ட்ரம்பின் நாடு பிடிக்கும் பேராசை - வெனிசுலாவை தொடர்ந்து குறிவைக்கப்படும் நாடுகள்..சிறப்பு தொகுப்பு!
Jan 13, 2026, 11:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

ட்ரம்பின் நாடு பிடிக்கும் பேராசை – வெனிசுலாவை தொடர்ந்து குறிவைக்கப்படும் நாடுகள்..சிறப்பு தொகுப்பு!

Manikandan by Manikandan
Jan 8, 2026, 09:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வெனிசுலாவுக்குள் புகுந்து அந்நாட்டின் அதிபரையும் அவரது மனைவி சிலியா புளோரஸையும் கைது செய்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அடுத்தடுத்து, மேலும் சில லத்தீன் அமெரிக்க நாடுகளையும் ராணுவ நடவடிக்கை மூலம் கைப்பற்ற திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 1989ல் ஆபரேஷன் ஜஸ்ட் காஸ் என்கிற பெயரில் பனாமா மீது படையெடுத்த அமெரிக்கா, அந்நாட்டின் அப்போதைய அதிபர் மானுவல் நோரியேகாவைக் கைது செய்தது.

இப்படி இன்னொரு நாட்டுக்குள் புகுந்து அதிரடியாக அதிபரைக் கைது செய்து அந்நாட்டில் தனது பொம்மை அரசை நிறுவுவதை, 1823-ல் அப்போதைய அமெரிக்க அதிபர் ஜேம்ஸ் மன்றோவால் முன்வைக்கப்பட்ட கொள்கையாகும். எனவே இந்த கொள்கை மன்றோ கோட்பாடு என்று அழைக்கப்படுகிறது. அமெரிக்கா என்பது தெற்கு மற்றும் வடக்கு அமெரிக்காவையும் உள்ளடக்கிய பெரிய நிலப்பரப்பு என்பது தான் மன்றோ கொள்கை.

‘அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே’ என்ற சொன்னார் மன்றோவின் கொள்கையின் புதிய வடிவத்தை தான் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு கொள்கையாக அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

இந்த கொள்கையின்படியே, சர்வதேச சட்டங்களை மதிக்காமல், தெற்கு,வடக்கு மற்றும் மத்திய அமெரிக்க நாடுகளில் தான் நடத்தும் ராணுவ நடவடிக்கைகளை அமெரிக்கா நியாயப்படுத்துகிறது.

தனது விருப்பத்துக்கு ஏற்ப லத்தீன் அமெரிக்க நாடுகளில், அரசியல் முடிவுகளை ராணுவ நடவடிக்கையால் அமெரிக்கா எடுக்கும் என்பதற்கு வெனிசுலா மீதான நடவடிக்கையே ஒரு எடுத்துக்காட்டாகும்.

கொலம்பியாவின் இடதுசாரி ஜனாதிபதியான குஸ்டாவோ பெட்ரோவைப் பற்றி கடுமையாக விமர்சித்த ட்ரம்ப், ஒரு மோசமான நபரால் அந்த நாடு ஆளப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

வெனிசுலா அதிபர் மற்றும் அவரது மனைவியைக் கைதுசெய்து அமெரிக்காவுக்குக் கடத்திவந்த ட்ரம்ப், தனது அடுத்த இலக்கு மெக்சிகோ, கியூபா மற்றும் கொலம்பியா ஆகிய நாடுகள் தான் என எச்சரித்துள்ளார்.

கொக்கெய்ன் உற்பத்தி செய்து அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக விற்பனை செய்து வருவதாக கொலம்பிய அதிபர் குஸ்டாவோ பெட்ரோ மீது அதிபர் ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.

வெனிசுலாவில் அமெரிக்காவின் நடவடிக்கையை லத்தீன் அமெரிக்காவின் இறையாண்மை மீதான ஒரு தாக்குதல் என்று குறிப்பிட்டுள்ள பெட்ரோ, இது மனிதாபிமான நெருக்கடிக்கு வழிவகுக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, கியூபா பெரிய சிக்கலில் இருக்கிறது என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ எச்சரித்துள்ளார்.

வெனிசுலா அதிபர் மதுரோவுக்கு கியூபாவே பாதுகாப்பு அளித்தது என்று குற்றம்சாட்டிய மார்கோ ரூபியோ, அமெரிக்காவின் தாக்குதலில் இருந்து கியூபா தப்பிக்க முடியாது என்பதை சுட்டிக் காட்டியுள்ளார்.

முன்னதாக, கியூபாவை ஒரு தோல்வியுற்ற நாடு என்று கூறிய ட்ரம்ப், அந்நாட்டு மக்களுக்கு உதவ இருப்பதாகவும் கூறியிருந்தார்.

கியூப அதிபர் மிகுவல் டயஸ்-கனெல், வெனிசுவேலா மீதான தாக்குதலைக் கண்டிப்பதாகவும், சர்வதேச அமைப்புகள் அமெரிக்கா மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், “தாய்நாடு அல்லது மரணம்!” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல் வெனிசுலா அதிபர் கைது செய்யப்பட்ட சிறிது நொடியிலேயே, ட்ரம்பின் அரசு பணியாளர்களின் துணை தலைவர் ஸ்டீபன் மில்லரின் மனைவி (Katie Miller) கேட்டி மில்லர், விரைவில் என்று தலைப்பிட்டு, அமெரிக்கக் கொடியின் நிறத்தில் கிரீன்லாந்து வரைப் படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

அமெரிக்காவில் உள்ள டென்மார்க் தூதர் ஜெஸ்பர் மோலர் சோரன்சன், அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடான டென்மார்க்கின் ஒருமைப்பாட்டுக்கு உரிய முழு மரியாதை எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

கிரீன்லாந்தைக் கையகப்படுத்துவது குறித்த அச்சுறுத்தல்களை ட்ரம்ப் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று டென்மார்க்கின் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன் வலியுறுத்தியுள்ளார்.

கேட்டி மில்லரின் பதிவை மரியாதையற்றது என்று விமர்சித்துள்ள கிரீன்லாந்தின் பிரதமர் ஜென்ஸ்-ஃபிரடெரிக் நீல்சன், நாடுகளுக்கும் அதன் மக்களுக்கும் இடையிலான உறவுகள் பரஸ்பர மரியாதை மற்றும் சர்வதேச சட்டத்தின் அடிப்படையிலேயே கட்டியெழுப்பப்படுகின்றன என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பீதி அடைவதற்கோ அல்லது கவலைப்படுவதற்கோ எந்தக் காரணமும் இல்லை என்றும், கிரீன்லாந்து விற்பனைக்கு இல்லை என்றும், நாட்டின் எதிர்காலம் சமூக ஊடகப் பதிவுகளால் தீர்மானிக்கப்படுவதில்லை என்றும் ஃபிரடெரிக் நீல்சன் குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சூழலில், அதிபர் கிளாடியா ஷீன்பாம் கட்டுப்பாட்டில் மெக்சிகோ இல்லை என்று கூறியுள்ள ட்ரம்ப், போதைப்பொருள் கும்பலால் மெக்சிகோ அரசு நடத்தப்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது அதிகாரத்தைப் பிற நாடுகள் மீது செலுத்தும் ராணுவ நடவடிக்கை மூலம் அரசுகளை மாற்றுவது சர்வதேச அளவில் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது என்று புவிசார் அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

 

Tags: Venezuelan PresidentTRUMP ATTACKamericaworld warusDonald TrumpNicolas Maduro.A video of Venezuelan President Nicolas Maduro dancing goes viral
ShareTweetSendShare
Previous Post

செயற்கைக்கோளில் எரிபொருள் நிரப்பும் Aayu lSAT – 2026ல் இஸ்ரோவின் முதல் சாதனை! சிறப்பு தொகுப்பு

Next Post

பயங்கரவாதிகளுக்கு நீச்சல், ஸ்கூபா டைவிங் பயிற்சியளிக்கும் பாகிஸ்தான் – கடல் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ பயங்கரவாதிகள் திட்டம்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

காளைகளை அனுமதிப்பதில் பாரபட்சமா? – ஜல்லிக்கட்டு ஏற்பாட்டாளர்கள் மீது குவியும் புகார்

உலக நலனுக்காக பிரிக்ஸ் நாடுகளின் திறனை ஒன்றிணைக்க இந்தியாவின் தலைமைத்துவம் முயற்சிக்கும்! – ஜெய்சங்கர்

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies