வெள்ள பாதிப்பால் பரிதவிக்கும் பஞ்சாப் - தீவுகளான நகரங்கள்!
Jul 28, 2026, 09:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

வெள்ள பாதிப்பால் பரிதவிக்கும் பஞ்சாப் – தீவுகளான நகரங்கள்!

Murugesan M by Murugesan M
Aug 30, 2025, 07:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தொடர்  கனழை, வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கைச் சீற்றங்களால் பஞ்சாப் மாநிலமே ஸ்தம்பித்துள்ளது. லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவித்து வருகின்றனர். இது குறித்த செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.

எங்கு பார்த்தாலும் வெள்ளம். சாலைகள், வயல்வெளிகள், குருத்துவாராக்கள், மருத்துவமனைகள், பள்ளிகள் என அனைத்து இடங்களிலும் வெள்ளம். இன்றைய தேதிக்குப் படகுகள் மூலம் மட்டும்தான் பஞ்சாப்பில் பயணிக்க முடியும் எனக் கூறும் அளவுக்கு ஒட்டுமொத்த மாநிலமே வெள்ளக்காடாகியுள்ளது.

1988ஆம் ஆண்டுக்குப் பிறகு மிக மோசமான வெள்ளப் பாதிப்பை சந்தித்துள்ளது பஞ்சாப். இமாச்சலப் பிரதேசம், ஜம்மு & காஷ்மீர்ப் பகுதிகளில் பெய்த கனமழையால் சட்லஜ், பியாஸ், ரவி உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளம்தான் தற்போது பஞ்சாப்பையே நிலைகுலைய வைத்துள்ளது.

குறிப்பாக, பதன்கோட், குர்தாஸ்பூர், ஃபாசில்கா, கபுர்தலா, டர்ன் தரன், ஃபெரோஸ்பூர், ஹோஷியார்பூர், அமிர்தசரஸ் ஆகிய பகுதிகள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. 518 கிராமங்கள் முழுவதுமாக வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பல பகுதிகளில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால், மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அவர்கள் படகுகள் மூலவும், ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டு வருகின்றனர்.

பஞ்சாப் விவசாயத்தை நம்பியுள்ள மாநிலம். ஆனால், தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளம் வயல்வெளிகளைக் காணாமல் போகசெய்யும் அளவுக்கு மூழ்கடித்துள்ளது. தங்கள் கண் முன்னால், வயல்வெளிகள் நீரில் மூழ்குவதை பார்த்து விவசாயிகள் கண்ணீர் வடிக்கும் காட்சிகள் வெளியாகி சோகத்தை ஏற்படுத்தியுள்ளன.

பஞ்சாபில் கடந்த 24 மணிநேரத்தில் 243 சதவீதம் அதிக மழைப் பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து மீட்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, ரவி நதியின் மூன்று இடங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால், அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் வேகமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பஞ்சாப்-க்கு பலரும் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். மத்திய மற்றும் மாநில அரசுகளும் முழுவீச்சில் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன.

Tags: floodpunjapPunjab suffers from flood damage - cities that are islandsவெள்ள பாதிப்பால் பரிதவிக்கும் பஞ்சாப்
ShareTweetSendShare
Previous Post

முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் – இபிஎஸ் கேள்வி!

Next Post

இந்திய மருந்துகள் முன் அடிபணிந்த அதிபர் டிரம்ப் : சுங்க வரியில் இருந்து விலக்கு அளித்த பின்னணி!

Related News

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

ஆரோவில் சர்வதேச மையத்தில் கலாச்சார பரிமாற்ற விழா – தாய்லாந்து தூதரக அதிகாரிகளுக்கு உற்சாக வரவேற்பு!

இந்தியாவின் முதல் காலியம் நைட்ரைடு (GaN) சிப் : சாதித்த இந்திய ஆராய்ச்சியாளர்கள் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

முல்லை பெரியாறில் கழிவு நீர் கலப்பு – ஜெகநாத் மிஸ்ரா குற்றச்சாட்டு!

சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்!

பிற மாநிலங்களுக்கு கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு!

சமூக வலைதளங்களில் அவதூறு; மேயர் பிரியா புகார்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies