இந்திய மருந்துகள் முன் அடிபணிந்த அதிபர் டிரம்ப் : சுங்க வரியில் இருந்து விலக்கு அளித்த பின்னணி!
Mar 15, 2026, 09:52 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

இந்திய மருந்துகள் முன் அடிபணிந்த அதிபர் டிரம்ப் : சுங்க வரியில் இருந்து விலக்கு அளித்த பின்னணி!

Murugesan M by Murugesan M
Aug 30, 2025, 07:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்திய மருந்துகளுக்கு உடனடி சுங்க வரியில் இருந்து அமெரிக்கா விலக்கு அளித்துள்ளது. தனது சுங்க வரி கொள்கைகள் மூலம் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் அதிபர் டிரம்ப், இந்திய மருத்துவத்துறை முன்பு மட்டும் அடிபணிந்து நடக்கக் காரணம் என்ன? இந்தச் செய்தித் தொகுப்பில் விரிவாகக் காணலாம்…

இந்திய இறக்குமதி பொருட்கள் மீது 50 சதவீத வரிகளை விதித்துள்ள அமெரிக்கா, இந்திய மருந்துகளுக்கு மட்டும் உடனடி சுங்க வரியில் இருந்து விலக்கு அளித்துள்ளது. இதனால் அமெரிக்காவில் மலிவான சுகாதாரச் சேவைகளை வழங்கும், முக்கிய generic medicine எனப்படும் பொதுமருந்துகள் கிடைப்பது பாதிக்கப்படவில்லை.

இந்தியாவில் தயாரிக்கப்படும் பொதுமருந்துகள் அமெரிக்கச் சந்தையில் குறைந்த விலையில் கிடைக்கின்றன. இதனால், இந்திய மருந்துகள் அமெரிக்க MEDI CARE திட்டத்திற்கு மிகவும் முக்கியமானவையாகக் கருதப்படுகிறது. அவற்றுக்குச் சுங்க வரி விதிக்கப்படும் பட்சத்தில் அமெரிக்க மருத்துவ சேவைகளின் செலவுகள் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

கடந்த ஆண்டு, அமெரிக்கா எந்தெந்த நாடுகளிலிருந்து மருந்துகளை அதிகமாக இறக்குமதி செய்கிறது எனப் பார்த்தால், முக்கியமாக இந்தியா, சுவிட்சர்லாந்து மற்றும் ஜெர்மனி முன்னிலை வகிக்கின்றன. இந்தியாவிலிருந்து அமெரிக்கா 12 ஆயிரத்து 471 மில்லியன் டாலர் மதிப்பிலான மருந்துகளை இறக்குமதி செய்துள்ளது.

இது அந்நாட்டின் மருந்து இறக்குமதியில் 5.9 சதவீதம் ஆகும். முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவிற்கு இது 11.9 சதவீத வளர்ச்சி எனப் புள்ளி விவரங்கள் எடுத்துரைக்கின்றன. அதே நேரத்தில், அமெரிக்கா, சுவிட்சர்லாந்திலிருந்து 18 ஆயிரத்து 858 மில்லியன் டாலர், ஜெர்மனியிலிருந்து 17 ஆயிரத்து 164 மில்லியன் டாலர் மதிப்பிலான மருந்துகளை இறக்குமதி செய்திருந்தது.

இந்தியா தனது மருந்துகளை அதிகமாக ஏற்றுமதி செய்யும் நாடுகளில் அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா முன்னிலை வகிக்கின்றன. குறிப்பாக நடப்பாண்டில் இந்தியா அமெரிக்காவிற்கு 9 ஆயிரத்து 784 மில்லியன் டாலர் மதிப்பிலான மருந்துகளை ஏற்றுமதி செய்துள்ளது.

இது இந்தியாவின் மொத்த மருந்து இருப்பில் 39.8 சதவீதம் ஆகும். அதேபோல, இங்கிலாந்திற்கு 781 மில்லியன் டாலருக்கும், தென் ஆப்ரிக்காவிற்கு 637 மில்லியன் டாலருக்கும், பிரான்ஸுக்கு 586 மில்லியன் டாலருக்கும், கனடாவிற்கு 540 மில்லியன் டாலருக்கும் இந்தியா மருந்து பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளது.

இந்தப் புள்ளி விவரங்கள் இந்திய மருந்துகளின் முக்கியத்துவத்தையும், அமெரிக்கா அதனை எந்த அளவிற்கு நம்பியுள்ளது என்பதையும் எடுத்துரைக்கின்றன. இந்நிலையில், அமெரிக்கா வழங்கிய சுங்க வரி விலக்கு காரணமாக, முக்கிய இந்திய மருந்து நிறுவனங்கள் அமெரிக்கச் சந்தையில் குறிப்பிடத்தக்கப் பங்குகளை பாதுகாக்க முடிந்துள்ளது.

ஒருவேளைப் பொது மருந்துகளுக்கும் சுங்கம் விதிக்கப்பட்டிருந்தால், மருந்து நிறுவனங்களிடையே விலைப் போட்டி அதிகரித்து, சந்தையில் போட்டித்திறன் குறையும் அபாயம் ஏற்பட்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது.

Tags: இந்தியாவுக்கு 50 % வரிவிதிப்புPresident Trump bows down to Indian medicines: The reason for exempting them from customs dutiesஅடிபணிந்த அதிபர் டிரம்ப்IndiaamericausaDonald Trump
ShareTweetSendShare
Previous Post

வெள்ள பாதிப்பால் பரிதவிக்கும் பஞ்சாப் – தீவுகளான நகரங்கள்!

Next Post

அனைத்து மாவட்டங்களிலும் பாஜகவுடன் இணைந்து செயல்பட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

இங்கிலாந்தில் பெண்ணை உருளைக்கிழங்கு என கிண்டல் செய்த நபருக்கு 29 லட்சம் ரூபாய் அபராதம்!

வாடகைக்கு விடப்பட்ட தொழிலதிபர் ரத்தன் டாடாவின் வீடு!

ஈரான் இஸ்ரேல் போரால் கடும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வரும் கச்சா எண்ணெய் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies