பயங்கரவாதிகளுக்கு நீச்சல், ஸ்கூபா டைவிங் பயிற்சியளிக்கும் பாகிஸ்தான் - கடல் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ பயங்கரவாதிகள் திட்டம்!
Sep 17, 2026, 01:41 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பயங்கரவாதிகளுக்கு நீச்சல், ஸ்கூபா டைவிங் பயிற்சியளிக்கும் பாகிஸ்தான் – கடல் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ பயங்கரவாதிகள் திட்டம்!

Manikandan by Manikandan
Jan 8, 2026, 09:33 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

எல்லை தாண்டிய பயங்கரவாதத்தின் புதிய உத்தியாக இந்தியா மீது திட்டமிட்ட தாக்குதலை நடத்துவதற்காக பாகிஸ்தான் ஆதரவுடன் லஷ்கர்-இ-தொய்பா உள்ளிட்ட இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகள் ஸ்கூபா டைவர்ஸ் மற்றும் நீச்சல் வீரர்களுக்குப் பயங்கரவாத பயிற்சிகள் அளித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக ஆப்ரேஷன் சிந்தூரில்,பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இயங்கிவந்த உள்ள பயங்கரவாத அமைப்புகளின் தளங்கள் மற்றும் பயங்கரவாத பயிற்சி தளங்களைத் தாக்கி தரைமட்டமாக்கியது இந்தியா. இதில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானின் முக்கிய விமானப் படைத் தளங்களையும் இந்தியா தாக்கி அழித்தது.

மேலும், சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ள இந்தியா, ரத்தமும் தண்ணீரும் ஒன்றாக பாய முடியாது என்று அழுத்தம் திருத்தமாக கூறிவிட்டது.

இதனையடுத்து, லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஸ்-இ-முகமது ஆகிய பயங்கரவாத அமைப்புக்கள், பெண் ஜிகாதிகளை உருவாக்கும் திட்டத்தைக் கொண்டுவந்தது. மேலும், WHITE COLLAR பயங்கரவாதிகளையும் உருவாக்கத் தொடங்கியது. சமீபத்தில் டெல்லி செங்கோட்டையில் நடந்த பயங்கரவாத கார் குண்டு வெடிப்பிலும் டாக்டர்கள் ஜிகாதிகளாக செயல்பட்டது கணடுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்திய இராணுவத்தின் தீவிர கண்காணிப்பு மற்றும் நடவடிக்கையால் எல்லையில் பயங்கரவாதிகள் ஊடுருவல் தடுக்கப்பட்டுள்ளன. மீறி எல்லை தாண்டும் பயங்கரவாதிகள் வேட்டையாடப் படுகின்றனர்.

இந்நிலையில், இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு நீருக்கடியில் மறைந்திருக்கக்கூடிய ஸ்கூபா டைவர்ஸ் மற்றும் நீச்சல் வீரர்களுக்குப் பயிற்சி அளிக்கத் தொடங்கியுள்ளது.

இது ஒன்றும் புதிதல்ல. ஏற்கெனவே பாகிஸ்தானில் இருந்து,படகு மூலம் மும்பைக்கு வந்து,2008-ல் கொடூரமான மும்பை பயங்கரவாதத் தாக்குதலை இஸ்லாமிய பயங்கரவாதிகள் நடத்தியுள்ளனர்.

பாகிஸ்தானின் முக்கிய நகரங்களிலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு காஷ்மீரிலும் நீச்சல் மற்றும் ஸ்கூபா டைவிங் போன்ற தண்ணீர் சார்ந்த பயிற்சி நடவடிக்கைகள் பெருமளவில் நடைபெற்று வருகின்றன.

தண்ணீரில் சிக்கியவர்களை மீட்கும் பயிற்சி மற்றும் நீச்சல் விளையாட்டு பயிற்சி என்ற போர்வையில் , போலி போஸ்டர்களுடன், பயங்கரவாத பயிற்சிகள் வெளிப்படையாக நடத்தப்படுவதாகக் கூறப்படுகிறது.

லஷ்கர்-இ-தொய்பா மற்றும் jammu kashmir united movement பயங்கரவாத அமைப்பின் முக்கிய தளபதிகளான ரிஸ்வான் ஹனிஸ் மற்றும் அமீர் ஜியா ஆகியோர் இந்த தண்ணீர் பயிற்சி நடவடிக்கைகளில் பங்கேற்று மேற்பார்வையிடும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி உள்ளன.

இந்தப் பயிற்சிகள் மீட்புப் பணிகளுக்கோ பொழுதுபோக்கு விளையாட்டோ அல்ல என்றும், மாறாக ஊடுருவல் மற்றும் கடல்சார் பயங்கரவாத தாக்குதல்களுக்கான போர் தயார்நிலை பயிற்சிகள் என்று பாதுகாப்பு வல்லுநர்கள்தெரிவிக்கின்றனர்.

இது நாட்டுக்கு ஒரு தீவிரமான பாதுகாப்பு அச்சுறுத்தலாகவும் குறிப்பாக குஜராத் மற்றும் மகாராஷ்டிரா போன்ற எல்லையோர மாநிலங்களுக்கு அபாய எச்சரிக்கையாகவும் அமைந்துள்ளது.

நேபாளம், மற்றும் வங்கதேசம் வழியாகவும், கடல் வழியாகவும் இந்தியாவுக்குள் ஊடுருவ புது வழிகளை பாகிஸ்தான் ஆதரவு பெற்ற இஸ்லாமிய பயங்கரவாதிகள் திட்டமிட்டு வருவதாகவும் உளவுத் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமீப ஆண்டுகளில் நேபாளம் மற்றும் வங்கதேசத்தில் அரசியல் ஸ்திர தன்மை குலைந்துள்ளது. பாகிஸ்தான் இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு வசதியாகவும் இந்தியாவுக்கு சவாலாகவும் அமைந்துள்ளது என்று கூறப்படுகிறது.

Tags: lashkar e taibaIslamic terroristIslamic terrorist organizationsIndiapakistanArmyindian army
Share
Tweet
SendShare
Previous Post

ட்ரம்பின் நாடு பிடிக்கும் பேராசை – வெனிசுலாவை தொடர்ந்து குறிவைக்கப்படும் நாடுகள்..சிறப்பு தொகுப்பு!

Next Post

இந்தியா உடனான தடையற்ற வர்த்தகம் – நியூசி. பிரதமர் செய்த விஷயம் – இதற்கான காரணம் என்ன?

Related News

பிரதமர் மோடி பிறந்த நாள் – நயினார் நாகேந்திரன் வாழ்த்து!

வலிமையான இந்தியாவை உருவாக்கும் நோக்கில் அர்ப்பணிப்புடன் செயல்படும் பிரதமர் மோடி – முதல்வர் விஜய் புகழாரம்!

இந்தியாவின் செமிகண்டெக்டர் சூழலமைப்பு வேகமாக விரிவடைந்து வருகிறது – பிரதமர் மோடி

அல்-கொய்தாவுடன் தொடர்பில் இருந்த இளைஞர் கைது; உ.பி காவல்துறை அதிரடி

மெக்கா மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ட்ரோன் தாக்குதல்; சவுதி எச்சரிக்கை

பாரிஸில் நடைபெறும் TOP RESA-2026 சர்வதேச சுற்றுலா கண்காட்சி; அமைச்சர் ராஜேஷ்குமார் திறந்து வைத்தார்

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

மதுரை மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்; ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

அரசு மற்றும் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் இடையே மோதல்; காரணம் இது தான் …

தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி செய்ததாக புகார்; அன்பில் மகேஷ் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை

மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம்; போக்குவரத்துக்கு தடை

யூடியூப் தொகுப்பாளினி குறித்து அவதூறு; தாமோதரன் பிரகாஷ் கைது

(c)PragMatrix

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தலுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா பாதுகாப்பு ஏற்பாடுகள்; அமைச்சர் நிர்மல்குமார் நேரில் ஆய்வு

பிரதமர் நரேந்திர மோடியின் 25 ஆண்டு கால பொது சேவை; பொதுமக்களுக்கு மத்திய இணையமைச்சர் எல்.முருகன் அழைப்பு

UPI-ல் ரூ.2,000 மேற்பட்ட தொகைக்கு 0.4% சேவைக் கட்டணம் நிர்ணயம்;NPCI அறிவிப்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies