திமுக ஆட்சியில் மடாதிபதிகளுக்கும், சமயப் பெரியோர்களுக்கும் பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருகிறது - நயினார் நாகேந்திரன்
Jan 18, 2026, 09:00 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திமுக ஆட்சியில் மடாதிபதிகளுக்கும், சமயப் பெரியோர்களுக்கும் பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருகிறது – நயினார் நாகேந்திரன்

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 20, 2025, 10:57 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திமுக ஆட்சியில் மடாதிபதிகளுக்கும், சமயப் பெரியோர்களுக்கும் பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருவதாக தமிழக பாஜக மாநில தலைவர்  நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், காவல்துறை நாளை மதுரை ஆதீனத்திடம் விசாரணை நடத்த வருகிறார்கள் என்ற தகவல் கிடைத்தது. தொடர்ந்து மத குருமார்களையும், ஆன்மீகப் பெரியோர்களையும் பல சொல்ல முடியாத இன்னல்களுக்கு உட்படுத்தி வருகிறது இந்தத் திமுக அரசு என தெரிவித்துள்ளார்.

இந்த ஆட்சியில் எந்தவொரு தனி மனிதனைப் போலவே, மடாதிபதிகளுக்கும், சமயப் பெரியோர்களுக்கும் பாதுகாப்பற்ற சூழலே நிலவி வருகிறது. தற்போது விசாரணை என்ற பெயரில் மதுரை ஆதீனத்தையும் தொந்தரவு செய்து வருகிறார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

தமிழ்நாடு காவல்துறையை வைத்து. 70 வயதைக் கடந்த போற்றுதலுக்குரிய மதுரை ஆதீனம் ஶ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் உடல்நலம் குன்றியுள்ள நிலையில் இரண்டு நாட்கள் முன்பே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சற்று குணமடைந்து திரும்பியுள்ளார்.

அதுவும் இந்த ஞாயிற்றுக்கிழமை நாளில் கூட விசாரணை நடத்தத் தேடி வருவதெல்லாம் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இந்த அரசு ஆன்மீக விவகாரத்தில் செய்யும் அத்துமீறல்களையும், இந்து விரோத செயல்களையும் தட்டிக்கேட்கும் சமயப்பெரியவர்களுக்குத் தொடர்ச்சியாக ஏதாவதொரு மன அழுத்தத்தை  கொடுத்து வருகிறது என்பதைப் பார்க்கிறோம் என அவர் தெரிவித்துள்ளார்.

ஆகவே, இனியும் காவல்துறையின் அத்துமீறல்களை தமிழக பாஜக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது, காவல் துறையின் நடவடிக்கைகளைக் கண்காணித்து வருவோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மதுரையில் தமிழக பாஜகவின் மாவட்டத் தலைவர்கள் மதுரை ஆதீனத்தின் பக்கபலமாக  அங்கே இருப்பார்கள் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.

நாகூரில் நடைபெறவிருக்கும் விவசாய பெருமக்களுக்கு ஆதரவான போராட்டத்தை முடித்துக்கொண்டு நானும் அங்கே செல்லவிருக்கிறேன். ஞானசம்பந்தர் காலம் முதல் புகழோடும், கீர்த்தியோடும் விளங்கி வரும் மதுரை ஆதீனத்தின் மாண்பைக் காக்க என்றும் பாஜக துணை நிற்கும் என்றும் நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

 

Tags: DMK governmentDMK regimeTamil Nadu BJP state president Nainar NagendranMadurai Aadeena enquiry
ShareTweetSendShare
Previous Post

நடப்பாண்டில் 3-வது முறையாக முழு கொள்ளளவை எட்டிய மேட்டூர் அணை!

Next Post

குற்றங்களைத் தான் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால்,  குப்பைகளைக் கூட தடுக்க இயலாதா? – நயினார் நாகேந்திரன்

Related News

‘ஆப்ரேஷன் சிந்தூர்’ பதற்றம் – USA உறவை மீட்டெடுக்க பாக். எடுத்த முயற்சிகள் அம்பலம்

ஈரானில் அரங்கேறும் பயங்கரம் – கூலிப்படைகள் மூலம் மக்கள் கொன்று குவிப்பு?

திமுகவா? தவெகவா? – உச்சகட்ட குழப்பத்தில் காங்கிரஸ்

காங்கிரஸ், திமுக இடையே நிலையான நம்பிக்கை இல்லை – தமிழிசை செளந்தரராஜன்

நிபா வைரஸ் அச்சமடைய வேண்டாம் – சுகாதாரத்துறை!

NDA கூட்டணியின் பிரச்சாரத்தை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி!

Load More

அண்மைச் செய்திகள்

காங்கிரஸ் நாட்டின் நம்பிக்கையை இழந்துவிட்டது – பிரதமர் மோடி

ஜல்லிக்கட்டில் திமுகவின் தலையீடு – காளை உரிமையாளர்கள் குற்றச்சாட்டு

அழகர் பெருமாள் கோயிலில் வாழைப்பழங்களை சூறை எறியும் விழா!

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

ரிஷிகேஷ் பற்றி வெளிநாட்டு பெண் இன்ஸ்டா-வில் நெகிழ்ச்சி பதிவு!

பல்லாவரம் காவல் நிலைய பொங்கல் கொண்டாட்டத்தின் போது நடனமாடிய போலீசார் இடமாற்றம் உத்தரவு ரத்து!

அமெரிக்காவுக்கு இந்தியா கொடுத்த பதிலடி – அதிர்ச்சியில் டிரம்ப்!

அமேசான் காடுகளில் வாழும் அரிதான பழங்குடியின மக்களின் புதிய வீடியோ வெளியாகியுள்ளது

பொற்கோயில் குளத்தில் இஸ்லாமிய இளைஞர் அதிர்ச்சி செயல் -வருத்துவம் தெரிவித்து மன்னிப்பு கேட்ட வீடியோ வைரல்!

சீனாவில் பரவும் நோரா வைரஸ் -மாணவர்கள் பாதிப்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies