ராகுல் காந்திக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்!
Jan 14, 2026, 09:39 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ராகுல் காந்திக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்!

Murugesan M by Murugesan M
Aug 4, 2025, 01:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சீனா உடனான மோதல் விவகாரம் தொடர்பாக ராகுல் காந்தி எழுப்பிய சந்தேகங்களுக்கு உச்சநீதிமன்றம் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளது..

இந்தியா – சீனா இடையிலான கள்வான் பள்ளத்தாக்கு மோதல் குறித்து காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கேள்விகளை எழுப்பியிருந்தார்.

இதனைத்தொடர்ந்து, இந்திய ராணுவத்தை அவதூறாகப் பேசியதாக லக்னோ நீதிமன்றத்தில் ராகுல் காந்திக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு விசாரணைக்குத் தடைவிதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் ராகுல் காந்தி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி திபான்கர் தத்தா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது ராகுல் காந்தி தரப்பில், இந்தியா எல்லைக்குள்ளான ஆக்கிரமிப்பு குறித்து மக்களவை எதிர்க்கட்சி தலைவர் பேசக்கூடாது என்று எப்படி கூற முடியும் என வாதம் முன் வைக்கப்பட்டது.

இதற்குப் பதிலளித்த நீதிபதிகள், ராகுல் காந்தி தனது கருத்தை நாடாளுமன்றத்தில் பதிவு செய்திருக்கலாம். மாறாக சமூக வலைத்தளங்களில் பதிவிடுகிறீர்களே?.. இப்படிச் செய்யலாமா? எனவும் வினவினர்.

நாட்டின் மீது உண்மையான பற்று இருந்தால் இப்படி கேள்வி எழுப்ப மாட்டீர்கள் என்றும்,  உண்மையான இந்தியராக இருந்தால் இப்படிப் பேச மாட்டீர்கள் எனவும் சாடினர்.

ஆதாரம் இல்லாமல் எதுவும் பேசாதீர்கள் என அறிவுறுத்திய நீதிபதிகள், 2 ஆயிரம் கிலோ மீட்டர் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதாக எந்த ஆதாரத்தில் சொல்கிறீர்கள் எனவும் கேள்வி எழுப்பினர்.

ஒரு உண்மையான இந்தியர், எல்லை தொடர்பான விவகாரத்தை எடுத்தோம் கவிழ்த்தோம் எனப் பேசமாட்டார் எனக்கூறிய நீதிபதிகள், கருத்துச் சுதந்திரம் என்பதற்காக எல்லாவற்றையும் தகுந்த ஆதாரங்கள் இல்லாமல் பேச முடியாது எனவும் கடும் அதிருப்தி தெரிவித்தனர்.

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக கீழமை நீதிமன்றத்தில் நடைபெறும் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்த நீதிபதிகள், எதிர் மனுதாரர்கள் பதில் அளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டனர்.

Tags: Congressஉச்சநீதிமன்றம்ராகுல் காந்திராகுல் காந்திக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்Supreme Court strongly condemns Rahul Gandhi
ShareTweetSendShare
Previous Post

ஸ்பைடர் மேன் 4 ஆம் பாகத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் வெளியீடு!

Next Post

தஞ்சையில் மேயரை கண்டித்து திமுக உறுப்பினர்கள் வாக்குவாதம்!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

உலக நலனுக்காக பிரிக்ஸ் நாடுகளின் திறனை ஒன்றிணைக்க இந்தியாவின் தலைமைத்துவம் முயற்சிக்கும்! – ஜெய்சங்கர்

ஜப்பானிய வாள்வீச்சு கலையான கென்ஜுட்சுவை கற்ற பவன் கல்யாண் – குவியும் பாராட்டு!

இந்தியாவை தாக்க ஆயிரத்திற்கும் மேற்பட்ட தற்கொலை படையினர் தயார் – மசூத் அசார் மிரட்டல்!

Load More

அண்மைச் செய்திகள்

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies