புதுச்சேரியில் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மதுபானம் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கலால்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாகக் கலால்துறை துணை ஆணையர் மேத்யூ பிரான்சிஸ் பிறப்பித்துள்ள உத்தரவில், புதுச்சேரியில் உள்ள மதுக் கடைகளில் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு மதுபானம் விற்கப்படுவதாகப் பல்வேறு புகார்கள் எழுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மது விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இதுதொடர்பாக மதுபான கூடங்களின் நுழைவாயிலில் காட்சிப்படுத்த வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.