"நாடுதான் முக்கியம் வர்த்தகம் 2ம் பட்சம்தான்" - எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் திட்டவட்டம்!
Jan 14, 2026, 03:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

“நாடுதான் முக்கியம் வர்த்தகம் 2ம் பட்சம்தான்” – எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் திட்டவட்டம்!

Murugesan M by Murugesan M
Aug 27, 2025, 09:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்கா என்ன அழுத்தம் கொடுத்தாலும் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த போவதில்லை என, இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இது குறித்த செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.

உக்ரைனையும், ரஷ்யாவைச் சமாதானம் செய்துவைக்கிறேன் என்ற பெயரில், பல்வேறு நாடுகளிடம் வம்பிழுத்து, பகைமைப் பாராட்டி வருகிறார் ட்ரம்ப். ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் அனைத்து நாடுகளுக்கும் அதிக வரி விதிக்கப்படும் எனக் கூறிய அவர், இந்தியாவுக்கு அதிகபட்சமாக 50 சதவீதம் வரி விதித்தார். அந்த வரி விதிப்பு தற்போது அமலுக்கு வந்துள்ளது.

உலகளவில் பிரேசிலுக்கும், இந்தியாவுக்கும் மட்டும்தான் அதிகபட்ச வரி விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அமெரிக்காவின் இந்தக் கெடுபிடிகளுக்கு எல்லாம் இந்தியா அசைந்து கொடுப்பதாக இல்லை. ரஷ்யா மட்டுமல்ல, குறைந்த விலைக்கு யார்க் கச்சா எண்ணெய் கொடுத்தாலும் நாங்கள் வாங்குவோம் என மத்திய அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டது. மக்களுக்குத் தங்குதடையின்றி எண்ணெய் விநியோகம் செய்வது மட்டும்தான் தங்களின் நோக்கம் எனவும் தெளிவுபடுத்திவிட்டது.

இந்நிலையில், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதை நிறுத்தப்போவதில்லை என, இந்திய சுத்திகரிப்பு நிலையங்களும் தற்போது தெரிவித்துள்ளன. இது குறித்து தனியார் நாளிதழுக்குப் பேட்டியளித்த அதன் அதிகாரிகள், தங்களுக்கு முதலில் நாடுதான் முக்கியம் எனவும், வர்த்தகம் எல்லாம் இரண்டாம்பட்சம்தான் எனவும் கூறியுள்ளனர்.

அமெரிக்க அழுத்தத்திற்கு எதிராக மத்திய அரசு வலுவான நிலைப்பாட்டில் உள்ளதாகவும், ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் கொள்முதலை நிறுத்தும்படி இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த அறிவுறுத்தல்களும் வரவில்லை எனவும் சுத்திகரிப்பு நிலைய அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களின் ஆண்டு சராசரியுடன் ஒப்பிடும்போது, செப்டம்பர் மாதத்திற்கான ஆர்டர்கள் குறைந்துள்ளன. இது குறித்து பேசிய நிர்வாகிகள், கடந்தாண்டு ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய்-க்கு இரண்டரை முதல் 3 டாலர்கள் வரை ரஷ்யா தள்ளுபடி அளித்திருந்ததாகவும், அது தற்போது ஒன்றரை டாலர் என்ற அளவுக்கு குறைந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

இதன் காரணமாகவே தங்களுக்கான ஆர்டர்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அக்டோபர் மாதம் முதல் ஆர்டர்கள் அதிகரிக்கத் தொடங்கும் என நம்புவதாகவும் கூறினர். தற்காலிகமான பொருளாதாரச் சிரமங்களை காட்டிலும், அரசின் நடவடிக்கைக்குத் துணை நிற்பதே முக்கியம் எனவும் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

மேலும், பிரதமர் மோடி, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், வர்த்தக அமைச்சர்ப் பியூஷ் கோயல் உள்ளிட்டோர், அமெரிக்காவின் அழுத்தத்திற்கு அடிபணியாமல், ஏற்றுமதியாளர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுப்பதில் கவனம் செலுத்தி வருவதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இப்படி இந்திய அரசும், இந்திய நிறுவனங்களும் ஒன்றிணைந்து அமெரிக்காவுக்கு அடிபணியாமல் எதிர்த்து நின்று வருகின்றன.

Tags: trade is secondary" - Oil refining companies are categoricalRussia oilIndiausa"The country is important
ShareTweetSendShare
Previous Post

மூளையில் பொருத்தப்பட்ட கணினி சிப் – புதிய சாதனை படைத்த எலான் மஸ்க் நிறுவனம்!

Next Post

34 வாரங்களாக வாழும் 3D சிறுநீரகம் : சிறுநீரக பிரச்னைகளை தீர்க்க உதவும்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies