தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெளுத்து வாங்கிய மழை!
Sep 13, 2026, 01:06 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெளுத்து வாங்கிய மழை!

Ramamoorthy S by Ramamoorthy S
Nov 19, 2025, 07:20 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னை ராயபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை வெளுத்து வாங்கியது.

வட சென்னை கடலோர பகுதிகளான ராயபுரம், வண்ணாரப்பேட்டை, காசிமேடு, திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதலே வானம் மேகம் மூட்டத்துடன் காணப்பட்டது.

இந்தநிலையில் பிற்பகலில் அப்பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இடைவிடாமல் கனமழை பெய்தது. இதன் காரணமாக பகலிலேயே வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டவாறே சென்றன.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிபூண்டி அருகே மழைநீருடன் கழிவு நீர் கலந்து சென்னை- கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் நுரை போல் சென்றதால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

அப்பகுதியில் கடும் துர்நாற்றமும் வீசியதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். மேலும், சிப்காட் பகுதியை ஒட்டி அமைந்துள்ள தாமரை ஏரியின் உள்வாய் பகுதி மூடப்பட்டுள்ளதால், கழிவுநீர் வெளியேற முடியாமல் சாலையின் இருபுறத்திலும் தேங்கியுள்ளது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான சிம்ஸ்பார்க், டி.டி.கே சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாரல் மழை பெய்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. சாலையில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி வாகனங்களை இயக்கிச் சென்றனர்.

தேனி மாவட்டம் வருசநாடு சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஆறுபோல் ஓடியது. இந்நிலையில், அப்பகுதியில் குளிர்ச்சியான சூழல் நிலவுவதோடு, நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்பதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தருமபுரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, தீர்த்தமலை, நல்லம்பள்ளி உள்பட பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்தது. இதனால் சாலைகளில் ஆங்காங்கே மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். தொடர்ந்து பனிப்பொழிவு ஏற்பட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

Tags: weather updatelow pressurerain warningChennai metro logical depttamilnadu rainimdheavy rainrain alert
Share
Tweet
SendShare
Previous Post

தமிழக முதல்வர் எங்கு சென்றாலும் கருப்புக்கொடி காட்டுவோம் – வானதி சீனிவாசன்

Next Post

கார்த்திகை மாத சிவராத்திரி – திருவண்ணாமலையில் கிரிவலம் சென்ற பக்தர்கள்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies