சோழர்களின் ஆட்சியே ஜனநாயகத்தின் தாய் : ராஜராஜ சோழன் ராஜேந்திர சோழனுக்கு பிரமாண்ட சிலை!
Aug 24, 2025, 09:40 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சோழர்களின் ஆட்சியே ஜனநாயகத்தின் தாய் : ராஜராஜ சோழன் ராஜேந்திர சோழனுக்கு பிரமாண்ட சிலை!

Web Desk by Web Desk
Jul 28, 2025, 11:47 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் ராஜராஜ சோழனுக்கும், ராஜேந்திர சோழனுக்கும் பிரமாண்ட சிலை நிறுவப்படும் என்று அறிவித்திருக்கிறார் பிரதமர் மோடி. சோழ சாம்ராஜ்ஜியம் பாரதத்தின் பொற்காலங்களில் ஒன்று எனவும் புகழாரம் சூட்டினார்.

ராஜேந்திர சோழனின் 1005வது பிறந்தநாள் விழா. கங்கை கொண்ட சோழபுரத்தைக் கட்டத் துவங்கியதன் ஆயிரமாவது ஆண்டு விழா, தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மீது படையெடுத்ததன் ஆயிரமாவது ஆண்டு விழா என முப்பெரும் விழா கங்கை கொண்ட சோழபுரத்தில் நடைபெற்றது. இதில் தமிழக பாரம்பரிய உடையான வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை அணிந்தபடி கலந்து கொண்ட பிரதமர் மோடி, வணக்கம் சோழ மண்டலம் எனக் கூறி தனது உரையைத் தொடங்கினார்.

இளையராஜாவின் இசையில் ஒலித்த சிவபக்தி பாடல்களைக் கேட்டுப் பரவசமடைந்ததாகப் பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார். இந்த இடத்தில், எனது சகாவான இளையராஜாவின் சிவபக்தி, இந்த மழைக்காலத்தில் மிகவும் பக்தி நிரம்பியதாக இருந்தாகக் கூறினார்.

சோழ சாம்ராஜ்யத்தின் வரலாறும், பாரம்பரியமும் பாரதத்தின் மெய்யான பிரகடனங்கள் என்று கூறிய பிரதமர் மோடி, சோழ சாம்ராஜ்யத்தின் காலகட்டம் பாரதத்தின் பொற்காலங்களில் ஒன்று என்று தெரிவித்தார். பல நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே சோழ சாம்ராஜ்யத்தில் குடவோலை முறை வாயிலாக ஜனநாயக வழிமுறைப்படி தேர்தல்கள் நடந்ததைக் குறிப்பிட்ட அவர், சோழர்களின் ஆட்சியே ஜனநாயகத்தின் தாய் என்றும் பெருமிதத்துடன் கூறினார்.

சோழப் பேரரசர்கள் பாரதத்தின் கலாச்சார சிற்பிகள் என்று கூறிய பிரதமர் மோடி, அதனால்தான் இன்றும்கூட சைவ பாரம்பரியத்தின் உயிர்ப்புடைய மையங்களில் தமிழ்நாடு மிகவும் முக்கியமானதாகத் திகழ்வதாகத் தெரிவித்தார். திருமூலர் உரைத்த அன்பே சிவம் என்ற கோட்பாட்டை கடைப்பிடித்தால், பெரும்பாலான சங்கடங்கள் தாமாகவே தீர்ந்துவிடும் என்றும் கூறினார். இதைத்தான் பாரதம் ஒரே உலகம், ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்ற அடிப்படையில் முன்னெடுத்துச் செல்வதாகவும் குறிப்பிட்டார்.

ராஜராஜ சோழனும், ராஜேந்திர சோழனும் சக்தி வாய்ந்த கடற்படையை உருவாக்கியதைக் குறிப்பிட்ட பிரதமர் மோடி, பாரதத்தின் வலிமையை வெளிப்படுத்தியது ஆப்ரேஷன் சிந்தூர் என்று கூறினார். பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டால் பதிலடி எப்படி இருக்கும் என்பதற்கு ஆப்ரேஷன் சிந்தூர் உதாரணம் என்றும் தெரிவித்தார்.

