கரூர் துயர சமபவத்திற்கு காவல்துறையின் கவனக்குறைவே காரணம் - பேரவையில் நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!
Jan 14, 2026, 03:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கரூர் துயர சமபவத்திற்கு காவல்துறையின் கவனக்குறைவே காரணம் – பேரவையில் நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

Ramamoorthy S by Ramamoorthy S
Oct 15, 2025, 04:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கரூர் துயரச் சமபவத்திற்கு காவல்துறையின் கவனக்குறைவே காரணம் என பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.

கரூர் துயர சம்பவம் தொடர்பாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இடையே அனல் பறக்கும் விவாதம் நடைபெற்றது.

சட்டப்பேரவையில் பேசிய நயினார் நாகேந்திரன், கடந்த சில ஆண்டுகளாக எதிர்க்கட்சிகள் கூட்டம் நடத்த நீதிமன்றத்தை நாட வேண்டியுள்ளது என்றும், ஆளுங்கட்சி நீதிமன்றங்களை நாடுவதே இல்லை எனவும் தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்டு பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், கூட்டம் நடத்துவதற்கான இடத்தில் அனுமதி தரவில்லை என்பதை ஆதாரத்துடன் சொன்னால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

இதனை தொடர்ந்து பேசிய நயினார் நாகேந்திரன், தவெகவினர் கேட்ட ரவுண்டானா பகுதியை கொடுத்திருந்தால் நெருக்கடி ஏற்பட்டிருக்காது என்றும், பாட்டிலுக்கு பத்து ரூபாய் என பாடும்போது மின்சாரம் தடைப்பட்டு, லத்தி சார்ஜ் நடத்தப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

இதனை அடுத்து பேசிய முதலமைச்சர், கரூர் கூட்டத்தில் லத்தி சார்ஜ் நடைபெறவில்லை என தெளிவுப்படுத்தினார். தொடர்ந்து பேசிய நயினார் நாகேந்திரன், கரூர் கூட்டத்தில் ரவுடிகள் புகுந்ததாகவும், செருப்பு வீசப்பட்டதாகவும் கூறினார்.

இதற்கு பதிலளித்த முதலமைச்சர், திட்டமிட்டு யாரும் செருப்பு வீசவில்லை என்றும், குடிநீர் கேட்டுதான் செருப்பு வீசியிருப்பதாக கருதுகிறேன் எனவும் தெரிவித்தார்.
மேலும், அனைத்து விசாரணைகளும் சிபிஐ விசாரணையில் வெளிவரும் என முதலமைச்சர் கூறினார்.

பின்னர் பேசிய நயினார் நாகேந்திரன், எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டும் கூட்டத்திற்கு காவல்துறை போதுமான அளவு வருவதில்லை என்றும், இந்து முன்னணி நடத்திய முருக பக்தர்கள் மாநாட்டிற்கு ஒரு காவலர் கூட உள்ளே வரவில்லை எனவும் தெரிவித்தார்.

மேலும், காவல்துறையின் கவனக் குறைவால்தான் கரூரில் அசம்பாவிதம் நடைபெற்றது என்பதை பகிரங்கமாக குற்றம்சாட்டினார். இதனை தொடர்ந்து, பாஜக உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

Tags: karur stampede 2025karur stampede victimskarur stampede newskarur stampede deathkarur stampede latesttvk karur stampede casekarur stampede causetamil nadu assembelyNainar Nagendrankarur stampedetvk karur stampede
ShareTweetSendShare
Previous Post

கரூர் விவகாரத்தில் சிபிஐ விசாரணை மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் – வானதி சீனிவாசன்

Next Post

கரூரில் அதிமுகவுக்கு அனுமதி மறுக்கப்பட்ட இடத்தில் தவெகவுக்கு அனுமதி – இபிஎஸ்

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies