RTI-ல் வெளியான அதிர்ச்சி தகவல் : 10,000 ஏக்கர் பஞ்சமி நிலம் ஆக்கிரமிப்பு!
Jan 18, 2026, 04:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

RTI-ல் வெளியான அதிர்ச்சி தகவல் : 10,000 ஏக்கர் பஞ்சமி நிலம் ஆக்கிரமிப்பு!

Murugesan M by Murugesan M
Jul 13, 2025, 09:05 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவையில் மட்டும் சுமார் பத்தாயிரம் ஏக்கர் பஞ்சமி நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருப்பதாகத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்டுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  கேரளா, கர்நாடக மாநிலங்களைப் பின்பற்றி தமிழகத்திலும் பஞ்சமி நில பாதுகாப்புச் சட்டத்தை இயற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தாழ்த்தப்பட்ட, பட்டியலின மக்களின் முன்னேற்றத்திற்காக ஆயிரத்து 891 ஆம் ஆண்டு இந்தியாவில் ஆட்சிபுரிந்த பிரிட்டிஷ் அரசால் நிலம் வழங்கப்பட்டது. அப்படி வழங்கப்பட்ட நிலங்கள் பஞ்சமி நிலம், தீர்வை நிலம், கண்டிசன் நிலம் என பல்வேறு பெயர்களில் வழங்கப்பட்டன.

அத்தகைய பஞ்சமி நிலங்களைப் பட்டியலின சமூகத்தினரைத் தவிர்த்து வேறு எந்த சமூகத்தினரும் உரிமை கோர முடியாத அளவிற்கு அந்த காலத்திலேயே சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

பட்டியலின மக்களுக்காகத் தமிழகம் முழுவதும் பஞ்சமி நிலங்கள் வழங்கப்பட்ட நிலையில், கோவையில் மட்டும் அத்தகைய நிலங்கள் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் பெருநிறுவனங்களின் ஆக்கிரமிப்பில் இருப்பதைத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல் உறுதிப்படுத்தியுள்ளது.

கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் பஞ்சமி நிலங்களைப் பாதுகாக்கத் தனிச்சட்டம் இயற்றப்பட்டுள்ள நிலையில் தமிழக அரசு அச்சட்டத்தை இயற்றத் தயங்குவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சமீபத்தில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தாழ்த்தப்பட்டோர் ஆணைய தலைவர் நீதியரசர் தமிழ்வாணன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பஞ்சமி நிலங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் தவறான தகவலை அளித்திருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.

பத்தாயிரம் ஏக்கர் பரப்பளவில் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் நிலையில், நான்காயிரம் ஏக்கர் மட்டுமே ஆக்கிரமிப்பில் இருப்பதாக மாவட்ட நிர்வாகம் கூறியிருப்பது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது

பட்டியலின மக்களுக்கு வழங்கப்பட்ட பஞ்சமி நிலங்கள் அவரது வாரிசுதாரர்களிடம் இருக்கிறதா என்ற ஆய்வு நடத்திய போது தான் அந்நிலங்களில் பெரும்பாலானவை ஆக்கிரமிப்பில் இருப்பதே தெரியவந்துள்ளது.

எத்தனையோ வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டங்கள் தமிழகத்தில் இயற்றப்பட்டுள்ள நிலையில், பட்டியலின மக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு பஞ்சமி நிலைச்சட்டத்தை இயற்றத் தமிழக அரசு முன்வர வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது.

Tags: 000 acres of Panchami land encroached uponRTI-ல் வெளியான அதிர்ச்சி தகவல்000 ஏக்கர் பஞ்சமி நிலம்10tamil nadu news todaytn news todayShocking information revealed in RTI: 10
ShareTweetSendShare
Previous Post

உக்ரைனுக்கு எதிரான போர் : அமெரிக்கா இரட்டை வேடம் – ரஷ்யாவிற்கு உதவியது அம்பலம்!

Next Post

திருப்புவனம் அஜித்குமார் கொலை வழக்கு – இன்று மதுரை வருகின்றனர் சிபிஐ அதிகாரிகள்!

Related News

காங்கிரஸ், திமுக இடையே நிலையான நம்பிக்கை இல்லை – தமிழிசை செளந்தரராஜன்

நிபா வைரஸ் அச்சமடைய வேண்டாம் – சுகாதாரத்துறை!

NDA கூட்டணியின் பிரச்சாரத்தை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி!

ஜல்லிக்கட்டில் திமுகவின் தலையீடு – காளை உரிமையாளர்கள் குற்றச்சாட்டு

அழகர் பெருமாள் கோயிலில் வாழைப்பழங்களை சூறை எறியும் விழா!

பல்லாவரம் காவல் நிலைய பொங்கல் கொண்டாட்டத்தின் போது நடனமாடிய போலீசார் இடமாற்றம் உத்தரவு ரத்து!

Load More

அண்மைச் செய்திகள்

காங்கிரஸ் நாட்டின் நம்பிக்கையை இழந்துவிட்டது – பிரதமர் மோடி

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

ரிஷிகேஷ் பற்றி வெளிநாட்டு பெண் இன்ஸ்டா-வில் நெகிழ்ச்சி பதிவு!

அமெரிக்காவுக்கு இந்தியா கொடுத்த பதிலடி – அதிர்ச்சியில் டிரம்ப்!

அமேசான் காடுகளில் வாழும் அரிதான பழங்குடியின மக்களின் புதிய வீடியோ வெளியாகியுள்ளது

பொற்கோயில் குளத்தில் இஸ்லாமிய இளைஞர் அதிர்ச்சி செயல் -வருத்துவம் தெரிவித்து மன்னிப்பு கேட்ட வீடியோ வைரல்!

சீனாவில் பரவும் நோரா வைரஸ் -மாணவர்கள் பாதிப்பு

வத்தலகுண்டு அருகே வாழைப்பழம் சூறை எறியும் விழா கோலாகலம்!

30 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் – மலரும் நினைவுகளை பகிர்ந்து ஆனந்தம்!

அனுமன் சிலையை 36 மணி நேரத்திற்கும் மேலாக சுற்றி வந்த தெரு நாய்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies