பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் உரையாடிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப்! - அடுத்து வெளியான அறிவிப்பு
Sep 20, 2026, 09:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் உரையாடிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப்! – அடுத்து வெளியான அறிவிப்பு

Manikandan by Manikandan
Feb 3, 2026, 12:22 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்தியா – அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் இறுதியானதாக அறிவித்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இந்திய பொருட்களுக்கான பரஸ்பர வரி 25 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக குறைக்கப்படுமெனத் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வெளியிட்ட அறிக்கையில், பிரதமர் மோடியுடன் பேசியது மகிழ்ச்சி அளிப்பதாகவும், அவர் தனது சிறந்த நண்பர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி, நாட்டின் சக்தி வாய்ந்த மற்றும் மரியாதைக்குரிய தலைவர் என்று குறிப்பிட்டுள்ள ட்ரம்ப்,

வர்த்தகம், ரஷ்யா உக்ரைன் போர் நிறுத்தம் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து விவாதித்ததாகவும் கூறியுள்ளார்.

ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்திவிட்டு அமெரிக்காவிடம் கூடுதலாக எண்ணெய் வாங்க ஒப்புக்கொண்டதாகவும், வெனிசுலாவிடம் இருந்தும் வாங்க முடிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தற்போது நடக்கும் உக்ரைன் போரால் ஆயிரக்கணக்கான மக்கள் இறப்பதை நிறுத்த உதவும் என்று குறிப்பிட்டுள்ள ட்ரம்ப்,

பிரதமர் மோடி மீதான மரியாதை , நட்பு காரணமாகவும், அவரது கோரிக்கையின் பேரிலும் இந்தியா – அமெரிக்கா இடையே உடனடியாக அமலுக்கு வரும் வகையில் வர்த்தக ஒப்பந்தத்திற்கு தாங்கள் ஒப்புக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் அமெரிக்கா விதித்த பரஸ்பர வரி 25 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக குறையும் என்று சுட்டிக்காட்டியுள்ள ட்ரம்ப்,


அமெரிக்க பொருட்கள் மீதான வரியை இந்தியா பூஜ்ஜியமாக குறைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் கூறியுள்ளார்.

அமெரிக்க பொருட்களை கூடுதலாக வாங்க மோடி உறுதிபூண்டுள்ளதாக கூறியுள்ள ட்ரம்ப், 500 பில்லியன் டாலர் அளவுக்கு அமெரிக்காவின் எரிசக்தி, தொழில்நுட்பம், விவசாயம், நிலக்கரி சார்ந்த பொருட்களை இந்தியா வாங்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்தியா உடனான நட்பு சிறப்பானதெனக் கூறியுள்ள ட்ரம்ப், வரும் காலங்களில் இது மேலும் வலுப்பெறும் என்றும் கூறியுள்ளார்.

மேலும், தானும், பிரதமர் மோடியம் காரியங்களைச் சாதிப்பவர்கள் என்றும் அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். (OUT)

Tags: Trumptrump newsUS President Trumptariff18 percent.25 percentfinalizedbjp indiatn bjpAgreementUnited States
Share
Tweet
SendShare
Previous Post

மருத்துவமனையில் எச்.ராஜாவைச் சந்தித்து நலம் விசாரித்த நடிகர் ரஜினிகாந்த்!

Next Post

வரி குறைக்கப்பட்டதற்கு 140 கோடி மக்கள் சார்பில் அமெரிக்காவிற்கு பிரதமர் மோடி நன்றி!

Related News

வெளியுறவு கொள்கையில் தனித்துவம் : உலகளாவிய ஆளுமையாக உயர்ந்த பிரதமர் மோடி – சிறப்பு தொகுப்பு!

இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள் மீது 100 % வரி விதிக்க வழி செய்யும் சட்டம் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்து!

திருப்பதி ஏழுமலையான் கோயில் 5ம் நாள் பிரம்மோற்சவ விழா – மோகினி அவதாரத்தில் உலா வந்த மலையப்ப சுவாமி!

இந்தியாவின் தனிநபர் கார்பன் உமிழ்வு உலக சராசரியில் பாதியை விட குறைவு – பிரதமர் மோடி

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாருடன் அசிம் முனீர் ரகசிய சந்திப்பு?

நமது மரபணுவில் தர்மம் உள்ளது – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு!

Load More

அண்மைச் செய்திகள்

செஞ்சியில் விநாயகர் ஊர்வலம் கோலாகலம்!

மதுராந்தகம், தாராபுரம் அதிமுகவின் கோட்டை – இபிஎஸ் பேட்டி!

சென்னையில் இன்று பிரமாண்ட விநாயகர் சிலை ஊர்வலம் – 16, 500 போலீசார் குவிப்பு!

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்; இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது

51,000 இளைஞர்களுக்கு மத்திய அரசு பணி; ஆணைகளை வழங்கினார் பிரதமர் மோடி

சிட்டா கேட்டு விண்ணப்பித்தவரிடம் மீன் வறுவல் வாங்கி வரச்சொன்ன விஏஓ சஸ்பெண்ட்!

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

அம்மா, அப்பாவுக்கு நன்றி – சிக்மா பட விழாவில் இயக்குநர் ஜேசன் சஞ்சய் பேச்சு!

கடற்கரையை தூய்மையாக வைத்திருப்பது ஒவ்வொெரு குடிமகனின் பொறுப்பு : ஆளுநர் அர்லேகர்

அரிசி விலை 25 முதல் 30 % உயர்வு – 26 கிலோ பொன்னி அரிசி ரூ.1, 800க்கு விற்பனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies