மதுரை மாநகராட்சி முறைகேட்டின் மர்மம் எப்போது விலகும்? : நயினார் நாகேந்திரன்
Mar 22, 2026, 04:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மதுரை மாநகராட்சி முறைகேட்டின் மர்மம் எப்போது விலகும்? : நயினார் நாகேந்திரன்

Ramamoorthy S by Ramamoorthy S
Oct 18, 2025, 11:17 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரை மாநகராட்சி முறைகேட்டின் மர்மம் எப்போது விலகும்? தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் விடுத்துள்ள பதிவில், மதுரை மாநகராட்சியின் சொத்து வரி வசூலில் சுமார் ரூ.150 கோடிக்கும் அதிகமாக முறைகேடுகள் நடந்திருப்பதாகப் புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து, மதுரை மேயர் இந்திராணி பொன் வசந்த் தனது பதவியை ராஜினாமா செய்திருப்பது கடும் அதிர்ச்சியையும் பல்வேறு குழப்பங்களையும் ஏற்படுத்துகிறது என தெரிவித்துள்ளார்.

திமுக அமைச்சர்களுக்கும், முக்கியப் பிரமுகர்களுக்கும் தொடர்பிருக்கலாம் எனச் சந்தேகிக்கக் கூடிய மதுரை முறைகேடு விவகாரத்தில் மேயரின் கணவர் தடாலடியாக கைது செய்யப்படுவதையும், மேயர் கமுக்கமாக ராஜினாமா செய்வதையும் பார்த்தால், சிறிய மீன்களைப் பலியிட்டு பெரிய தலைகளைக் காப்பாற்ற அறிவாலய
அரசு முயற்சிக்கிறதோ என்ற சந்தேகம் மக்கள் மனதில் வலுக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

ஊழல் குற்றச்சாட்டு, நிர்வாகக் குளறுபடிகள், நம்பிக்கையில்லா தீர்மானம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், தமிழகத்தின் முக்கிய மாநகராட்சிகளான கோவை, நெல்லை ஆகிய பகுதிகளை சேர்ந்த திமுக மேயர்கள் இதுவரை ராஜினாமா செய்துள்ளனர்.

அந்த வரிசையில் தற்போது மதுரையும் இணைந்திருப்பது, உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிப்பதில் திமுக அரசு எந்தளவிற்கு தோல்வியடைந்துள்ளது என்பதற்கான எடுத்துக்காட்டு. மக்களுக்கு அடிப்படை வசதிகளைச் செய்து தர வேண்டிய தமிழக உள்ளாட்சி அமைப்புகளை, மக்கள் பணத்தைக் கொள்ளையடிக்கும் கருவிகளாக மாற்றி வைத்திருப்பது தான் திமுக அரசின் நாடு போற்றும் நல்லாட்சியா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்

மக்களின் எதிர்ப்புகளைச் சமாளிக்க மேயர்கள் ராஜினாமா, புது மேயர் பொறுப்பேற்பு எனத் திமுக அரசு என்னதான் நாடகம் ஆடினாலும், மாநிலம் முழுவதும் நிலவும் நிர்வாகச் சீர்கேடுகள், ஊழல் வரி வசூலில் நடக்கும் மோசடி குறித்து சி.பி.ஐ., விசாரணை நடத்தினால் தான் உண்மை வெளியே வரும் என்றும் நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

Tags: nagendranbjp mla nainar nagendran pressmeetbjp nainar nagendran speechMadurai Corporation scamindrani Pon VasanthNainar NagendranNainar Nagendran speechnainar nagendran bjpbjp nainar nagendran
ShareTweetSendShare
Previous Post

சென்னையில் வழக்கறிஞர் தாக்கப்பட்ட விவகாரம் – போலீசாருக்கு சரமாரி கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்றம்!

Next Post

தென்கிழக்கு அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி – வானிலை ஆய்வு மையம் தகவல்!

Related News

திமுகவை நிராகரிக்க வேண்டிய நேரம் இது – அண்ணாமலை

ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியனுடன் தொலைபேசியில் உரையாடிய பிரதமர் மோடி

அமிட்ஷாவுடன் TTV தினகரன் சந்திப்பு

பிரசாரத்தில் சிறுவர்களை பயன்படுத்தியதாக த.வெ.க மாவட்ட செயலாளர் மீது வழக்குப்பதிவு

அமெரிக்காவின் தாக்குதலுக்கு இடையே கச்சா எண்ணெய் விற்பனை ஜோர் – நாள்தோறும் 1100 கோடி வருமானம் ஈட்டும் ஈரான்!

திருநள்ளாறு ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் குவிந்த பக்தர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் – பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

தமிழகத்தில் என்டிஏ கூட்டணி ஆட்சி அமைக்கும் – எல்.முருகன் உறுதி!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சந்திரபாபு நாயுடு சுவாமி தரிசனம்!

கூட்டணியில் இருந்தாலும் போராடித்தான் தொகுதிகள் பெற வேண்டியுள்ளது – திருமாவளவன் வேதனை!

பாகிஸ்தான் ராணுவத்திற்கும், ஐஎஸ்ஐ-க்கும் இடையே மோதல்!

திருப்பரங்குன்றம் மலைக்கு சென்ற இஸ்லாமியர்கள் – போலீசாருடன் வாக்குவாதம்!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் – கோத்தகிரியில் மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆலோசனை!

இணையத்தில் ஒருவரின் அனுமதியின்றி, அவரது அடையாளம், குரல் அல்லது தோற்றத்தை தவறாக சித்தரிக்கும் பதிவுகளுக்கு தடை – அர்ச்சனா பட்நாயக்

பேச்சுவார்த்தை நடத்த ஈரானிடம் தலைவர்கள் இல்லை – அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

ஆர்.எஸ்.எஸ். நிர்வாக அமைப்பில் மாற்றம் – மாநிலங்கள் நீக்கப்பட்டு கோட்டங்களாக பிரிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies