பிரதமர் வரும்போது கருப்பு பலூன், கருப்புக்கொடிகளை தமிழக அரசு அனுமதித்தால், முதலமைச்சர் எந்த இடத்திற்கு சென்றாலும் பாஜகவும் அதையே செய்யும் என பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் எச்சரித்துள்ளார்,
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமருக்கு எதிராக ஒட்டப்படும் போஸ்டர்கள் பிரிவினைவாதத்தை தூண்டுகிறது, அதற்கு திமுகவம், திகவும் தான் காரணம் என சாடினார்.
கருப்பு பலூன், கருப்புக்கொடிகளை அரசு அனுமதித்தால், அதே நடவடிக்கையை பாஜகவும் மேற்கொள்ளும் என்றும் எச்சரித்தார்.
பிரிவினைவாத அமைப்புகளுக்கும், முற்போக்கு அமைப்புகளுக்கும் பின்னால் திமுக இருக்கிறது என்றும் அவர் சாடினார்.
















