ராணிப்பேட்டை அருகே சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பிராய்லர் கோழி ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சித்தூரில் இருந்து சென்னைக்கு பாய்லர் கோழிகளை ஏற்றிக் கொண்டு ஈச்சர் லாரி புறப்பட்டது.
ராணிப்பேட்டை கே.எச்.மேம்பாலம் அருகே சென்றபோது ஓட்டுநரின் தூக்க கலக்கத்தால் சாலையோர தடுப்பின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார், விபத்தில் படுகாயமடைந்த ஓட்டுநரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து காரணமாகச் சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையைப் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் மாற்று பாதையில் வாகனங்கள் இயக்கப்பட்ட நிலையில், சாலையில் சிதறி கிடந்த கோழிகளை பொதுமக்கள் எடுத்த சென்றனர்.
















