ராகுல் காந்திக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்!
Mar 15, 2026, 10:28 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ராகுல் காந்திக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்!

Murugesan M by Murugesan M
Aug 4, 2025, 01:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சீனா உடனான மோதல் விவகாரம் தொடர்பாக ராகுல் காந்தி எழுப்பிய சந்தேகங்களுக்கு உச்சநீதிமன்றம் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளது..

இந்தியா – சீனா இடையிலான கள்வான் பள்ளத்தாக்கு மோதல் குறித்து காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கேள்விகளை எழுப்பியிருந்தார்.

இதனைத்தொடர்ந்து, இந்திய ராணுவத்தை அவதூறாகப் பேசியதாக லக்னோ நீதிமன்றத்தில் ராகுல் காந்திக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு விசாரணைக்குத் தடைவிதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் ராகுல் காந்தி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி திபான்கர் தத்தா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது ராகுல் காந்தி தரப்பில், இந்தியா எல்லைக்குள்ளான ஆக்கிரமிப்பு குறித்து மக்களவை எதிர்க்கட்சி தலைவர் பேசக்கூடாது என்று எப்படி கூற முடியும் என வாதம் முன் வைக்கப்பட்டது.

இதற்குப் பதிலளித்த நீதிபதிகள், ராகுல் காந்தி தனது கருத்தை நாடாளுமன்றத்தில் பதிவு செய்திருக்கலாம். மாறாக சமூக வலைத்தளங்களில் பதிவிடுகிறீர்களே?.. இப்படிச் செய்யலாமா? எனவும் வினவினர்.

நாட்டின் மீது உண்மையான பற்று இருந்தால் இப்படி கேள்வி எழுப்ப மாட்டீர்கள் என்றும்,  உண்மையான இந்தியராக இருந்தால் இப்படிப் பேச மாட்டீர்கள் எனவும் சாடினர்.

ஆதாரம் இல்லாமல் எதுவும் பேசாதீர்கள் என அறிவுறுத்திய நீதிபதிகள், 2 ஆயிரம் கிலோ மீட்டர் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதாக எந்த ஆதாரத்தில் சொல்கிறீர்கள் எனவும் கேள்வி எழுப்பினர்.

ஒரு உண்மையான இந்தியர், எல்லை தொடர்பான விவகாரத்தை எடுத்தோம் கவிழ்த்தோம் எனப் பேசமாட்டார் எனக்கூறிய நீதிபதிகள், கருத்துச் சுதந்திரம் என்பதற்காக எல்லாவற்றையும் தகுந்த ஆதாரங்கள் இல்லாமல் பேச முடியாது எனவும் கடும் அதிருப்தி தெரிவித்தனர்.

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக கீழமை நீதிமன்றத்தில் நடைபெறும் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்த நீதிபதிகள், எதிர் மனுதாரர்கள் பதில் அளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டனர்.

Tags: Congressஉச்சநீதிமன்றம்ராகுல் காந்திராகுல் காந்திக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்Supreme Court strongly condemns Rahul Gandhi
ShareTweetSendShare
Previous Post

ஸ்பைடர் மேன் 4 ஆம் பாகத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் வெளியீடு!

Next Post

தஞ்சையில் மேயரை கண்டித்து திமுக உறுப்பினர்கள் வாக்குவாதம்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

வாடகைக்கு விடப்பட்ட தொழிலதிபர் ரத்தன் டாடாவின் வீடு!

ஈரான் இஸ்ரேல் போரால் கடும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வரும் கச்சா எண்ணெய் விலை!

தமிழகத்தில் தேசிய ஹோமியோபதி நிறுவனம் அமைக்க மாநில அரசு ஆர்வம் காட்டவில்லை – மத்திய அமைச்சர் பிரதாப் ராவ் ஜாதவ்

Load More

அண்மைச் செய்திகள்

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies