பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பாக, சிறப்பு நீதிமன்றத்தில் தேசிய புலனாய்வு அமைப்பு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இதில், முக்கிய சதிகாரராக பாகிஸ்தானை தளமாகக் கொண்ட லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி சஜித் ஜாட் பெயர் இடம்பெற்றுள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் சுற்றுலா தலமான பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த வழக்கில் சிறப்பு நீதிமன்றத்தில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். பாகிஸ்தானை தளமாகக் கொண்ட லஷ்கர்-இ-தொய்பா, தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் பயங்கரவாத அமைப்பு உட்பட 7 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
1,597 பக்க குற்றப்பத்திரிகையில் பாகிஸ்தான் பயங்கரவாதி சஜித் ஜாட்டு குற்றம்சாட்டப்பட்டுள்ளது ஆப்ரேஷன் மகாதேவ் நடவடிக்கையின்போது இந்திய பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்ட மூன்று பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் பெயர்களும் இடம் பெற்றுள்ளன.
மூவரும் பைசல் ஜாட் என்கிற சுலேமான் ஷா, ஹபீப் தாஹிர் என்கிற ஜிப்ரான் மற்றும் ஹம்சா ஆப்கானி என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததற்காக கைது செய்யப்பட்ட பர்வைஸ் அகமது மற்றும் பஷீர் அகமது ஜோதட் ஆகிய இருவர் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பில் தொடர்புடையவர் என்பது உறுதி செய்யப்பட்டது. இந்த வழக்கில் மேலும் விசாரணை தொடர்வதாகவும் குற்றப்பத்திரிகையில் என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
















