அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்த காசா அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது!
Feb 4, 2026, 12:48 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்த காசா அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது!

Murugesan M by Murugesan M
Oct 14, 2025, 12:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்த காசா அமைதி ஒப்பந்தம் அதிகாரப்பூர்வமாகக் கையெழுத்தானது.

இஸ்ரேல்-காசா இடையேயான போர் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முன்மொழிந்த 20 அம்சங்கள் கொண்ட ஒப்பந்தத்தால் முடிவுக்கு வந்துள்ளது. ட்ரம்ப் அறிவித்த காசா அமைதி ஒப்பந்தம் அதிகாரப்பூர்வமாக எகிப்தில் கையெழுத்தானது.

எகிப்தின் ஷர்ம் எல் ஷேக் நகரில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் எகிப்து அதிபர் அப்தெல் ஃபட்டா எல் சிசி தலைமையில் காசா அமைதி மாநாடு நடைபெற்றது.

இதில், ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் மற்றும் 20க்கும் மேற்பட்ட உலக நாடுகளின் தலைவர்கள், அவர்கள் சார்பில் அனுப்பப்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

இந்தியாவின் சார்பில் வெளியுறவுத்துறை இணையமைச்சர் கிர்த்தி வர்தன் சிங் கலந்து கொண்டார்.

மாநாட்டில், காசா அமைதி ஒப்பந்தத்தில் அதிபர் ட்ரம்ப் கையெழுத்திட்டார். அதைத் தொடர்ந்து, ட்ரம்ப் தலைமையில், உலகத் தலைவர்கள் ஆதரவுடன் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.

காசா அமைதி மாநாட்டில் பேசிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இது மத்திய கிழக்கைத் தாண்டி உலக வரலாற்றில் ஒரு முக்கியமான தருணம் என்று கூறினார்.

காசாவுக்கு ஆதரவு வழங்கி மக்களை உயர்த்த அனைவரும் ஒப்புக்கொண்டதாகக் கூறிய அவர், காசா மறுசீரமைக்கப்பட வேண்டியதையும் சுட்டிக் காட்டினார்.

மக்களுக்குப் பாதுகாப்பான சூழலை உருவாக்க அனைவரும் ஒப்புக் கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

காசாவில் நடந்த போர், பல வருட துன்பங்களுக்குப் பிறகு தற்போது முடிந்துள்ளதாகக் கூறிய அவர், மனிதாபிமான உதவிகள் பெருமளவில் வந்து கொண்டிருப்பதாகவும், அதற்காக அமைதி மாநாட்டில் பங்கேற்ற பல நாடுகள் நிதி வழங்கியுள்ளதாகவும் கூறினார்.

காசாவில் மறுசீரமைப்பு தொடங்குவதாகக் கூறிய ட்ரம்ப், ஒரு புதிய நாள் உதயமாகும் காட்சி அழகாக உள்ளதாகக் குறிப்பிட்டார்.

தான் ஒரு சிறந்த எதிர்காலத்தை உறுதிசெய்வதில் பங்குதாரராக இருக்க விரும்புவதாகக் கூறிய அவர், 3ஆம் உலகப் போர் நடைபெறாது என நம்புவதாகவும் தெரிவித்தார்.

இந்தியா ஒரு சிறந்த நாடு என்றும், பிரதமர் மோடி தனக்கு மிகவும் நெருக்கமான நண்பர் எனவும் கூறிய அதிபர் ட்ரம்ப், பிரதமர் மோடி அற்புதமான பணியைச் செய்துள்ளதாகவும் பாராட்டினார். பாகிஸ்தானும் இந்தியாவும் இனி நல்லுறவுடன் இருக்கப் போவதாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டார்.

Tags: அமெரிக்க அதிபர் ட்ரம்ப்காசா அமைதி ஒப்பந்தம்The Gaza peace deal announced by US President Trump has been signed
ShareTweetSendShare
Previous Post

ஜம்மு காஷ்மீரில் சுற்றுலாவை மேம்படுத்த நடவடிக்கை!

Next Post

6-வது நாளாக தொடரும் டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம்!

Related News

இந்தியா ஐரோப்பிய யூனியன் ஒப்பந்தம் : பாகிஸ்தான் வங்கதேச வர்த்தகம் பாதிக்கப்படும் அபாயம் – சிறப்பு தொகுப்பு!

டிரம்ப் சிறுமியை வன்கொடுமை செய்ததாக எப்ஸ்டீன் கோப்பில் தகவல்!

வரி குறைக்கப்பட்டதற்கு 140 கோடி மக்கள் சார்பில் அமெரிக்காவிற்கு பிரதமர் மோடி நன்றி!

பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் உரையாடிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப்! – அடுத்து வெளியான அறிவிப்பு

சிந்து நதிநீர் ஒப்பந்தம் விவகாரம் -வெளியான தீர்ப்பு.. இந்தியா கொடுத்த பதிலடி!

இந்தியா கேட் போன்று வாஷிங்டனில் வளைவு கட்ட அதிபர் டிரம்ப் திட்டம் – சூசமாக சொன்ன அதிபர்

Load More

அண்மைச் செய்திகள்

காங்கிரஸை அழைக்காத திமுக – விசிக, இடதுசாரிகளுடன் தனியாக கூட்டணி பேச்சுவார்த்தை!

வழக்கில் இருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சொத்துகளை மீட்க அகில இந்திய தலைமை முடிவு!

பாதுகாப்பு எல்லைப்பகுதியை முன்னறிவிப்புமின்றி கையக்கப்படுத்திய திமுக பிராந்திய அரசு!

ஹெச்.ராஜாவின் உடல்நிலை முன்னேற்றம் – நயினார் நாகேந்திரன் உடன் சிரித்து உரையாடிய வீடியோவை வெளியிட்டது பாஜக!

தடையற்ற மின்சாரம் வழங்கப்படும் என்ற வாக்குறுதி  என்ன ஆனது? – நயினார் நாகேந்திரன்

புதுச்சேரியில் “SAGA OF RSS” கருத்தரங்கம் – தத்தாத்ரேய ஹோசபாளே பங்கேற்பு!

சேலம் ஜருகுமலை பகுதிகளில் காட்டுத்தீ – மலையடிவார மக்கள் அச்சம்!

மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேடு வழக்கு – தற்காலிக ஊழியர்கள் இருவரின் ஜாமின் மனுக்கள் தள்ளுபடி!

மதுரை மாமன்றக் கூட்டம் வரும் 10-ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு!

ஒடிசாவில் நடைபெற்ற ராம்ஜெட் என்ஜின் ஏவுகணை சோதனை வெற்றி -நீண்ட தூர போர் விமானங்களை துல்லியமாகத் தாக்க முடியும்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies