வங்கதேச அரசுக்கு 24 நாட்கள் கெடு விதித்த மாணவர் அமைப்பு - முரண்டு பிடிக்கும் போராட்டக்காரர்கள் : சிறப்பு தொகுப்பு!
May 6, 2026, 06:56 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வங்கதேச அரசுக்கு 24 நாட்கள் கெடு விதித்த மாணவர் அமைப்பு – முரண்டு பிடிக்கும் போராட்டக்காரர்கள் : சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Dec 30, 2025, 07:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வங்கதேசத்தில் உஸ்மான் ஹாடி கொலை செய்யப்பட்ட வழக்கை 24 நாட்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என அந்நாட்டின் மாணவர் அமைப்பு கெடு விதித்துள்ளது. அத்துடன், இந்தியாவுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுக்கவும் அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது. படுகொலையில் இந்தியர்கள் யாரும் சம்மந்தப்படாத நிலையில், இரு நாட்டு உறவை பாதிக்கும் வகையிலான இந்த கோரிக்கைகள் குறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்.

கடந்தாண்டு வங்கதேசத்தில் அப்போதைய பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மாணவர் போராட்டம் வெடித்தது. அதில், இன்குலாப் மஞ்ச் (Inqilab Mancha) என்ற அமைப்பு முன்னிலை வகித்தது. அதன் ஒருங்கிணைப்பாளரான ஷெரீஃப் உஸ்மான் ஹாடி என்பவர் ஆயிரக்கணக்கான மாணவர்களை ஒன்றிணைத்து கடுமையான போராட்டத்தை முன்னெடுத்தார். அதன் விளைவாக, ஷேக் ஹசீனா நாட்டை விட்டு தப்பியோட வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்த சூழலில், வங்கதேசத்தில் புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் தேதி, கடந்த 11ம் தேதி அறிவிக்கப்பட்டது. அதற்கு மறுநாள் ஷெரீஃப் உஸ்மான் ஹாடி, பிரச்சார கூட்டம் ஒன்றில் பங்கேற்று உரையாற்றிக்கொண்டிருந்தார்.

அப்போது மர்மநபர்கள் நடத்திய திடீர் துப்பாக்கிச்சூட்டில் அவர் பலத்த காயமடைந்தார். உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிங்கப்பூரில் சிகிச்சை பலன்றி கடந்த 18ம் தேதி உஸ்மான் ஹாடி உயிரிழந்தார்.

இந்த படுகொலை குறித்து விசாரணை நடத்திய போலீசார், கொலையில் தொடர்புடைய நபர்கள் இந்தியாவிற்கு தப்பி சென்றதாக தெரிவித்தனர். உஸ்மான் ஹாடியின் கொலையில் 2 நபர்கள் சந்தேகிக்கப்படுவதாகவும், அவர்கள் இருவரும் மைமென்சிங் மாவட்டத்தில் உள்ள ஹலுகாட் எல்லை வழியாக இந்தியாவின் மேகாலயா மாநிலத்திற்குள் நுழைந்ததாகவும் விளக்கம் அளித்தனர். பின்னர், டாக்ஸி மூலம் இருவரும் துரா என்ற நகருக்கு சென்றுவிட்டதாக தெரிவித்தனர்.

ஆனால், வங்கதேச காவல்துறையின் இந்த குற்றச்சாட்டை மேகாலய காவல்துறையும், இந்தியாவின் எல்லை பாதுகாப்பு படையும் திட்டவட்டமாக மறுத்துள்ளன. மேலும், இந்த குற்றச்சாட்டு தவறான மற்றும் ஜோடிக்கப்பட்ட கதை எனவும் தெரிவித்துள்ளன.

இருப்பினும், இந்தியாவுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க இன்குலாப் மஞ்ச் அமைப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.

வங்கதேசத்தின் சுதந்திரத்தையும், இறையாண்மையையும் பாதுகாக்க இந்தியர்களின் பணி அனுமதியை தற்காலிகமாக நிறுத்த வேண்டும் எனவும், ஷேக் ஹசீனாவை
திருப்பி அனுப்ப மறுத்தால், இந்தியா மீது சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர வேண்டும் எனவும் அந்த அமைப்பு தற்போது கோரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன், முகமது யூனுஸ் தலைமையிலான அரசு ஹாடியின் படுகொலை குறித்த அனைத்து விசாரணைகளையும், இன்னும் 24 நாட்களுக்குள் முடிக்க வேண்டும் எனவும் இன்குலாப் மஞ்ச் அமைப்பு கெடு விதித்துள்ளது.

இதனிடையே, இந்த அமைப்பு சார்பில் வங்கதேசத்தின் பல்வேறு பகுதியில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அத்துடன், அந்நாட்டில் உள்ள இந்துக்கள் மீதான வன்முறையும் அதிகரித்து வருவதால் பதற்றமான சூழல் நிலவுகிறது.

இது குறித்த அண்மையில் கருத்து தெரிவித்த மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், முகமது யூனுஸ் தலைமையிலான ஆட்சியில் சிறுபான்மையினருக்கு எதிராக 2,900க்கும் மேற்பட்ட வன்முறை சம்பவங்கள் நடைபெற்றுள்ளதை சுட்டி காட்டினார்.

வங்கதேசத்தில் சட்டம் ஒழுங்கு மற்றும் பாதுகாப்பைப் பராமரிக்க வேண்டியது இடைக்கால அரசின் பொறுப்பு எனவும் அவர் வலியுறுத்தினார். அதேபோல, வங்கதேசத்தில் நிகழும் இந்துக்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த சூழலில், ஹாடியின் கொலை சம்பவத்தில் தொடர்ந்து இந்தியாவை குற்றம்சாட்டி வரும் மாணவர் அமைப்பின் போக்கு, இந்தியா – வங்கதேச உறவில் மேலும் விரிசலை ஏற்படுத்தும் என்றே கருதப்படுகிறது.

Tags: IndiaBangladeshPrime Minister Sheikh HasinaBangladesh protestUsman Hadi murderInqilab Mancha organizationவங்கதேச அரசுக்கு 24 நாட்கள் கெடு விதித்த மாணவர் அமைப்பு
ShareTweetSendShare
Previous Post

ஐஎன்எஸ்வி கௌண்டின்யா பயணம் ஒரு நாகரிகத்தின் சின்னம் – அண்ணாமலை பெருமிதம்!

Next Post

இது சிலிகுரி பகுதியை வலுப்படுத்த வேண்டிய நேரம் – ஜக்கி வாசுதேவ்

Related News

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகள் பெற்ற தவெக!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies