தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெளுத்து வாங்கிய மழை!
Jul 29, 2026, 06:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெளுத்து வாங்கிய மழை!

Ramamoorthy S by Ramamoorthy S
Nov 19, 2025, 07:20 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை ராயபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை வெளுத்து வாங்கியது.

வட சென்னை கடலோர பகுதிகளான ராயபுரம், வண்ணாரப்பேட்டை, காசிமேடு, திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதலே வானம் மேகம் மூட்டத்துடன் காணப்பட்டது.

இந்தநிலையில் பிற்பகலில் அப்பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இடைவிடாமல் கனமழை பெய்தது. இதன் காரணமாக பகலிலேயே வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டவாறே சென்றன.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிபூண்டி அருகே மழைநீருடன் கழிவு நீர் கலந்து சென்னை- கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் நுரை போல் சென்றதால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

அப்பகுதியில் கடும் துர்நாற்றமும் வீசியதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். மேலும், சிப்காட் பகுதியை ஒட்டி அமைந்துள்ள தாமரை ஏரியின் உள்வாய் பகுதி மூடப்பட்டுள்ளதால், கழிவுநீர் வெளியேற முடியாமல் சாலையின் இருபுறத்திலும் தேங்கியுள்ளது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான சிம்ஸ்பார்க், டி.டி.கே சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாரல் மழை பெய்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. சாலையில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி வாகனங்களை இயக்கிச் சென்றனர்.

தேனி மாவட்டம் வருசநாடு சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஆறுபோல் ஓடியது. இந்நிலையில், அப்பகுதியில் குளிர்ச்சியான சூழல் நிலவுவதோடு, நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்பதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தருமபுரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, தீர்த்தமலை, நல்லம்பள்ளி உள்பட பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்தது. இதனால் சாலைகளில் ஆங்காங்கே மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். தொடர்ந்து பனிப்பொழிவு ஏற்பட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

Tags: weather updatelow pressurerain warningChennai metro logical depttamilnadu rainimdheavy rainrain alert
ShareTweetSendShare
Previous Post

தமிழக முதல்வர் எங்கு சென்றாலும் கருப்புக்கொடி காட்டுவோம் – வானதி சீனிவாசன்

Next Post

கார்த்திகை மாத சிவராத்திரி – திருவண்ணாமலையில் கிரிவலம் சென்ற பக்தர்கள்!

Related News

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies