வட மாநிலங்களில் ஏலக்காய் விற்பனை மூலம் போடி திமுக கவுன்சிலர் 100 கோடிக்கு ரூபாய்க்கு மேல் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தேனி மாவட்டம் போடி நகராட்சி தலைவராக உள்ள ராஜராஜேஸ்வரியின் கணவரான சங்கர், திமுக மாநில செயற்குழு உறுப்பினராகவும், போடி நகராட்சி 29-வது வார்டு கவுன்சிலராகவும் உள்ளார்.
இவர் ஏலக்காய் வர்த்தக நிறுவனத்தை நடத்தி வரும் நிலையில், வட மாநிலங்களுக்கு பல டன் ஏலக்காய் அனுப்பியதில் வரி ஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்தது. புகாரின் அடிப்படையில் கடந்த 6-ம் தேதி சங்கருக்குச் சொந்தமான கிடங்கு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத் துறை, வருமானவரி மற்றும் வணிகவரி துறை அதிகாரிகள் இணைந்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படும் நிலையில், வரி ஏய்ப்பு தொடர்பான ஆதாரங்கள் உறுதியானதாக இருந்தால் கைது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
