ராஜேந்திர சோழன் கங்கைகொண்ட சோழபுரத்தை நிர்மாணம் செய்தாலும் கூட, அதன் கோபுரத்தைத் தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் ஆலயக் கோபுரத்தை விடக் குறைவானதாக வைத்ததற்குத் தந்தை மீது கொண்டு பற்றுதலே காரணம் என்றும் கூறினார்.

தமிழ்நாட்டில் ராஜராஜ சோழன், அவருடைய மைந்தன் முதலாம் ராஜேந்திரசோழனுடைய பிரமாண்ட உருவச்சிலை நிறுவப்படும் என்றும் பிரதமர் மோடி உறுதியளித்தார்.

விழாவில் மத்திய கலாசாரத்துறை அமைச்சர் ஜிதேந்திரசிங் ஷெகாவத், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சிவசங்கர்,  எம்.பி.,  திருமாவளவன்,  தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

Tags: தமிழகத்தில் ராஜராஜ சோழனுக்கும்ராஜேந்திர சோழனுக்கும் பிரமாண்ட சிலைபிரதமர் மோThe rule of the Cholas was the mother of democracy: A grand statue of Rajaraja Chola and Rajendra Chola
ShareTweetSendShare
Previous Post

நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு காளியண்ணன் பெயர் வைக்க வேண்டும் – அண்ணாமலை

Next Post

பிரதமரின் நிகழ்ச்சிக்கு பிறகு கங்கைகொண்ட சோழபுரம் கோயிலில் அலைமோதும் பக்தர் கூட்டம்!

Related News

புதிய உச்சத்தில் நட்புறவு : இந்திய ஏற்றுமதிக்கு ரஷ்யா க்ரீன் சிக்னல் – சிறப்பு கட்டுரை!

பெட்ரோல், டீசலை ஓரம் கட்டுங்க : 100% எத்தனாலில் இயங்கும் வாகனங்களை அறிமுகப்படுத்துங்க – சிறப்பு கட்டுரை!!

தென்மேற்கு பருவமழை இயல்பை விட 9 % அதிகமாக பெய்துள்ளது – வானிலை ஆய்வு மையம்!

ரயில் நிலையத்தில் 6000 உடல்கள் : மடிந்த ராணுவ வீரர்களின் அடையாளம் காண திணறும் உக்ரைன் : சிறப்பு கட்டுரை!!

மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியமே பெண் துப்புறவு பணியாளர் உயிரிழப்புக்கு காரணம் – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

ட்ரம்ப் முயற்சி தோல்வி எதிரொலி : உக்ரைன் மீது உக்கிரமாக தாக்குதல் நடத்தும் ரஷ்யா – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

ரணில் விக்ரமசிங்கே கைது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை – சசிதரூர் கண்டனம்!

ராகுல் காந்தி காலிஸ்தான்களுடன் இணைந்து செயல்படுகிறார் – மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

பிரதமர் மோடியின் வழிகாட்டுதல் காரணமாகவே சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற்றது – இஸ்ரோ தலைவர் நாராயணன்

தனியார் கட்டிடங்களில் அங்கன்வாடி மையங்கள் – குழந்தைகளின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு? என அண்ணாமலை கேள்வி!

ஆட்சியாளர்களின் அலட்சியத்தால் பலியாகும் அப்பாவி உயிர்கள் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

விண்வெளித் துறையில் இந்தியாவின் முன்னேற்றம் சாதாரண குடிமக்களின் வாழ்க்கையை எளிதாக்குகிறது – பிரதமர் மோடி

பெரம்பலூர் அருகே 9 குழந்தைகளை கடித்து குதறிய தெரு நாய்கள்!

நெல்லை பாஜக பூத் பொறுப்பாளர்கள் மாநாட்டில் நாற்காலிகளை வரிசையாக அடுக்கி வைத்த பாஜகவினர் – குவிகிறது பாராட்டு!

உதகை – மேட்டுப்பாளையம் சிறப்பு மலை ரயில் சேவை – இன்று முதல் தொடக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies