தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெளுத்து வாங்கிய மழை!
Mar 15, 2026, 06:33 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெளுத்து வாங்கிய மழை!

Ramamoorthy S by Ramamoorthy S
Nov 19, 2025, 07:20 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை ராயபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை வெளுத்து வாங்கியது.

வட சென்னை கடலோர பகுதிகளான ராயபுரம், வண்ணாரப்பேட்டை, காசிமேடு, திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதலே வானம் மேகம் மூட்டத்துடன் காணப்பட்டது.

இந்தநிலையில் பிற்பகலில் அப்பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இடைவிடாமல் கனமழை பெய்தது. இதன் காரணமாக பகலிலேயே வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டவாறே சென்றன.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிபூண்டி அருகே மழைநீருடன் கழிவு நீர் கலந்து சென்னை- கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் நுரை போல் சென்றதால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

அப்பகுதியில் கடும் துர்நாற்றமும் வீசியதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். மேலும், சிப்காட் பகுதியை ஒட்டி அமைந்துள்ள தாமரை ஏரியின் உள்வாய் பகுதி மூடப்பட்டுள்ளதால், கழிவுநீர் வெளியேற முடியாமல் சாலையின் இருபுறத்திலும் தேங்கியுள்ளது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான சிம்ஸ்பார்க், டி.டி.கே சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாரல் மழை பெய்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. சாலையில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி வாகனங்களை இயக்கிச் சென்றனர்.

தேனி மாவட்டம் வருசநாடு சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஆறுபோல் ஓடியது. இந்நிலையில், அப்பகுதியில் குளிர்ச்சியான சூழல் நிலவுவதோடு, நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்பதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தருமபுரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, தீர்த்தமலை, நல்லம்பள்ளி உள்பட பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்தது. இதனால் சாலைகளில் ஆங்காங்கே மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். தொடர்ந்து பனிப்பொழிவு ஏற்பட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

Tags: weather updatelow pressurerain warningChennai metro logical depttamilnadu rainimdheavy rainrain alert
ShareTweetSendShare
Previous Post

தமிழக முதல்வர் எங்கு சென்றாலும் கருப்புக்கொடி காட்டுவோம் – வானதி சீனிவாசன்

Next Post

கார்த்திகை மாத சிவராத்திரி – திருவண்ணாமலையில் கிரிவலம் சென்ற பக்தர்கள்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies