சென்னையில் கனமழை : பல்வேறு இடங்களில் வெள்ளநீர் தேக்கம் - வாகன ஒட்டிகள், பொதுமக்கள் கடும் அவதி!
Jan 14, 2026, 01:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சென்னையில் கனமழை : பல்வேறு இடங்களில் வெள்ளநீர் தேக்கம் – வாகன ஒட்டிகள், பொதுமக்கள் கடும் அவதி!

பாத்திரம் மூலம் தண்ணீரை வெளியேற்றும் குடியிருப்பி வாசி!

Murugesan M by Murugesan M
Dec 2, 2025, 07:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கனமழை காரணமாகச் சென்னையில் பல்வேறு இடங்களில் வெள்ளநீர் தேங்கியதால் வாகன ஒட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.

“டிட்வா” புயல் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியதால் சென்னையில் கனமழை பெய்து வருகிறது.

இதன்காரணமாகப் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியதால் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளி சாலையில் மழைநீர் முழங்கால் அளவுக்குத் தேங்கி உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

அதேபோல் கோடம்பாக்கத்தில் ரங்கராஜபுரம், ஆஜீஷ் உள்ளிட்ட தெருக்களில் மழைநீர் முழங்கால் அளவுக்குத் தேங்கி உள்ளது.

இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சாலையைக் கடக்க முடியாமல் சிரமத்தைச் சந்தித்தனர். சாலைகளில் தேங்கிய மழைநீரை உடனடியாக வெளியேற்ற வேண்டுமென மாநகராட்சிக்குப் பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

சென்னையை அடுத்த திருவேற்காட்டில் ஏழுமலை நகர் பகுதியில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்களை வாங்க கூட வீட்டை விட்டு வெளியே செல்ல முடியவில்லை எனவும் மழைநீரில் பாம்புகள் மற்றும் விஷப்பூச்சிகள் உள்ளதால் அச்சமாக உள்ளதாகவும் பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

சென்னை திருவொற்றியூர் ராஜாஜி தெருவில் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகினர்.

இதனால் வீடுகளுக்குள் தேங்கிய மழைநீரை, பாத்திரம்மூலம் குடியிருப்பு வாசிகள் வெளியேற்றுகின்றனர். மேலும் அப்பகுதியில் தேங்கிய மழைநீரை மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டுமெனப் பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இதேபோல் திருவள்ளூர் மாவட்டம் அலமாதியில் 500க்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகினர்.

மழைக்காலங்களில் இப்பகுதியில் தண்ணீர் தேங்குவது வாடிக்கையாக உள்ளது எனவும் இது குறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லையெனவும் அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Tags: today newsHeavy rains in Chennai: Floodwaters accumulate in various places - motorists and the public are suffering greatlynewsfloodTodaychennai floodtn rainNEWS TODAY
ShareTweetSendShare
Previous Post

ஜி.எஸ்.டி பலனை மக்களுக்கு வழங்காமல் ஊட்டச்சத்தைப் பறிக்கும் ஆவின் – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

Next Post

அழிவின் விளிம்பில் அமேசான் காடுகள்!

Related News

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More

அண்மைச் செய்திகள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies