ரஷ்ய எண்ணெய் வாங்கும் நேட்டோ நாடு : இந்தியாவை மட்டும் குறிவைக்கும் டிரம்ப்!
Nov 15, 2025, 07:56 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ரஷ்ய எண்ணெய் வாங்கும் நேட்டோ நாடு : இந்தியாவை மட்டும் குறிவைக்கும் டிரம்ப்!

Web Desk by Web Desk
Sep 29, 2025, 03:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நேட்டோ நட்பு நாடு ஒன்று, 80 சதவிகிதம் அளவுக்கு ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவை மட்டும் குறிவைத்தது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

ரஷ்யா – உக்ரைன் போர் மூன்று ஆண்டுகளாகியும் ஓயாமல் நீடித்து வருகிறது. ரஷ்ய எண்ணெயை வாங்குவதால் உக்ரைன் போருக்கு மறைமுகமாக உதவுவதாகக் கூறி இந்தியாவுக்கு வரி விதித்திருந்தார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். ஆனால், நோட்டோ உறுப்பு நாடான ஹங்கேரி மற்ற நாடுகளை விடவும் 80 சதவிகிதம் அளவுக்கு ரஷ்ய எண்ணெயைத் தற்போதும் சத்தம் இல்லாமல் இறக்குமதி செய்து வருகிறது.

ரஷ்ய புதைபடிவ எரிபொருட்களைப் படிப்படியாக குறைப்பதாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அறிவித்து அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அதேவேளையில் ஹங்கேரி அதிலிருந்து பின்வாங்காமல் ரஷ்ய கச்சா எண்ணெயைக் கொள்முதல் செய்து வருவது விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கிறது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் அழுத்தம் இருந்தபோதும், ரஷ்யாவிடம் இருந்து புதைபடிவ பொருட்ளை கொள்முதல் செய்வதில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என்று திட்டவட்டமாகக் கூறியிருக்கிறார் ஹங்கேரி பிரதமர் விக்டர் ஒர்பன். ரஷ்ய எண்ணெயைப் புறக்கணிப்பது ஹங்கேரியின் பொருளாதாரத்திற்கு பேரழிவைத் தரும் என்றும் அவர் தனது வாதத்தை முன்வைத்திருக்கிறார்.

சமீபத்திய தரவுகளின்படி உக்ரைன் போருக்கு முன்னதாக ரஷ்யாவிடம் இருந்து 61 சதவிகிதம் அளவுக்குக் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்த ஹங்கேரி தற்போது 86 சதவிகிதம் அளவுக்கு இறக்குமதி செய்கிறது. இதே போன்று ஸ்லோவாக்கியாவும் ரஷ்ய எண்ணெயை அதிகளவில் இறக்குமதி செய்து வருகிறது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் 2022 ஆம் ஆண்டு ரஷ்ய புதைபடிவ எரிபொருட்களை முற்றிலுமாக அகற்றுவதற்கான உறுதிமொழி இருந்தபோதிலும், இரு நாடுகளும் டர்க்ஸ்ட்ரீம் குழாய் வழியாக மாஸ்கோவுடன் இணைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக இயற்கை எரிவாயு விநியோகங்களை தங்கு தடையின்றி தொடர்கின்றன.

ரஷ்யாவிடமிருந்து, 80 சதவீதத்திற்கும் அதிகமாக எண்ணெய் வாங்குவதன் மூலம், ஹங்கேரி மாஸ்கோவின் போர் இயந்திரத்திற்கு நிதியளிப்பதாகவும், மேற்கத்திய தடைகளை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதோடு, நேட்டோவின் ஒற்றுமையையும் சோதிக்கிறது என்பது டிரம்பின் வாதமாக உள்ளது.

அண்மையில் ஐ.நா. பொதுச்சபையில் உரையாற்றிய அமெரிக்க அதிபர் டிரம்ப், சீனாவும் இந்தியாவும் ரஷ்ய எண்ணெயைத் தொடர்ந்து வாங்குவதால், உக்ரைன் போருக்கு முதன்மை நிதியளிப்பவர்களாக உள்ளதாகக் கூறினார். ஆனால் மன்னிக்க முடியாத வகையில், நேட்டோ நாடுகள் கூட ரஷ்ய எரிசக்தியை புறக்கணிக்காமல் உள்ளதாக விமர்சித்தார். டிரம்பைப் பொறுத்தவரை, ரஷ்யாவுடனான ஹங்கேரியின் ஒப்பந்தங்கள் எரிச்சலூட்டும் செயல் மட்டுமல்ல, நேட்டோவின் நோக்கத்திற்கு ஒரு அடிப்படை துரோகமாகமாகவும் உள்ளது.

ஆனால் இதற்கு எதிர்வினையாற்றியுள்ள ஹங்கேரி, ரஷ்யாவைத் தவிர எங்கிருந்தோ எண்ணெய் மற்றும் எரிவாயு வாங்குவது கனவு காண்பது போல் நன்றாக இருக்குமே தவிர சாத்தியமில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளது. மேலும் ரஷ்ய இறக்குமதிகளை தடுக்க ஐரோப்பிய ஒன்றிய அளவிலான முயற்சிகளை ஹங்கேரி பலமுறை வீட்டோ செய்துள்ளது கவனிக்கத்தக்கது.

ஹங்கேரியும், ஸ்லோவாக்கியாவும் சுமார் 6 பில்லியன் வரி வருவாயை ரஷ்யாவுக்கு செலுத்தியிருப்பதாகவும், இது ஆயிரக்கணக்கான ரஷ்ய கப்பல் ஏவுகணைகளுக்குப் போதுமானது என்றும் அட்லாண்டிக் கவுன்சில் குறிப்பிட்டுள்ளது.

எனினும் இந்தியாவுக்கு வரி விதிப்பதை போல் ஹங்கேரிக்கு அதிகமான வரியை விதிக்க டிரம்ப் அரசாங்கம் தயங்குவது ஏன் என்ற கேள்வியும் முன் வைக்கப்படுகிறது.

Tags: ரஷ்ய எண்ணெய் வாங்கும் நேட்டோ நாடுrussiausaDonald Trumpஇந்தியாNATO country that buys Russian oil: Trump targets only India
ShareTweetSendShare
Previous Post

மத்தியப் பிரதேசம் : கோயில் திருவிழாவில் சாய்ந்து விழுந்த ராட்டினத்தில் சிக்கியவர்கள் பத்திரமாக மீட்பு!

Next Post

அரசியல் பலத்தை காட்ட காலதாமதமாக வந்தார் விஜய் – கூட்ட நெரிசல் குறித்த எப்ஐஆர் தகவல்!

Related News

எட்டிப் பிடிக்க முடியாத தங்கம் : என்னவாகும் பொற்கொல்லர்களின் எதிர்காலம்?

மினிமம் பட்ஜெட்….மிடில் கிளாஸ் ஃபேமிலி : மனதை கவர்ந்த மக்கள் இயக்குனர்!

வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி!

S.I.R. பணிகள் மும்முரம் : முதல்வர் தொகுதியில் போலி வாக்காளர்கள்!

அரசியலில் இருந்து விலகுகிறேன் – லாலு மகள் ரோகிணி ஆச்சார்யா அறிவிப்பு!

பீகார் சட்டப்பேரவை தேர்தல் – சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

முகவரி மாற்றி தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பிய தவெக தலைவர் விஜய்!

பொதுப்பாதை ஆக்கிரமிப்பு – பாறைகளில் ஏறி பள்ளிக்குச் செல்லும் சிறுவர்கள்!

முதலமைச்சருக்கு ஸ்டாலினுக்கு வயிற்றெரிச்சல் – அண்ணாமலை

விடுதலை போராட்டத்தில் பழங்குடியினரின் பங்கு மறைக்கப்பட்டுள்ளது – ஆளுநர் ஆர்.என் ரவி

அரசியலமைப்பு திருத்தத்துக்கு பாகிஸ்தானின் உச்சநீதிமன்ற நீதிபதிகள் எதிர்ப்பு!

கேரளாவுக்கு சுற்றுலா சென்ற பிரிட்டன் டிராவல் இன்புளூயன்சர்!

மகாராஷ்டிரா : காரை கழுதைகளில் பூட்டி ஊர்வலமாக இழுத்து சென்ற உரிமையாளர்!

டெல்லி கார் வெடிப்பு தாக்குதலுக்கு உதவிய ஹவாலா முகவர்கள் – புலனாய்வு அமைப்பு விசாரணை!

சுயசார்பு இந்தியா திட்டத்தால் 1 கோடி பதிவிறக்கத்தை கடந்த ’அரட்டை!

விருந்தோம்பலால் இந்தியாவில் குடும்பம் இருப்பது போல உணர்கிறேன் – பிரெஞ்சு பெண்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies