முதலமைச்சர் தொகுதியிலேயே 9,000 போலி வாக்காளர்கள் - நயினார் நாகேந்திரன்
Jan 14, 2026, 04:28 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

முதலமைச்சர் தொகுதியிலேயே 9,000 போலி வாக்காளர்கள் – நயினார் நாகேந்திரன்

Murugesan M by Murugesan M
Nov 5, 2025, 12:49 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

முதலமைச்சர் ஸ்டாலினின் தொகுதியிலேயே போலி வாக்காளர்கள் ஒன்பதாயிரம் பேர் இருப்பதாகப் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள YMCA மைதானத்தில் தமிழக பாஜக தொகுதி அமைப்பாளர்கள், இணை அமைப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் பயிலரங்கு கூட்டம் நடைபெற்றது.

இதில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான ஆயத்த பணிகள், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

இந்தப் பயிலரங்கத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தேர்தல் பொருளாளர் பைஜயந்த் பாண்டா, மேலிடப் பொறுப்பாளர் அரவிந்த் மேனன், பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை, மூத்த தலைவர்கள் தமிழிசை சௌந்தரராஜன், எச்.ராஜா, பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அப்போது பேசிய நயினார் நாகேந்திரன், தமிழகத்தில் 200 தொகுதிகளுக்கு மேல் NDA கூட்டணி வெற்றி பெற தாம் உழைக்க வேண்டும் என்று கூறினார். உதயநிதியை முதலமைச்சராக்கும் முயற்சியில் திமுக கூட்டணி ஈடுபட்டுள்ளதாகவும், முதலமைச்சர் ஸ்டாலினின் தொகுதியிலேயே போலி வாக்காளர்கள் ஒன்பதாயிரம் பேர் இருப்பதாகவும் குற்றஞ்சாட்டினார்.

அதனைத் தொடர்ந்து பேசிய தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பைஜெயந்த் பாண்டா, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கைச் சீரமைக்கவும், ஊழலை ஒழிக்கவும், மாற்றம் தேவை என்கிற சூழலில் உள்ளதாகக் கூறினார்.

திமுக கூட்டணி இந்த முறை போலி வாக்காளர்களை வைத்துக் கொண்டு 200 தொகுதிகளுக்கும் மேல் வெற்றி பெற நினைத்துக் கொண்டிருப்பதாகவும், அதனைச் சாத்தியமற்றதாக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை பேசுகையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் அடுத்து எப்போது நடக்க போகிறது என்று தெரியவில்லை எனவும், அதனால் இந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை முறையாக நடைபெறுவதே தமது நோக்கமாக இருக்க வேண்டும் என்றும் கூறினார்.

மேலும், அடுத்த 100 நாட்கள் பாஜக மற்றும் தமிழகத்தில் முக்கியமான நாட்கள் என்றும் தெரிவித்தார்.

Tags: நயினார் நாகேந்திரன்9 thousands fake voters in the Chief Minister's constituency - Nainar Nagendran
ShareTweetSendShare
Previous Post

கங்கைகொண்ட சோழபுர பிரகதீஸ்வரர் கோயில் அன்னாபிஷேக விழா தொடக்கம்!

Next Post

சத்தீஸ்கர் : சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து – உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக உயர்வு!

Related News

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More

அண்மைச் செய்திகள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies