கரூர் துயர சமபவத்திற்கு காவல்துறையின் கவனக்குறைவே காரணம் - பேரவையில் நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!
Sep 20, 2026, 02:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கரூர் துயர சமபவத்திற்கு காவல்துறையின் கவனக்குறைவே காரணம் – பேரவையில் நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

Ramamoorthy S by Ramamoorthy S
Oct 15, 2025, 04:01 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கரூர் துயரச் சமபவத்திற்கு காவல்துறையின் கவனக்குறைவே காரணம் என பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.

கரூர் துயர சம்பவம் தொடர்பாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இடையே அனல் பறக்கும் விவாதம் நடைபெற்றது.

சட்டப்பேரவையில் பேசிய நயினார் நாகேந்திரன், கடந்த சில ஆண்டுகளாக எதிர்க்கட்சிகள் கூட்டம் நடத்த நீதிமன்றத்தை நாட வேண்டியுள்ளது என்றும், ஆளுங்கட்சி நீதிமன்றங்களை நாடுவதே இல்லை எனவும் தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்டு பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், கூட்டம் நடத்துவதற்கான இடத்தில் அனுமதி தரவில்லை என்பதை ஆதாரத்துடன் சொன்னால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

இதனை தொடர்ந்து பேசிய நயினார் நாகேந்திரன், தவெகவினர் கேட்ட ரவுண்டானா பகுதியை கொடுத்திருந்தால் நெருக்கடி ஏற்பட்டிருக்காது என்றும், பாட்டிலுக்கு பத்து ரூபாய் என பாடும்போது மின்சாரம் தடைப்பட்டு, லத்தி சார்ஜ் நடத்தப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

இதனை அடுத்து பேசிய முதலமைச்சர், கரூர் கூட்டத்தில் லத்தி சார்ஜ் நடைபெறவில்லை என தெளிவுப்படுத்தினார். தொடர்ந்து பேசிய நயினார் நாகேந்திரன், கரூர் கூட்டத்தில் ரவுடிகள் புகுந்ததாகவும், செருப்பு வீசப்பட்டதாகவும் கூறினார்.

இதற்கு பதிலளித்த முதலமைச்சர், திட்டமிட்டு யாரும் செருப்பு வீசவில்லை என்றும், குடிநீர் கேட்டுதான் செருப்பு வீசியிருப்பதாக கருதுகிறேன் எனவும் தெரிவித்தார்.
மேலும், அனைத்து விசாரணைகளும் சிபிஐ விசாரணையில் வெளிவரும் என முதலமைச்சர் கூறினார்.

பின்னர் பேசிய நயினார் நாகேந்திரன், எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டும் கூட்டத்திற்கு காவல்துறை போதுமான அளவு வருவதில்லை என்றும், இந்து முன்னணி நடத்திய முருக பக்தர்கள் மாநாட்டிற்கு ஒரு காவலர் கூட உள்ளே வரவில்லை எனவும் தெரிவித்தார்.

மேலும், காவல்துறையின் கவனக் குறைவால்தான் கரூரில் அசம்பாவிதம் நடைபெற்றது என்பதை பகிரங்கமாக குற்றம்சாட்டினார். இதனை தொடர்ந்து, பாஜக உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

Tags: karur stampede 2025karur stampede victimskarur stampede newskarur stampede deathkarur stampede latesttvk karur stampede casekarur stampede causetamil nadu assembelyNainar Nagendrankarur stampedetvk karur stampede
Share
Tweet
SendShare
Previous Post

கரூர் விவகாரத்தில் சிபிஐ விசாரணை மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் – வானதி சீனிவாசன்

Next Post

கரூரில் அதிமுகவுக்கு அனுமதி மறுக்கப்பட்ட இடத்தில் தவெகவுக்கு அனுமதி – இபிஎஸ்

Related News

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்; இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது

51,000 இளைஞர்களுக்கு மத்திய அரசு பணி; ஆணைகளை வழங்கினார் பிரதமர் மோடி

வெளியுறவு கொள்கையில் தனித்துவம் : உலகளாவிய ஆளுமையாக உயர்ந்த பிரதமர் மோடி – சிறப்பு தொகுப்பு!

இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள் மீது 100 % வரி விதிக்க வழி செய்யும் சட்டம் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்து!

திருப்பதி ஏழுமலையான் கோயில் 5ம் நாள் பிரம்மோற்சவ விழா – மோகினி அவதாரத்தில் உலா வந்த மலையப்ப சுவாமி!

இந்தியாவின் தனிநபர் கார்பன் உமிழ்வு உலக சராசரியில் பாதியை விட குறைவு – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

சிட்டா கேட்டு விண்ணப்பித்தவரிடம் மீன் வறுவல் வாங்கி வரச்சொன்ன விஏஓ சஸ்பெண்ட்!

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

அம்மா, அப்பாவுக்கு நன்றி – சிக்மா பட விழாவில் இயக்குநர் ஜேசன் சஞ்சய் பேச்சு!

கடற்கரையை தூய்மையாக வைத்திருப்பது ஒவ்வொெரு குடிமகனின் பொறுப்பு : ஆளுநர் அர்லேகர்

அரிசி விலை 25 முதல் 30 % உயர்வு – 26 கிலோ பொன்னி அரிசி ரூ.1, 800க்கு விற்பனை!

இன்றைய தங்கம் விலை!

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாருடன் அசிம் முனீர் ரகசிய சந்திப்பு?

சிவகங்கை இரட்டை கொலை வழக்கு : மேலும் 5 பேர் கைது!

நமது மரபணுவில் தர்மம் உள்ளது – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு!

HAL நிறுவனத்தில் தயாரான FOC LCA  உள்ளிட்ட 3 பயிற்சி விமானங்கள் – விமானப்படையிடம் ஒப்படைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies