"நாடுதான் முக்கியம் வர்த்தகம் 2ம் பட்சம்தான்" - எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் திட்டவட்டம்!
Oct 15, 2025, 08:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

“நாடுதான் முக்கியம் வர்த்தகம் 2ம் பட்சம்தான்” – எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் திட்டவட்டம்!

Web Desk by Web Desk
Aug 27, 2025, 09:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்கா என்ன அழுத்தம் கொடுத்தாலும் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த போவதில்லை என, இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இது குறித்த செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.

உக்ரைனையும், ரஷ்யாவைச் சமாதானம் செய்துவைக்கிறேன் என்ற பெயரில், பல்வேறு நாடுகளிடம் வம்பிழுத்து, பகைமைப் பாராட்டி வருகிறார் ட்ரம்ப். ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் அனைத்து நாடுகளுக்கும் அதிக வரி விதிக்கப்படும் எனக் கூறிய அவர், இந்தியாவுக்கு அதிகபட்சமாக 50 சதவீதம் வரி விதித்தார். அந்த வரி விதிப்பு தற்போது அமலுக்கு வந்துள்ளது.

உலகளவில் பிரேசிலுக்கும், இந்தியாவுக்கும் மட்டும்தான் அதிகபட்ச வரி விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அமெரிக்காவின் இந்தக் கெடுபிடிகளுக்கு எல்லாம் இந்தியா அசைந்து கொடுப்பதாக இல்லை. ரஷ்யா மட்டுமல்ல, குறைந்த விலைக்கு யார்க் கச்சா எண்ணெய் கொடுத்தாலும் நாங்கள் வாங்குவோம் என மத்திய அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டது. மக்களுக்குத் தங்குதடையின்றி எண்ணெய் விநியோகம் செய்வது மட்டும்தான் தங்களின் நோக்கம் எனவும் தெளிவுபடுத்திவிட்டது.

இந்நிலையில், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதை நிறுத்தப்போவதில்லை என, இந்திய சுத்திகரிப்பு நிலையங்களும் தற்போது தெரிவித்துள்ளன. இது குறித்து தனியார் நாளிதழுக்குப் பேட்டியளித்த அதன் அதிகாரிகள், தங்களுக்கு முதலில் நாடுதான் முக்கியம் எனவும், வர்த்தகம் எல்லாம் இரண்டாம்பட்சம்தான் எனவும் கூறியுள்ளனர்.

அமெரிக்க அழுத்தத்திற்கு எதிராக மத்திய அரசு வலுவான நிலைப்பாட்டில் உள்ளதாகவும், ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் கொள்முதலை நிறுத்தும்படி இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த அறிவுறுத்தல்களும் வரவில்லை எனவும் சுத்திகரிப்பு நிலைய அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களின் ஆண்டு சராசரியுடன் ஒப்பிடும்போது, செப்டம்பர் மாதத்திற்கான ஆர்டர்கள் குறைந்துள்ளன. இது குறித்து பேசிய நிர்வாகிகள், கடந்தாண்டு ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய்-க்கு இரண்டரை முதல் 3 டாலர்கள் வரை ரஷ்யா தள்ளுபடி அளித்திருந்ததாகவும், அது தற்போது ஒன்றரை டாலர் என்ற அளவுக்கு குறைந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

இதன் காரணமாகவே தங்களுக்கான ஆர்டர்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அக்டோபர் மாதம் முதல் ஆர்டர்கள் அதிகரிக்கத் தொடங்கும் என நம்புவதாகவும் கூறினர். தற்காலிகமான பொருளாதாரச் சிரமங்களை காட்டிலும், அரசின் நடவடிக்கைக்குத் துணை நிற்பதே முக்கியம் எனவும் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

மேலும், பிரதமர் மோடி, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், வர்த்தக அமைச்சர்ப் பியூஷ் கோயல் உள்ளிட்டோர், அமெரிக்காவின் அழுத்தத்திற்கு அடிபணியாமல், ஏற்றுமதியாளர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுப்பதில் கவனம் செலுத்தி வருவதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இப்படி இந்திய அரசும், இந்திய நிறுவனங்களும் ஒன்றிணைந்து அமெரிக்காவுக்கு அடிபணியாமல் எதிர்த்து நின்று வருகின்றன.

Tags: trade is secondary" - Oil refining companies are categoricalRussia oilIndiausa"The country is important
ShareTweetSendShare
Previous Post

மூளையில் பொருத்தப்பட்ட கணினி சிப் – புதிய சாதனை படைத்த எலான் மஸ்க் நிறுவனம்!

Next Post

34 வாரங்களாக வாழும் 3D சிறுநீரகம் : சிறுநீரக பிரச்னைகளை தீர்க்க உதவும்!

Related News

“அமிர்தவர்ஷம் 72” கொண்டாட்டம் – மாணவர்களை கவர்ந்த கண்காட்சி : சிறப்பு தொகுப்பு!

தீபாவளிக்கு தயாராகும் சிறுதானிய பலகாரங்கள் – சிறப்பு தொகுப்பு!

மகாராஷ்டிரா முதல்வர் முன்னிலையில் 60 நக்சல்கள் சரண்!

தீபாவளி பண்டிகை – டெல்லியில் பசுமை பட்டாசு வெடிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி!

இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு மீண்டும் தபால் பார்சல் சேவை தொடக்கம்!

கர்நாடகா: டிராக்டர் மீது அதிவேக ஸ்கூட்டர் மோதி விபத்து – வீடியோ வைரல்!

Load More

அண்மைச் செய்திகள்

தீபாவளி பண்டிகை – தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு!

“இட்லி கடை” திரைப்படம் நடிகர் தனுஷை ஓர் இயக்குநராக உயர்த்தியுள்ளது – அண்ணாமலை பாராட்டு!

மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்தில் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் புதிய முதலீடாக ₹15,000 கோடி வருகிறதா, இல்லையா? – நயினார் நாகேந்திரன்

15 நாட்களில் குடிநீர் குழாய் இணைப்பு வாக்குறுதி என்ன ஆனது? – நயினார் நாகேந்திரன் கேள்வி

கரூரில் அதிமுகவுக்கு அனுமதி மறுக்கப்பட்ட இடத்தில் தவெகவுக்கு அனுமதி – இபிஎஸ்

கரூர் துயர சமபவத்திற்கு காவல்துறையின் கவனக்குறைவே காரணம் – பேரவையில் நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

கரூர் விவகாரத்தில் சிபிஐ விசாரணை மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் – வானதி சீனிவாசன்

சட்டப்பேரவைக்கு கருப்பு பட்டை அணிந்து சென்ற அதிமுக உறுப்பினர்களை சிறைவாசிகளோடு ஒப்பீடு – அமைச்சர் ரகுபதிக்கு கண்டனம்!

மாங்காடு அருகே போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த 35 பேர் தப்பியோட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies