பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் உரையாடிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப்! - அடுத்து வெளியான அறிவிப்பு
Aug 6, 2026, 08:25 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் உரையாடிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப்! – அடுத்து வெளியான அறிவிப்பு

Manikandan by Manikandan
Feb 3, 2026, 12:22 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்தியா – அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் இறுதியானதாக அறிவித்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இந்திய பொருட்களுக்கான பரஸ்பர வரி 25 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக குறைக்கப்படுமெனத் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வெளியிட்ட அறிக்கையில், பிரதமர் மோடியுடன் பேசியது மகிழ்ச்சி அளிப்பதாகவும், அவர் தனது சிறந்த நண்பர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி, நாட்டின் சக்தி வாய்ந்த மற்றும் மரியாதைக்குரிய தலைவர் என்று குறிப்பிட்டுள்ள ட்ரம்ப்,

வர்த்தகம், ரஷ்யா உக்ரைன் போர் நிறுத்தம் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து விவாதித்ததாகவும் கூறியுள்ளார்.

ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்திவிட்டு அமெரிக்காவிடம் கூடுதலாக எண்ணெய் வாங்க ஒப்புக்கொண்டதாகவும், வெனிசுலாவிடம் இருந்தும் வாங்க முடிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தற்போது நடக்கும் உக்ரைன் போரால் ஆயிரக்கணக்கான மக்கள் இறப்பதை நிறுத்த உதவும் என்று குறிப்பிட்டுள்ள ட்ரம்ப்,

பிரதமர் மோடி மீதான மரியாதை , நட்பு காரணமாகவும், அவரது கோரிக்கையின் பேரிலும் இந்தியா – அமெரிக்கா இடையே உடனடியாக அமலுக்கு வரும் வகையில் வர்த்தக ஒப்பந்தத்திற்கு தாங்கள் ஒப்புக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் அமெரிக்கா விதித்த பரஸ்பர வரி 25 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக குறையும் என்று சுட்டிக்காட்டியுள்ள ட்ரம்ப்,


அமெரிக்க பொருட்கள் மீதான வரியை இந்தியா பூஜ்ஜியமாக குறைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் கூறியுள்ளார்.

அமெரிக்க பொருட்களை கூடுதலாக வாங்க மோடி உறுதிபூண்டுள்ளதாக கூறியுள்ள ட்ரம்ப், 500 பில்லியன் டாலர் அளவுக்கு அமெரிக்காவின் எரிசக்தி, தொழில்நுட்பம், விவசாயம், நிலக்கரி சார்ந்த பொருட்களை இந்தியா வாங்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்தியா உடனான நட்பு சிறப்பானதெனக் கூறியுள்ள ட்ரம்ப், வரும் காலங்களில் இது மேலும் வலுப்பெறும் என்றும் கூறியுள்ளார்.

மேலும், தானும், பிரதமர் மோடியம் காரியங்களைச் சாதிப்பவர்கள் என்றும் அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். (OUT)

Tags: Trumptrump newsUS President Trumptariff18 percent.25 percentfinalizedbjp indiatn bjpAgreementUnited States
Share
Tweet
SendShare
Previous Post

மருத்துவமனையில் எச்.ராஜாவைச் சந்தித்து நலம் விசாரித்த நடிகர் ரஜினிகாந்த்!

Next Post

வரி குறைக்கப்பட்டதற்கு 140 கோடி மக்கள் சார்பில் அமெரிக்காவிற்கு பிரதமர் மோடி நன்றி!

Related News

இனி இன்சூரன்ஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல் – புதிய திட்டம் வகுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

குற்ற செயல்களில் ஈடுபட்டுவிட்டு, வெளிநாடுகளுக்கு தப்பியோடிய 274 பேர் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர் – மத்திய அரசு தகவல்!

விமர்சகர்களை கைது செய்வதிலேயே குறியாக இருக்கிறார்கள்; மு.க ஸ்டாலின்

திருப்பி அடிக்கும் கர்மா – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பரவும் புரட்சித் தீ : கதிகலங்கி நிற்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவுடன் நெருங்கும் ஆஃப்கன் : புலம்பி தவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

உஸ்பெகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு – இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பூரில் 10 கோடி மதிப்பில் டெக்ஸ்டைல் டெக்னாலஜி சென்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

விவசாய பயிர்கடன் தள்ளுபடிக்கு 5,932 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

சென்னையில் அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

பள்ளிக்கல்வித்துறைக்கு 44, 527 கோடி ஒதுக்கீடு : பட்ஜெட்டில் அறிவிப்பு!

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு 2,022 கோடி – நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!

தமிழகத்தை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற இலக்கு – மரிய வில்சன் உறுதி!

தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு 560 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழக பட்ஜெட் தாக்கல் – துறை வாரியாக நிதி ஒதுக்கீடு!

இன்றைய தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies