75 டன் எடையுள்ள செயற்கைக்கோளை விண்வெளியில் நிலைநிறுத்த, 40 மாடி உயரம் கொண்ட ராக்கெட்டை உருவாக்கி வருவதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்.
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடைபெற்ற பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் இஸ்ரோ தலைவர் நாராயணன் கலந்து கொண்டார்.
அப்போது உரையாற்றிய அவர், டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் உருவாக்கிய முதல் ராக்கெட் 17 டன் எடை கொண்டது என்றும், அது 35 கிலோ எடை கொண்ட செயற்கைக்கோளைத் தாழ்வான பூமி சுற்றுப்பாதையில் செலுத்தும் திறன் கொண்டது எனவும் கூறினார்.
தற்போது 75 டன் எடையுள்ள செயற்கைக்கோளைத் தாழ்வான பூமி சுற்றுப்பாதையில் செலுத்தும் ராக்கெட்டை இஸ்ரோ உருவாக்கி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.