பழனி ஆண்டவர் கலை கல்லூரி, தமிழக முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் புரிந்துணர்வு ஒப்பந்தம் - ABVP கண்டனம்!
Oct 10, 2025, 09:56 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பழனி ஆண்டவர் கலை கல்லூரி, தமிழக முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் புரிந்துணர்வு ஒப்பந்தம் – ABVP கண்டனம்!

Web Desk by Web Desk
Sep 21, 2025, 02:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பழனி ஆண்டவர் கலை கல்லூரி தமிழ் துறை, தமிழக முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளதற்கு அகில பாரத வித்தியார்த்தி பரிஷத் (ABVP) கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக  ABVP தென் தமிழக மாநில இணை செயலாளர் J.D. விஜயராகவன்  வெளியிட்டுள்ள  கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

“மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அருள்மிகு பழனி ஆண்டவர் கலை மற்றும் கலாச்சாரக் கல்லூரியின் தமிழ் துறை, சமீபத்தில் “தமிழக முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) மேற்கொண்டிருப்பதை ABVP வன்மையாக கண்டிக்கிறது.

இந்தச் சங்கம் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் கலைப்பிரிவாக செயல்பட்டு வருவது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். மேலும், அந்த சங்கத்திற்கு அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ பதிவு எண் கூட இல்லாத சூழலில், அரசு கல்வி நிறுவனம் இச்சங்கத்துடன் MoU கையெழுத்திட்டிருப்பது. அரசாங்க விதிமுறைகளுக்கும் முற்றிலும் முரணானது.

கல்வி நிலையங்களின் நோக்கம் மாணவர்களின் கல்வி, திறன் வளர்ச்சி, ஆராய்ச்சி மற்றும் வேலை வாய்ப்புத் திறன்களை மேம்படுத்துவதாக இருக்க வேண்டும். அரசியல் சங்கங்களுடன் இணையும் செயற்பாடுகள் கல்வி நிலையங்களை அரசியல் மேடைகளாக மாற்றி விடும் அபாயம் உள்ளது. இதன் மூலம் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுவதோடு, கல்வியின் தூய்மையான தன்மையும் ஆபத்துக்குள்ளாகிறது.

அரசு கல்லூரிகள் அரசியல் சார்பற்ற மற்றும் கல்வி சார்ந்த பணிகளை மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என்ற கடமைக்குப் புறம்பாக, இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவது மாணவர்களின் நலனையும், பெற்றோர்கள் கல்வி நிலையங்களில் வைத்துள்ள நம்பிக்கை கேள்விக்குறியாக்குகின்றன. கல்வி துறையின் மீது மக்களின் நம்பிக்கையை சீர்குலைக்கும் வகையில் நடைபெறும் இந்த முயற்சியை ABVP வன்மையாகக் கண்டிக்கிறது.

கல்வி நிலையங்கள் அரசியலிலிருந்து விலகி, மாணவர்களின் முன்னேற்றத்திற்காக மட்டுமே செயல்பட வேண்டும். அரசியல் இயக்கங்களோ, அவற்றின் துணை அமைப்புகளோ எந்தவொரு ஒப்பந்தமும் ஏற்க முடியாதது.

எனவே, தமிழக முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த MoU உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும் என்பதையும், எதிர்காலத்தில் இதுபோன்ற முயற்சிகள் மீண்டும் இடம்பெறாதவாறு உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதையும் ABVP வலியுறுத்தியுள்ளது.

Tags: Tamil Progressive Writers Association.VijayaraghavanAkhil Bharat Vidyarthi ParishadABVP CONDEMNMemorandumamil Department of Palani Andavar College
ShareTweetSendShare
Previous Post

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் சுதாகர் ரெட்டி மரியாதை!

Next Post

சாத்தனூர் அணையில் இருந்து நீர் திறப்பு – வெள்ள அபாய எச்சரிக்கை!

Related News

இன்றைய தங்கம் விலை!

சிட்னியில் உள்ள ஆஸ்திரேலிய கடற்படை தளத்தை பார்வையிட்டார் ராஜ்நாத்சிங்!

வழக்கறிஞர் மீதான தாக்குதலுக்கு திருமாவளவனே பொறுப்பு – அண்ணாமலை

கரூர் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்ததற்கு திமுக அரசே காரணம் – இபிஎஸ் குற்றச்சாட்டு!

சத்தியமங்கலம் அருகே அரசு பேருந்துக்குள் கொட்டிய மழை நீர் – பயணிகள் அவதி!

சேலத்தில் 1 மணி நேரம் கனமழை – சாலைகளில் வெள்ளம்!

Load More

அண்மைச் செய்திகள்

பணக்காரர்களின் திருமண விழாவில் மட்டுமே காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்கின்றனர் – அமைச்சர் பேச்சால் சர்ச்சை!

திமுகவில் இணைந்த விருதுநகர் காங்கிரஸ் நிர்வாகி – கூட்டணியில் சலசலப்பு!

பீகார் சட்டப்பேரவை தேர்தல் – இன்று தொடங்குகிறது வேட்பு மனுத்தாக்கல்!

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் பிரதமர் மோடி ஆலோசனை – காசா போர் நிறுத்தத்திற்கு வாழ்த்து

அமெரிக்க அதிபர் ட்ரம்புடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு – காசா போர் நிறுத்த முயற்சிக்கு வாழ்த்து!

4 லட்சம் பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை – ஐநாவில் பாகிஸ்தானை கிழித்தெறிந்த இந்திய பிரதிநிதி!

அணுசக்தித் துறையில் இனி தனியாருக்கு அனுமதி : பிரதமர் மோடி

உலகளவில் நிலவும் காந்தங்கள் தட்டுப்பாடு கைவிரித்த சீனா : ரூ.7,350 கோடி திட்டத்துடன் களமிறங்கிய இந்தியா!

ட்ரம்பின் முயற்சியால் திருப்பம் : இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம்!

WHO-விடம் இந்தியா விளக்கம் : விஷம் கலந்த இருமல் சிரப் ஏற்றுமதி செய்யப்பட்டதா?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies