ஏழைகளின் ஆப்பிளுக்கு சோதனை : நோய் தாக்குதலால் விளைச்சல் பாதிப்பு!
Aug 24, 2025, 06:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஏழைகளின் ஆப்பிளுக்கு சோதனை : நோய் தாக்குதலால் விளைச்சல் பாதிப்பு!

Web Desk by Web Desk
Jul 21, 2025, 11:19 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஏழைகளின் ஆப்பிள் என அழைக்கப்படும் பேரிக்காய் சாகுபடி புதிய வகை நோய்த்தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். கொடைக்கானலைச் சுற்றியுள்ள கிராமங்களில் நடைபெறும் பேரிக்காய் சாகுபடி குறித்தும், அதில் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகள் குறித்தும் இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கோடை சீசன் தொடங்கியிருக்கும் நிலையில், ஏழைகளின் ஆப்பிள் என்று அழைக்கப்படும் பேரிக்காய் சீசனும் தொடங்கியுள்ளது. மலைப்பிரதேசங்களில் மட்டுமே அதிகமாக விளையும் பேரிக்காய் கொடைக்கானல் பகுதியின் முக்கிய விவசாயமாக விளங்கி வருகிறது.

பள்ளங்கி, வில்பட்டி, பிரகாசபுரம், செண்பகனூர், பெரும்பல்லம் என பல்வேறு பகுதிகளில் பேரிக்காய் சாகுபடியே பிரதான விவசாயமாக விளங்கி வருகிறது. அத்தகைய பேரிக்காய் விவசாயம் புதிய வகை நோய்த்தாக்குதலுக்கு உள்ளாகி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

நாட்டுப் பேரி, ஊட்டி பேரி, வால் பேரி எனப் பேரிக்காய்களிலும் பல வகை உண்டு. பல்வேறு வகைகளில் சாகுபடி செய்யப்படும் பேரிக்காய்களுக்கு வேளாண்மைத்துறை சார்ந்து எந்தவித ஆலோசனையும் கொடுப்பதில்லை என்ற புகார் எழுந்துள்ளது. அதன் காரணமாகப் பேரிக்காய், இலைகள் மற்றும் மரத்தின் கிளைகளில் புதுவகை நோய்த்தாக்குதல் ஏற்பட்டிருப்பதால் சாகுபடி பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு கிலோ 50 முதல் 60 ரூபாய் வரை விற்கப்பட்ட பேரிக்காய் நடப்பாண்டில் 40 ரூபாய்க்குக் கீழ் சென்றிருப்பதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்

கடந்த ஆண்டு சிறிதளவு தென்பட்ட நோய்த்தாக்குதல் நடப்பாண்டில் மரம் முழுவதும் பரவியிருப்பதால் விளைச்சல் பெருமளவு பாதிக்கப்பட்டு விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.

அதோடு அடுத்தடுத்த ஆண்டுகளில் பேரிக்காய் விவசாயம் நடைபெறுமா என்ற சந்தேகமும் விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது. அழியும் தருவாயில் இருக்கும் பேரிக்காய் விவசாயத்தைப் பாதுகாக்கவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திடவும், மற்ற விவசாயத்திற்கு வழங்கப்படும் ஆலோசனைகளைப் போலப் பேரிக்காய் சாகுபடிக்கும் வேளாண்மைத்துறை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது

Tags: today newsTesting of poor people's apples: Yield affected by disease attackபேரிக்காய் சாகுபடிபேரிக்காய்ஏழைகளின் ஆப்பிள்
ShareTweetSendShare
Previous Post

கிட்னி திருட்டு சம்பவத்தில் திமுகவினர் நடத்தும் மருத்துவமனைகளுக்கு தொடர்பு – முதல்வர் மௌனம் காப்பது ஏன் என அண்ணாமலை கேள்வி!

Next Post

தொழில்நுட்ப கோளாறு – 40 நிமிடம் வானில் வட்டமடித்த விமானம்!

Related News

பெட்ரோல், டீசலை ஓரம் கட்டுங்க : 100% எத்தனாலில் இயங்கும் வாகனங்களை அறிமுகப்படுத்துங்க – சிறப்பு கட்டுரை!!

தென்மேற்கு பருவமழை இயல்பை விட 9 % அதிகமாக பெய்துள்ளது – வானிலை ஆய்வு மையம்!

ரயில் நிலையத்தில் 6000 உடல்கள் : மடிந்த ராணுவ வீரர்களின் அடையாளம் காண திணறும் உக்ரைன் : சிறப்பு கட்டுரை!!

மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியமே பெண் துப்புறவு பணியாளர் உயிரிழப்புக்கு காரணம் – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

ட்ரம்ப் முயற்சி தோல்வி எதிரொலி : உக்ரைன் மீது உக்கிரமாக தாக்குதல் நடத்தும் ரஷ்யா – சிறப்பு கட்டுரை!

பிரதமர் மோடியின் வழிகாட்டுதல் காரணமாகவே சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற்றது – இஸ்ரோ தலைவர் நாராயணன்

Load More

அண்மைச் செய்திகள்

தனியார் கட்டிடங்களில் அங்கன்வாடி மையங்கள் – குழந்தைகளின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு? என அண்ணாமலை கேள்வி!

ஆட்சியாளர்களின் அலட்சியத்தால் பலியாகும் அப்பாவி உயிர்கள் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

விண்வெளித் துறையில் இந்தியாவின் முன்னேற்றம் சாதாரண குடிமக்களின் வாழ்க்கையை எளிதாக்குகிறது – பிரதமர் மோடி

பெரம்பலூர் அருகே 9 குழந்தைகளை கடித்து குதறிய தெரு நாய்கள்!

நெல்லை பாஜக பூத் பொறுப்பாளர்கள் மாநாட்டில் நாற்காலிகளை வரிசையாக அடுக்கி வைத்த பாஜகவினர் – குவிகிறது பாராட்டு!

உதகை – மேட்டுப்பாளையம் சிறப்பு மலை ரயில் சேவை – இன்று முதல் தொடக்கம்!

தர்மஸ்தலா விவகாரத்தை வழிநடத்தியது யார்? – அண்ணாமலை அடுக்கடுக்கான கேள்வி!

வாலஜாபேட்டை அருகே பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்து!

தர்மஸ்தலா உடல்கள் புதைப்பு விவகாரம் – புகார் அளித்தவரை கைது செய்தது விசாரணைக்குழு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies