டிட்வா புயல் காரணமாக ராமேஸ்வரம் தீவுப் பகுதியில் பெய்த கனமழையால், ஓலைக்குடா மீனவர் கிராமம் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
டிட்வா புயல் காரணமாக ராமேஸ்வரம் தீவுப் பகுதியில் பெய்த கனமழை, ஓலைக்குடா மீனவர் கிராமத்தை வெள்ளக் காடாக மாற்றியுள்ளது.
மழை ஓய்ந்து பல நாட்கள் கடந்தும், பத்துக்கும் மேற்பட்ட வீடுகளைச் சுற்றி மழைநீர் வெளியேற வழியின்றி தேங்கி நிற்கிறது.
மேலும், பள்ளிகள் மூடப்பட்ட நிலையில், வீட்டில் படிக்கக்கூட வழி இல்லாமல் மாணவர்கள் தவித்து வருகின்றனர்.
மேலும் மீனவர்கள் பயன்படுத்தும் மிதவையின் மீது அமர்ந்து பாடங்களைப் படிக்க வேண்டிய அவலநிலை உருவாகியுள்ளது.
இதனால் மாணவர்களின் கல்வி உரிமையே கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளதாகப் பெற்றோர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
















