கரூர் துயர சமபவத்திற்கு காவல்துறையின் கவனக்குறைவே காரணம் - பேரவையில் நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!
Oct 15, 2025, 06:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கரூர் துயர சமபவத்திற்கு காவல்துறையின் கவனக்குறைவே காரணம் – பேரவையில் நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Oct 15, 2025, 04:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கரூர் துயரச் சமபவத்திற்கு காவல்துறையின் கவனக்குறைவே காரணம் என பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.

கரூர் துயர சம்பவம் தொடர்பாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இடையே அனல் பறக்கும் விவாதம் நடைபெற்றது.

சட்டப்பேரவையில் பேசிய நயினார் நாகேந்திரன், கடந்த சில ஆண்டுகளாக எதிர்க்கட்சிகள் கூட்டம் நடத்த நீதிமன்றத்தை நாட வேண்டியுள்ளது என்றும், ஆளுங்கட்சி நீதிமன்றங்களை நாடுவதே இல்லை எனவும் தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்டு பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், கூட்டம் நடத்துவதற்கான இடத்தில் அனுமதி தரவில்லை என்பதை ஆதாரத்துடன் சொன்னால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

இதனை தொடர்ந்து பேசிய நயினார் நாகேந்திரன், தவெகவினர் கேட்ட ரவுண்டானா பகுதியை கொடுத்திருந்தால் நெருக்கடி ஏற்பட்டிருக்காது என்றும், பாட்டிலுக்கு பத்து ரூபாய் என பாடும்போது மின்சாரம் தடைப்பட்டு, லத்தி சார்ஜ் நடத்தப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

இதனை அடுத்து பேசிய முதலமைச்சர், கரூர் கூட்டத்தில் லத்தி சார்ஜ் நடைபெறவில்லை என தெளிவுப்படுத்தினார். தொடர்ந்து பேசிய நயினார் நாகேந்திரன், கரூர் கூட்டத்தில் ரவுடிகள் புகுந்ததாகவும், செருப்பு வீசப்பட்டதாகவும் கூறினார்.

இதற்கு பதிலளித்த முதலமைச்சர், திட்டமிட்டு யாரும் செருப்பு வீசவில்லை என்றும், குடிநீர் கேட்டுதான் செருப்பு வீசியிருப்பதாக கருதுகிறேன் எனவும் தெரிவித்தார்.
மேலும், அனைத்து விசாரணைகளும் சிபிஐ விசாரணையில் வெளிவரும் என முதலமைச்சர் கூறினார்.

பின்னர் பேசிய நயினார் நாகேந்திரன், எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டும் கூட்டத்திற்கு காவல்துறை போதுமான அளவு வருவதில்லை என்றும், இந்து முன்னணி நடத்திய முருக பக்தர்கள் மாநாட்டிற்கு ஒரு காவலர் கூட உள்ளே வரவில்லை எனவும் தெரிவித்தார்.

மேலும், காவல்துறையின் கவனக் குறைவால்தான் கரூரில் அசம்பாவிதம் நடைபெற்றது என்பதை பகிரங்கமாக குற்றம்சாட்டினார். இதனை தொடர்ந்து, பாஜக உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

Tags: karur stampede 2025karur stampede victimskarur stampede newskarur stampede deathkarur stampede latesttvk karur stampede casekarur stampede causetamil nadu assembelyNainar Nagendrankarur stampedetvk karur stampede
ShareTweetSendShare
Previous Post

கரூர் விவகாரத்தில் சிபிஐ விசாரணை மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் – வானதி சீனிவாசன்

Next Post

கரூரில் அதிமுகவுக்கு அனுமதி மறுக்கப்பட்ட இடத்தில் தவெகவுக்கு அனுமதி – இபிஎஸ்

Related News

இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு மீண்டும் தபால் பார்சல் சேவை தொடக்கம்!

“இட்லி கடை” திரைப்படம் நடிகர் தனுஷை ஓர் இயக்குநராக உயர்த்தியுள்ளது – அண்ணாமலை பாராட்டு!

மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்தில் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் புதிய முதலீடாக ₹15,000 கோடி வருகிறதா, இல்லையா? – நயினார் நாகேந்திரன்

15 நாட்களில் குடிநீர் குழாய் இணைப்பு வாக்குறுதி என்ன ஆனது? – நயினார் நாகேந்திரன் கேள்வி

கரூரில் அதிமுகவுக்கு அனுமதி மறுக்கப்பட்ட இடத்தில் தவெகவுக்கு அனுமதி – இபிஎஸ்

Load More

அண்மைச் செய்திகள்

கரூர் துயர சமபவத்திற்கு காவல்துறையின் கவனக்குறைவே காரணம் – பேரவையில் நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

கரூர் விவகாரத்தில் சிபிஐ விசாரணை மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் – வானதி சீனிவாசன்

சட்டப்பேரவைக்கு கருப்பு பட்டை அணிந்து சென்ற அதிமுக உறுப்பினர்களை சிறைவாசிகளோடு ஒப்பீடு – அமைச்சர் ரகுபதிக்கு கண்டனம்!

மாங்காடு அருகே போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த 35 பேர் தப்பியோட்டம்!

கர்நாடகா: டிராக்டர் மீது அதிவேக ஸ்கூட்டர் மோதி விபத்து – வீடியோ வைரல்!

வேலூர் : சுமார் 100 ஏக்கர் பரப்பிலான நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின!

15% ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் அமேசான்!

ராணிப்பேட்டை : தொடர்ந்து பெய்யும் கனமழை – முழு கொள்ளளவை எட்டிய 144 ஏரிகள்!

4-வது விமானம் தாங்கி கப்பலை கட்டி வரும் சீனா!

இருண்ட எதிர்காலம் : அச்சத்தில் அகல்விளக்கு மண்பாண்ட தொழிலாளர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies