அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்த காசா அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது!
Aug 27, 2026, 08:42 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்த காசா அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது!

Murugesan M by Murugesan M
Oct 14, 2025, 12:12 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்த காசா அமைதி ஒப்பந்தம் அதிகாரப்பூர்வமாகக் கையெழுத்தானது.

இஸ்ரேல்-காசா இடையேயான போர் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முன்மொழிந்த 20 அம்சங்கள் கொண்ட ஒப்பந்தத்தால் முடிவுக்கு வந்துள்ளது. ட்ரம்ப் அறிவித்த காசா அமைதி ஒப்பந்தம் அதிகாரப்பூர்வமாக எகிப்தில் கையெழுத்தானது.

எகிப்தின் ஷர்ம் எல் ஷேக் நகரில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் எகிப்து அதிபர் அப்தெல் ஃபட்டா எல் சிசி தலைமையில் காசா அமைதி மாநாடு நடைபெற்றது.

இதில், ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் மற்றும் 20க்கும் மேற்பட்ட உலக நாடுகளின் தலைவர்கள், அவர்கள் சார்பில் அனுப்பப்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

இந்தியாவின் சார்பில் வெளியுறவுத்துறை இணையமைச்சர் கிர்த்தி வர்தன் சிங் கலந்து கொண்டார்.

மாநாட்டில், காசா அமைதி ஒப்பந்தத்தில் அதிபர் ட்ரம்ப் கையெழுத்திட்டார். அதைத் தொடர்ந்து, ட்ரம்ப் தலைமையில், உலகத் தலைவர்கள் ஆதரவுடன் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.

காசா அமைதி மாநாட்டில் பேசிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இது மத்திய கிழக்கைத் தாண்டி உலக வரலாற்றில் ஒரு முக்கியமான தருணம் என்று கூறினார்.

காசாவுக்கு ஆதரவு வழங்கி மக்களை உயர்த்த அனைவரும் ஒப்புக்கொண்டதாகக் கூறிய அவர், காசா மறுசீரமைக்கப்பட வேண்டியதையும் சுட்டிக் காட்டினார்.

மக்களுக்குப் பாதுகாப்பான சூழலை உருவாக்க அனைவரும் ஒப்புக் கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

காசாவில் நடந்த போர், பல வருட துன்பங்களுக்குப் பிறகு தற்போது முடிந்துள்ளதாகக் கூறிய அவர், மனிதாபிமான உதவிகள் பெருமளவில் வந்து கொண்டிருப்பதாகவும், அதற்காக அமைதி மாநாட்டில் பங்கேற்ற பல நாடுகள் நிதி வழங்கியுள்ளதாகவும் கூறினார்.

காசாவில் மறுசீரமைப்பு தொடங்குவதாகக் கூறிய ட்ரம்ப், ஒரு புதிய நாள் உதயமாகும் காட்சி அழகாக உள்ளதாகக் குறிப்பிட்டார்.

தான் ஒரு சிறந்த எதிர்காலத்தை உறுதிசெய்வதில் பங்குதாரராக இருக்க விரும்புவதாகக் கூறிய அவர், 3ஆம் உலகப் போர் நடைபெறாது என நம்புவதாகவும் தெரிவித்தார்.

இந்தியா ஒரு சிறந்த நாடு என்றும், பிரதமர் மோடி தனக்கு மிகவும் நெருக்கமான நண்பர் எனவும் கூறிய அதிபர் ட்ரம்ப், பிரதமர் மோடி அற்புதமான பணியைச் செய்துள்ளதாகவும் பாராட்டினார். பாகிஸ்தானும் இந்தியாவும் இனி நல்லுறவுடன் இருக்கப் போவதாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டார்.

Tags: அமெரிக்க அதிபர் ட்ரம்ப்காசா அமைதி ஒப்பந்தம்The Gaza peace deal announced by US President Trump has been signed
Share
Tweet
SendShare
Previous Post

ஜம்மு காஷ்மீரில் சுற்றுலாவை மேம்படுத்த நடவடிக்கை!

Next Post

6-வது நாளாக தொடரும் டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம்!

Related News

ஈரான் மீது அமெரிக்காவின் பொருளாதார தடை : இந்தியாவின் வர்த்தகத்திற்கு என்ன பாதிப்பு ஏற்படும்? – சிறப்பு தொகுப்பு!

நேபாளம் கோசி ஆற்றில் காட்டாற்று வெள்ளம் – ஏராளமானோர் மாயம்!

நியூயார்க் சென்ற ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் – அமெரிக்க வாழ் இந்தியர்கள் உற்சாக வரவேற்பு!

ஒரு கழுதையின் விலை ரூ.3 லட்சம் : சீனாவிற்கு ஏற்றுமதியாகும் பாகிஸ்தான் கழுதைகள் – சிறப்பு தொகுப்பு!

ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக ஒரு சொட்டு கச்சா எண்ணெய்கூட செல்ல அனுமதிக்க மாட்டோம் – ஈரான் எச்சரிக்கை!

எரிவாயு தட்டுப்பாடு : வங்கதேசத்தில் தொழிற்சாலைகள் மூடல்!

Load More

அண்மைச் செய்திகள்

நேபாள பெருவெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 160 ஆக உயர்வு – மாயமானவர்களை தேடும் பணி தீவிரம்!

நேபாள வெள்ளத்தில் ஆன்மிக பயணம் மேற்கொண்ட தமிழர்களின் 2 வேன்கள் அடித்துச் செல்லப்பட்டதா?

நேபாள பிரதமருடன் தொலைபேசியில் பேச்சு – அனைத்து உதவிகளும் செய்ய தயாராக உள்ளதாக மோடி உறுதி!

மேட்டூர் அணை வரும் 28ம் தேதி திறப்பு? – காவல்துறை உயரதிகாரிகள் ஆய்வு!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் வரும் 1ம் தேதி முதல் பக்தர்கள் செல்போன் பயன்படுத்த தடை – அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு!

பரந்துார் விமான நிலைய திட்டம் ரத்து அறிவிப்பு – காரணம் என்ன?

சென்னை மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் – மண்டல அளவில் பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்!

மகளிருக்கு மாதம் ரூ. 2,500 – டெல்லி முதல்வர் ரேகா குப்தா தொடங்கி வைத்தார்!

பண்ருட்டி அருகே மூட்டைக்கு ரூ.50 கேட்கும் அரசு நெல் கொள்முதல் நிலைய ஊழியர்கள் – விவசாயிகள் குற்றச்சாட்டு!

ஓணம் பண்டிகை – கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோயிலில் பூஜை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies