இந்தியா உடனான தடையற்ற வர்த்தகம் - நியூசி. பிரதமர் செய்த விஷயம் - இதற்கான காரணம் என்ன?
Apr 29, 2026, 07:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியா உடனான தடையற்ற வர்த்தகம் – நியூசி. பிரதமர் செய்த விஷயம் – இதற்கான காரணம் என்ன?

Manikandan by Manikandan
Jan 9, 2026, 06:00 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பெரிய பொருளாதார நாடான இந்தியாவுடன் சுதந்திரமான வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது, வேலைவாய்ப்புகள் மற்றும் வளர்ச்சிக்கான மைல்கல் என நியூசிலாந்து பிரதமர் லக்சன் பெருமிதம் தெரிவித்துள்ளார். இதற்கான காரணம் என்ன?

இந்தியா – நியூசிலாந்து இடையே 9 மாத வர்த்தக பேச்சுவார்த்தைக்குப் பின்னர் கடந்த டிசம்பரில் இரு நாடுகளும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ள முடிவு செய்தன. இந்த ஒப்பந்தத்தின்படி இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் எந்தவொரு பொருளுக்கும் நியூசிலாந்தில் வரி வசூலிக்கப்படாது… நியூசிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 70 சதவிகித பொருட்களுக்கு இந்தியா வரியை குறைக்கிறது. இதன் காரணமாக அடுத்த 15 ஆண்டுகளுக்கு இந்தியாவில் 20 பில்லியன் டாலர்களை முதலீடு செய்ய நியூசிலாந்து ஆர்வம் காட்டி வருகிறது…

இந்த சூழலில் உலகின் மிகப்பெரிய நாடு மற்றும் உலகின் வேகமாக வளர்ந்து வரும் மிகப்பெரிய பொருளாதார நாட்டுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மேற்கொண்டிருப்பது உண்மையில் மிகப்பெரிய மைல்கல் என்றும், இந்தியா உடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் வேலைவாய்ப்புகள், ஏற்றுமதி மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கான வாய்ப்புகளை உருவாக்கும் சிறந்த ஒப்பந்தம் என்றும் குறிப்பிடுகிறார் நியூசிலாந்து பிரதமர் லக்சன்.

இருதரப்பு உறவில் மிகுந்த அக்கறை கொண்டுள்ள அவர், இந்தியாவில் முதலீடு செய்வதில் நியூசிலாந்து மிகுந்த ஆர்வம் காட்டி வருவதாக கூறினார். வலுவான மற்றும் நம்பகமான கூட்டாண்மையை உருவாக்குவதில் அரசின் கவனத்தை இது பிரதிபலிக்கிறது என்பது அவரது கூற்றாக உள்ளது. இந்தியா உடனான ஒப்பந்தம், ஆழமான மற்றும் நீடித்த நன்மைகளை வழங்கக்கூடியது என்பதும் அவரது கருத்து.

விக்சித் பாரத் 2047 என்ற தேசிய தொலைநோக்கு பார்வையுடன் இந்தியாவின் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தனித்து நிற்கிறது. 2025ம் ஆண்டு மார்ச் 16-ல் இதற்கான அச்சாரம் போடப்பட்டது… வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் நியூசிலாந்து வர்த்தகம் மற்றும் முதலீட்டு அமைச்சர் டாட் மெக்லே ஆகியோருக்கு இடையேயான சந்திப்பின் போது சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகள் முறையாகத் தொடங்கின… 5 சுற்று பேச்சுவார்த்தை, பலமுறை நடந்த சந்திப்புகள், தொடர்ச்சியான, தீவிரமான விவாதங்களை கடந்து இந்த ஒப்பந்தமானது இறுதி செய்யப்பட்டுள்ளது.

சுதந்திர வர்த்தக ஒப்பந்தமானது, வேலைவாய்ப்பை உருவாக்கும், வர்த்தகம் மற்றும் முதலீடு சார்ந்த வளர்ச்சியை ஊக்குவிக்கும், விவசாய உற்பத்தித்திறனுக்கான புதுமைகளை வளர்க்கும் அதுமட்டுமின்றி, நீண்டகால பொருளாதார மீள்தன்மையை வலுப்படுத்த MSME பங்கேற்பை மேம்படுத்தும்.

நியூசிலாந்துக்கு இந்திய ஏற்றுமதி நிறுவனங்கள் 100 சதவிகிதம் வரியற்ற ஏற்றுமதிக்கு சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் வழிகாட்டுவதால், ஜவுளி, ஆடை, தோல், காலணிகள், கடல் பொருட்கள், ரத்தினங்கள், நகைகள், கைவினைப் பொருட்கள், பொறியியல் பொருட்கள் உள்ளிட்ட இந்தியாவின் உழைப்பு மிகுந்த துறைகள் போட்டித் தன்மையுடன் மேம்படுத்த உதவுகிறது. இந்தியா – நியூசிலாந்து இடையேயான வர்த்தகம் வரும் ஆண்டுகளில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அமெரிக்காவின் வர்த்தகப் போருக்கு இந்தியாவின் பதிலடியாகவே இந்த தடையற்ற வர்த்தகத்தை பார்க்கலாம்..

Tags: IndiapmmodiAgreementjobsNew ZealandLuxonmajor economic power
ShareTweetSendShare
Previous Post

பயங்கரவாதிகளுக்கு நீச்சல், ஸ்கூபா டைவிங் பயிற்சியளிக்கும் பாகிஸ்தான் – கடல் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ பயங்கரவாதிகள் திட்டம்!

Next Post

ஈரானில் தீவிரமடையும் போராட்டம் – அரசு கட்டடங்களுக்கு தீ வைப்பு, இணைய சேவை துண்டிப்பு!

Related News

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

Load More

அண்மைச் செய்திகள்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

சிக்கிம் மாநில உதய தின விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மும்பை அருகே கலிமா ஓதக் கூறி பாதுகாவலர்களை கத்தியால் தாக்கிய இளைஞர் கைது!

விழுப்புரத்தில் நடைபெற்ற மிஸ் கூவாகம் 2026 அழகி போட்டி – கோவை சூர்யாகுட்டி முதலிடம்!

சிக்கிமில் கால்பந்து விளையாடிய பிரதமர் – உத்வேகமும், புத்துணர்ச்சியும் அளிப்பதாக பதிவு!

கட்டண சீட்டு வாங்கியும் வெளியே காத்திருந்தோம் – மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தை காண சென்ற பக்தர்கள் குற்றச்சாட்டு!

கோடை வெயில் எதிரொலி – டெல்லியில் பள்ளிகள் நேரம் மாற்றம்!

மதுரை மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் – லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies