ரஷ்ய எண்ணெய் வாங்கும் நேட்டோ நாடு : இந்தியாவை மட்டும் குறிவைக்கும் டிரம்ப்!
Jan 14, 2026, 11:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ரஷ்ய எண்ணெய் வாங்கும் நேட்டோ நாடு : இந்தியாவை மட்டும் குறிவைக்கும் டிரம்ப்!

Murugesan M by Murugesan M
Sep 29, 2025, 03:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நேட்டோ நட்பு நாடு ஒன்று, 80 சதவிகிதம் அளவுக்கு ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவை மட்டும் குறிவைத்தது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

ரஷ்யா – உக்ரைன் போர் மூன்று ஆண்டுகளாகியும் ஓயாமல் நீடித்து வருகிறது. ரஷ்ய எண்ணெயை வாங்குவதால் உக்ரைன் போருக்கு மறைமுகமாக உதவுவதாகக் கூறி இந்தியாவுக்கு வரி விதித்திருந்தார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். ஆனால், நோட்டோ உறுப்பு நாடான ஹங்கேரி மற்ற நாடுகளை விடவும் 80 சதவிகிதம் அளவுக்கு ரஷ்ய எண்ணெயைத் தற்போதும் சத்தம் இல்லாமல் இறக்குமதி செய்து வருகிறது.

ரஷ்ய புதைபடிவ எரிபொருட்களைப் படிப்படியாக குறைப்பதாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அறிவித்து அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அதேவேளையில் ஹங்கேரி அதிலிருந்து பின்வாங்காமல் ரஷ்ய கச்சா எண்ணெயைக் கொள்முதல் செய்து வருவது விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கிறது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் அழுத்தம் இருந்தபோதும், ரஷ்யாவிடம் இருந்து புதைபடிவ பொருட்ளை கொள்முதல் செய்வதில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என்று திட்டவட்டமாகக் கூறியிருக்கிறார் ஹங்கேரி பிரதமர் விக்டர் ஒர்பன். ரஷ்ய எண்ணெயைப் புறக்கணிப்பது ஹங்கேரியின் பொருளாதாரத்திற்கு பேரழிவைத் தரும் என்றும் அவர் தனது வாதத்தை முன்வைத்திருக்கிறார்.

சமீபத்திய தரவுகளின்படி உக்ரைன் போருக்கு முன்னதாக ரஷ்யாவிடம் இருந்து 61 சதவிகிதம் அளவுக்குக் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்த ஹங்கேரி தற்போது 86 சதவிகிதம் அளவுக்கு இறக்குமதி செய்கிறது. இதே போன்று ஸ்லோவாக்கியாவும் ரஷ்ய எண்ணெயை அதிகளவில் இறக்குமதி செய்து வருகிறது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் 2022 ஆம் ஆண்டு ரஷ்ய புதைபடிவ எரிபொருட்களை முற்றிலுமாக அகற்றுவதற்கான உறுதிமொழி இருந்தபோதிலும், இரு நாடுகளும் டர்க்ஸ்ட்ரீம் குழாய் வழியாக மாஸ்கோவுடன் இணைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக இயற்கை எரிவாயு விநியோகங்களை தங்கு தடையின்றி தொடர்கின்றன.

ரஷ்யாவிடமிருந்து, 80 சதவீதத்திற்கும் அதிகமாக எண்ணெய் வாங்குவதன் மூலம், ஹங்கேரி மாஸ்கோவின் போர் இயந்திரத்திற்கு நிதியளிப்பதாகவும், மேற்கத்திய தடைகளை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதோடு, நேட்டோவின் ஒற்றுமையையும் சோதிக்கிறது என்பது டிரம்பின் வாதமாக உள்ளது.

அண்மையில் ஐ.நா. பொதுச்சபையில் உரையாற்றிய அமெரிக்க அதிபர் டிரம்ப், சீனாவும் இந்தியாவும் ரஷ்ய எண்ணெயைத் தொடர்ந்து வாங்குவதால், உக்ரைன் போருக்கு முதன்மை நிதியளிப்பவர்களாக உள்ளதாகக் கூறினார். ஆனால் மன்னிக்க முடியாத வகையில், நேட்டோ நாடுகள் கூட ரஷ்ய எரிசக்தியை புறக்கணிக்காமல் உள்ளதாக விமர்சித்தார். டிரம்பைப் பொறுத்தவரை, ரஷ்யாவுடனான ஹங்கேரியின் ஒப்பந்தங்கள் எரிச்சலூட்டும் செயல் மட்டுமல்ல, நேட்டோவின் நோக்கத்திற்கு ஒரு அடிப்படை துரோகமாகமாகவும் உள்ளது.

ஆனால் இதற்கு எதிர்வினையாற்றியுள்ள ஹங்கேரி, ரஷ்யாவைத் தவிர எங்கிருந்தோ எண்ணெய் மற்றும் எரிவாயு வாங்குவது கனவு காண்பது போல் நன்றாக இருக்குமே தவிர சாத்தியமில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளது. மேலும் ரஷ்ய இறக்குமதிகளை தடுக்க ஐரோப்பிய ஒன்றிய அளவிலான முயற்சிகளை ஹங்கேரி பலமுறை வீட்டோ செய்துள்ளது கவனிக்கத்தக்கது.

ஹங்கேரியும், ஸ்லோவாக்கியாவும் சுமார் 6 பில்லியன் வரி வருவாயை ரஷ்யாவுக்கு செலுத்தியிருப்பதாகவும், இது ஆயிரக்கணக்கான ரஷ்ய கப்பல் ஏவுகணைகளுக்குப் போதுமானது என்றும் அட்லாண்டிக் கவுன்சில் குறிப்பிட்டுள்ளது.

எனினும் இந்தியாவுக்கு வரி விதிப்பதை போல் ஹங்கேரிக்கு அதிகமான வரியை விதிக்க டிரம்ப் அரசாங்கம் தயங்குவது ஏன் என்ற கேள்வியும் முன் வைக்கப்படுகிறது.

Tags: ரஷ்ய எண்ணெய் வாங்கும் நேட்டோ நாடுrussiausaDonald Trumpஇந்தியாNATO country that buys Russian oil: Trump targets only India
ShareTweetSendShare
Previous Post

மத்தியப் பிரதேசம் : கோயில் திருவிழாவில் சாய்ந்து விழுந்த ராட்டினத்தில் சிக்கியவர்கள் பத்திரமாக மீட்பு!

Next Post

அரசியல் பலத்தை காட்ட காலதாமதமாக வந்தார் விஜய் – கூட்ட நெரிசல் குறித்த எப்ஐஆர் தகவல்!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies