ஏழைகளின் ஆப்பிளுக்கு சோதனை : நோய் தாக்குதலால் விளைச்சல் பாதிப்பு!
Sep 13, 2026, 02:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஏழைகளின் ஆப்பிளுக்கு சோதனை : நோய் தாக்குதலால் விளைச்சல் பாதிப்பு!

Murugesan M by Murugesan M
Jul 21, 2025, 11:19 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஏழைகளின் ஆப்பிள் என அழைக்கப்படும் பேரிக்காய் சாகுபடி புதிய வகை நோய்த்தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். கொடைக்கானலைச் சுற்றியுள்ள கிராமங்களில் நடைபெறும் பேரிக்காய் சாகுபடி குறித்தும், அதில் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகள் குறித்தும் இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கோடை சீசன் தொடங்கியிருக்கும் நிலையில், ஏழைகளின் ஆப்பிள் என்று அழைக்கப்படும் பேரிக்காய் சீசனும் தொடங்கியுள்ளது. மலைப்பிரதேசங்களில் மட்டுமே அதிகமாக விளையும் பேரிக்காய் கொடைக்கானல் பகுதியின் முக்கிய விவசாயமாக விளங்கி வருகிறது.

பள்ளங்கி, வில்பட்டி, பிரகாசபுரம், செண்பகனூர், பெரும்பல்லம் என பல்வேறு பகுதிகளில் பேரிக்காய் சாகுபடியே பிரதான விவசாயமாக விளங்கி வருகிறது. அத்தகைய பேரிக்காய் விவசாயம் புதிய வகை நோய்த்தாக்குதலுக்கு உள்ளாகி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

நாட்டுப் பேரி, ஊட்டி பேரி, வால் பேரி எனப் பேரிக்காய்களிலும் பல வகை உண்டு. பல்வேறு வகைகளில் சாகுபடி செய்யப்படும் பேரிக்காய்களுக்கு வேளாண்மைத்துறை சார்ந்து எந்தவித ஆலோசனையும் கொடுப்பதில்லை என்ற புகார் எழுந்துள்ளது. அதன் காரணமாகப் பேரிக்காய், இலைகள் மற்றும் மரத்தின் கிளைகளில் புதுவகை நோய்த்தாக்குதல் ஏற்பட்டிருப்பதால் சாகுபடி பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு கிலோ 50 முதல் 60 ரூபாய் வரை விற்கப்பட்ட பேரிக்காய் நடப்பாண்டில் 40 ரூபாய்க்குக் கீழ் சென்றிருப்பதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்

கடந்த ஆண்டு சிறிதளவு தென்பட்ட நோய்த்தாக்குதல் நடப்பாண்டில் மரம் முழுவதும் பரவியிருப்பதால் விளைச்சல் பெருமளவு பாதிக்கப்பட்டு விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.

அதோடு அடுத்தடுத்த ஆண்டுகளில் பேரிக்காய் விவசாயம் நடைபெறுமா என்ற சந்தேகமும் விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது. அழியும் தருவாயில் இருக்கும் பேரிக்காய் விவசாயத்தைப் பாதுகாக்கவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திடவும், மற்ற விவசாயத்திற்கு வழங்கப்படும் ஆலோசனைகளைப் போலப் பேரிக்காய் சாகுபடிக்கும் வேளாண்மைத்துறை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது

Tags: ஏழைகளின் ஆப்பிள்today newsTesting of poor people's apples: Yield affected by disease attackபேரிக்காய் சாகுபடிபேரிக்காய்
Share
Tweet
SendShare
Previous Post

கிட்னி திருட்டு சம்பவத்தில் திமுகவினர் நடத்தும் மருத்துவமனைகளுக்கு தொடர்பு – முதல்வர் மௌனம் காப்பது ஏன் என அண்ணாமலை கேள்வி!

Next Post

தொழில்நுட்ப கோளாறு – 40 நிமிடம் வானில் வட்டமடித்த விமானம்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies