கரூர் கூட்ட நெரிசலில் பலியானோர் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் - விஜய் அறிவிப்பு!
Sep 29, 2025, 02:53 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கரூர் கூட்ட நெரிசலில் பலியானோர் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் – விஜய் அறிவிப்பு!

Web Desk by Web Desk
Sep 28, 2025, 11:35 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கரூர் கூட்ட நெரிசலில் பலியானோர் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் வழங்கப்படும் என தவெக தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், வணக்கம். கற்பனைக்கும் எட்டாத வகையில், கரூரில் நேற்று நிகழ்ந்ததை நினைத்து, இதயமும் மனதும் மிகமிகக் கனத்துப் போயிருக்கும் சூழல்.

நம் உறவுகளை இழந்து தவிக்கும் பெருந்துயர்மிகு மனநிலையில், என் மனம் படுகிற வேதனையை எப்படிச் சொல்வதென்றே தெரியவில்லை. கண்களும் மனசும் கலங்கித் தவிக்கிறேன். நான் சந்தித்த உங்கள் எல்லோருடைய முகங்களும் என் மனதில் வந்து போகின்றன.

பாசமும் நேசமும் காட்டும் என் உறவுகளை நினைக்க நினைக்க, அது என் இதயத்தை மேலும் மேலும் அதன் இடத்திலிருந்தே நழுவச் செய்கிறது. என் சொந்தங்களே… நம் உயிரனைய உறவுகளை இழந்து தவிக்கும் உங்களுக்கு, சொல்லொணா வேதனையுடன் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அதே வேளையில், இப்பெரும் சோகத்தை உங்கள் மனதுக்கு நெருக்கமாக நின்று பகிர்ந்துகொள்கிறேன். நமக்கு ஈடு செய்யவே இயலாத இழப்புதான். யார் ஆறுதல் சொன்னாலும் நம் உறவுகளின் இழப்பைத் தாங்கவே இயலாதுதான்.

இருந்தும், உங்கள் குடும்பத்தில் ஒருவனாக, உறவினை இழந்து தவிக்கும் நம் சொந்தங்களின் குடும்பம் ஒவ்வொன்றுக்கும் தலா 20 லட்ச ரூபாயும், காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோருக்குத் தலா 2 லட்ச ரூபாயும் அளிக்க எண்ணுகிறேன்.

இழப்பிற்கு முன்னால் இது ஒரு பெரும் தொகையன்றுதான். இருந்தும், இந்த நேரத்தில், என்னுடைய உறவுகளான உங்களுடன் மனம்பற்றி நிற்க வேண்டியது உங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவனாக என் கடமை.

அதேபோல, காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் அனைத்து உறவுகளும் மிக விரைவில் குணமடைந்து வீடு திரும்ப இறைவனைப் பிரார்த்திக்கின்றேன். சிகிச்சையில் இருக்கும் நம் உறவுகள் அனைவருக்கும் அனைத்து உதவிகளையும் நம் தமிழக வெற்றிக் கழகம் உறுதியாகச் செய்யும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். இறைவன் அருளால், அனைத்தில் இருந்தும் நாம் மீண்டு வர முயற்சிப்போம் என தெரிவித்துள்ளார்.

Tags: vijay campaign rallykarur vijay meetingvijay campaign speechvijay karurtvk campaign karurvijay rally stampede karurtvk karur campaign deathvijay karur rally stampedevijay namakkal campaignvijay karur rallyvijay karur livestampede at tmk vijay’s karur rallyvijay karur campaign livetvk vijay campaignvijay campaignnamakkal vijay campaignvijay karur campaignvijay campaign livetvk vijay karur campaigntvk vijay campaign in namakkaltvk vijay campaign 2025 namakkal karur
ShareTweetSendShare
Previous Post

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் – உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு இபிஎஸ் இரங்கல்!

Next Post

கரூர் தவெக கூட்டத்திற்கு காவல்துறை உரிய பாதுகாப்பு வழங்கவில்லை – இபிஎஸ் குற்றச்சாட்டு!

Related News

கரூரில் விஜய் பரப்புரைக்கு காவல்துறை சரியான இடத்தை வழங்கியிருக்க வேண்டும் – அன்புமணி

கரூர் வேலுசாமிபுரத்தில் ஆய்வை தொடங்கினார் ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன்!

தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் உள்ளிட்ட 4 பேர் மீது ஜாமினில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

தவெக சார்பில் உயர் நீதிமன்றத்தில் முறைகேடு – மதுரை உயர் நீதிமன்ற கிளையில் நாளை விசாரணை!

கரூர் மாவட்ட ஆட்சியர், எஸ்.பியை உடனடியாக சஸ்பெண்ட் செய்ய வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

தவெக தலைவர் விஜய் வீட்டை முற்றுகையிட முயன்ற தமிழ் மாணவர் மன்றத்தினர்!

Load More

அண்மைச் செய்திகள்

கரூர் தவெக கூட்டத்திற்கு சென்ற இளைஞர் உயிரிழப்பு – சோகத்த்தில் மூழ்கிய கிராமம்!

கரூர் தவெக கூட்ட நெரிசலில் கணவர் உயிரிழப்பு – கதறி அழுத கர்ப்பிணி மனைவி!

கரூர் கூட்ட நெரிசல் சோகம் – ஒரே கிராமத்தை சேர்ந்த 5 பேர் பலி!

கரூர் கூட்ட நெரிசல் குறித்து தவெக முறையீடு – மதுரை உயர் நீதிமன்ற கிளையில் நாளை விசாரணை!

கரூர் தவெக பிரச்சாரத்திற்கு சென்ற நூற்பாலை ஊழியர் உயிரிழப்பு!

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 40 ஆக உயர்வு – இபிஎஸ் நேரில் அஞ்சலி!

தமிழக அரசு அமைத்துள்ள குழு மீது நம்பிக்கை இல்லை – நயினார் நாகேந்திரன்

கரூர் கூட்ட நெரிசல் இயற்கையாக நடந்ததா? செயற்கையாக உருவாக்கப்பட்டதா? – ஹெச்.ராஜா கேள்வி!

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ. 2 லட்சம் நிவாரணம் – பிரதமர் மோடி அறிவிப்பு!

கரூர் தவெக கூட்டத்திற்கு காவல்துறை உரிய பாதுகாப்பு வழங்கவில்லை – இபிஎஸ் குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies