தீவிரமடையும் தூய்மைப்பணியாளர்கள் போராட்டம் : தேக்கமடையும் குப்பைகளால் நிலவும் சுகாதார சீர்கேடு!
Aug 10, 2025, 11:15 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தீவிரமடையும் தூய்மைப்பணியாளர்கள் போராட்டம் : தேக்கமடையும் குப்பைகளால் நிலவும் சுகாதார சீர்கேடு!

Web Desk by Web Desk
Aug 7, 2025, 07:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை மாநகராட்சியின் தூய்மைப் பணியாளர்களின் தொடர் போராட்டம் காரணமாக நகரம் முழுவதும் குப்பைகள் தேக்கமடைந்துள்ளன. இரவு பகல் பாராமல் சென்னையின் தூய்மையைப் பேணிக்காத்த தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் குறித்தும் அவர்களின் கோரிக்கைகள் குறித்தும் இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில் 10 மண்டலங்களுக்கான தூய்மைப்பணிகள் தனியாருக்குத் தாரைவார்க்கப்பட்டிருக்கிறது. பல்வேறு தரப்பினரின் கடும் எதிர்ப்பை மீறி மீதமுள்ள 5 மண்டலங்களையும் தனியாருக்குத் தாரைவார்க்க முடிவு செய்திருக்கும் சென்னை மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து தூய்மைப் பணியாளர்கள் தொடர் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

தூய்மைப் பணிகளைத் தனியாருக்குத் தாரை வார்க்கும் பட்சத்தில், ஏற்கனவே பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் நிரந்தர தொழிலாளர்களுக்கும், ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் பணிபாதுகாப்பு கேள்விக்குறியாகும் என்ற புகார் எழுந்துள்ளது. அதோடு ஏற்கனவே அரசு நிர்ணயித்திருக்கும் ஊதியத்தைப் பெறவே போராடும் சூழலில் தனியாரிடம் ஊதியம் பெறுவது என்பது சவால் மிகுந்ததாக இருக்கும் எனவும் அவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

தூய்மைப் பணியாளர்களின் தொடர் போராட்டம் காரணமாகச் சென்னையின் முக்கியமான பகுதிகளில் குப்பைகள் தேக்கமடையத் தொடங்கியுள்ளன. ராயபுரம், திருவிக நகர், எழும்பூர், வண்ணாரப்பேட்டை, பெரம்பூர் என பல்வேறு பகுதிகளில் குப்பைகள் மலைபோல குவிந்திருக்கின்றன.

சென்னையில் அடிக்கடி மழை பெய்துவரும் நிலையில், சாலைகளில் குவிந்து கிடக்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு நிலவுவதாகப் பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றன. கொரானா பெருந்தொற்று காலமாக இருந்தாலும் மழை, புயல், வெள்ளம் என இயற்கை பேரிடர்களாக இருந்தாலும் சரி தங்களின் உயிரைப் பொருட்படுத்தாமல் பணியாற்றிய களப்பணியாளர்களின் போராட்டத்தைக் கண்டு கொள்ளாமல் கடந்து செல்வது ஒட்டுமொத்த மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

வருடத்திற்கு ஒரு நாள் தங்களின் அருகில் அமர்ந்து உணவு உண்ணும் முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் தங்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் பணிநிரந்தர கோரிக்கையை நிறைவேற்றித் தர வேண்டும் என தூய்மைப்பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: சென்னை மாநகராட்சிசுகாதார சீர்கேடுSanitation workers' protest intensifies: Health problems due to stagnant garbageதூய்மைப்பணியாளர்கள் போராட்டம்தேக்கமடையும் குப்பை
ShareTweetSendShare
Previous Post

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 7 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

Next Post

11 ஆண்டுக்கு முன்பு மாயமான மலேசிய விமானம் : கருந்துளையில் சிக்கியதா? – ஆய்வாளர்கள் கூறுவது என்ன?

Related News

தீபாவளி, பொங்கல், விநாயகர் சதுர்த்தி வரும்போது தான் மாசு கட்டுப்பாட்டு வாரியம் இருப்பது தெரிகிறது – காடேஸ்வரா சுப்பிரமணியம்

கூட்டணி குறித்து உரிய நேரத்தில் முடிவு – பிரேமலதா விஜயகாந்த்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது  முழு சுதந்திரம் – உபேந்திர திவேதி

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 10 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

இந்தியாவுக்கு 50 % வரிவிதிப்பு : சொந்த நாட்டில் எதிர்ப்பை சந்திக்கும் ட்ரம்ப்!

முடிவுக்கு வருமா உக்ரைன் போர்? : புதினை சந்திக்கும் ட்ரம்ப் உற்றுப் பார்க்கும் உலகம்!

Load More

அண்மைச் செய்திகள்

தேசிய நெடுஞ்சாலை கட்டுமானத்தின் வேகத்தை ஒரு நாளைக்கு 100 கி.மீட்டராக உயர்த்துவதே நோக்கம் – நிதின் கட்கரி

இந்தியாவின் பாதுகாப்பு தளவாட உற்பத்தி ரூ. 1.50 லட்சம் கோடியாக உயர்வு!

புதுச்சேரியில் நடைபெற்ற விசுவ ஹிந்து பரிஷத் மாநில நிர்வாகிகள் கூட்டம் – திமுக அரசை கண்டித்து தீர்மானம்!

பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தியதற்காக ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் – தேர்தல் ஆணையம்

இந்தியாவுக்கு கூடுதல் வரி விதித்தது மாபெரும் தவறு – அமெரிக்க முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன்

போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்படவில்லை – பாகிஸ்தான் பாதுகாப்பு துறை அமைச்சர் கவாஜா ஆசிப் மறுப்பு!

இந்தியா அதிகம் வர்த்தகம் செய்யும் நாடுகள் எவை?

இந்தியா மீதான 50% வரி விதிப்பு : ட்ரம்பின் ஈகோ-தான் காரணமா?

அஞ்சி நடுங்கும் சீனா : இந்தியாவுடன் பிலிப்பைன்ஸ் கை கோர்ப்பது ஏன்?

ஓய்வு பெறும் Cheetah ரக ஹெலிகாப்டர்கள் : 200 நவீன இலகுரக ஹெலிகாப்டர்களை வாங்க இந்திய ராணுவம் டெண்டர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies