதவியுடன் அதிநவீன நீர் மூழ்கி கப்பல்களை தயாரிக்கும் பணி தீவிரம் : கடற்படை பலத்தை பெருக்கும் இந்தியா!

சைபர் நிதி மோசடி செய்யும் 1, 277 சமூக ஊடக பக்கங்கள் முடக்கம்!

தீபாவளி பண்டிகை – தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு!

தீபாவளிக்கு தயாராகும் சிறுதானிய பலகாரங்கள் – சிறப்பு தொகுப்பு!

“இட்லி கடை” திரைப்படம் நடிகர் தனுஷை ஓர் இயக்குநராக உயர்த்தியுள்ளது – அண்ணாமலை பாராட்டு!

மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

“அமிர்தவர்ஷம் 72” கொண்டாட்டம் – மாணவர்களை கவர்ந்த கண்காட்சி : சிறப்பு தொகுப்பு!

மகாராஷ்டிரா முதல்வர் முன்னிலையில் 60 நக்சல்கள் சரண்!

தீபாவளி பண்டிகை – டெல்லியில் பசுமை பட்டாசு வெடிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி!

இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு மீண்டும் தபால் பார்சல் சேவை தொடக்கம்!

தமிழகத்தில் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் புதிய முதலீடாக ₹15,000 கோடி வருகிறதா, இல்லையா? – நயினார் நாகேந்திரன்

15 நாட்களில் குடிநீர் குழாய் இணைப்பு வாக்குறுதி என்ன ஆனது? – நயினார் நாகேந்திரன் கேள்வி

கரூரில் அதிமுகவுக்கு அனுமதி மறுக்கப்பட்ட இடத்தில் தவெகவுக்கு அனுமதி – இபிஎஸ்

கரூர் துயர சமபவத்திற்கு காவல்துறையின் கவனக்குறைவே காரணம் – பேரவையில் நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

கரூர் விவகாரத்தில் சிபிஐ விசாரணை மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் – வானதி சீனிவாசன்

சட்டப்பேரவைக்கு கருப்பு பட்டை அணிந்து சென்ற அதிமுக உறுப்பினர்களை சிறைவாசிகளோடு ஒப்பீடு – அமைச்சர் ரகுபதிக்கு கண்டனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies