அதிகரிக்கும் ட்ரம்பின் அடாவடி - ரஷ்ய எண்ணெய் கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா!
Mar 15, 2026, 03:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

அதிகரிக்கும் ட்ரம்பின் அடாவடி – ரஷ்ய எண்ணெய் கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா!

Manikandan by Manikandan
Jan 10, 2026, 07:36 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வெனிசுலாவுக்கு எண்ணெய் ஏற்றச் சென்ற ரஷ்ய கொடியேற்றப்பட்ட காலி எண்ணெய்க் கப்பலை அமெரிக்கா கைப் பற்றியுள்ளது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கை மூலம், ரஷ்யா-அமெரிக்கா இடையே போர்ப் பதற்றம் அதிகரித்துள்ளது.

கடந்த ஓராண்டாகவே, வெனிசுவேலாவின் வடக்கு எல்லையாக இருக்கும் கரீபியன் கடலில் தனது ராணுவ இருப்பை அமெரிக்கா அதிகரித்துள்ளது.

கடந்த மாதம் வெனிசுவேலா கடற்கரையோரத்தில் இருந்த ஒரு எண்ணெய் கப்பலை அமெரிக்க இராணுவம் கைப்பற்றியது. பறிமுதல் செய்யப்பட்ட எண்ணெய் கப்பலின் வீடியோவை வெளியிட்ட அமெரிக்க அட்டர்னி ஜெனரல், வெனிசுவேலா மற்றும் ஈரானிலிருந்து தடைசெய்யப்பட்ட எண்ணெயை ஏற்றிச் செல்லப் பயன்படுத்தப்பட்ட கப்பல் என்று விவரித்திருந்தார்.

அந்தக் கப்பலை ஸ்கிப்பர் என்று அடையாளம் கண்ட கடல்சார் ஆபத்துகளைக் கண்காணிக்கும் வான்கார்ட் டெக் நிறுவனம், நீண்ட காலமாகப் போலியான இருப்பிடத்தையே கூறி வந்ததாகத் தெரிவித்திருந்தது.

ஏற்கெனவே 2022-ஆம் ஆண்டில், ஹிஸ்புல்லா மற்றும் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படைக்கும் வருவாய் ஈட்டித் தரும் எண்ணெய் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில், அமெரிக்க கருவூலத் துறை ஸ்கிப்பர் கப்பலுக்குத் தடைவிதித்தது. இது அமெரிக்கா நடத்திய மிகப் பெரிய சர்வதேச கடற்கொள்ளை என்று கண்டித்த வெனிசுலா அதிபர் அதிபர் மதுரோ, வெனிசுவேலா ஒருபோதும் அமெரிக்காவின் எண்ணெய் காலனியாக மாறாது என்று அறிவித்தார்.

அதிரடியாகக் கடந்த வாரம் அமெரிக்காவால் கைது செய்யப்பட்ட வெனிசுலா அதிபரும் அவரது மனைவியும் புரூக்ளின் சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர். கடந்த மாதம், “பெல்லா 1” என்ற கப்பலை அமெரிக்க கடலோர காவல்படை ஆய்வு செய்ய முயன்றது. தடைகளை மீறியதற்கும், ஈரானின் எண்ணெயைக் கொண்டு சென்றதற்கும் அதைப் பறிமுதல் செய்ய அமெரிக்க நீதிமன்றம் பிடிஆணை பிறப்பித்திருந்தது.

இந்நிலையில், வட அட்லாண்டிக் பெருங்கடலில் வெனிசுலா தொடர்பாக இரண்டாவது எண்ணெய் கப்பலை அமெரிக்கா கைப்பற்றியுள்ளது. 14 நாட்கள் துரத்தலுக்குப் பின் Marinera என்ற எண்ணெய்க் கப்பலை அமெரிக்க மத்திய நீதிமன்ற உத்தரவின் படி கைப்பற்றப் பட்டதாக அறிவிக்கப் பட்டுள்ளது.

முன்னர் பெல்லா-1 என்று அழைக்கப் பட்ட கப்பல், பிறகு ரஷ்யாவில் பதிவு செய்யப் பட்டு ரஷ்ய கொடியுடன் Marinera என்று பெயர் மாற்றப் பட்டது. இது ரஷ்யாவின் நிழல் கப்பல் குழுவைச் சேர்ந்தது என்று கூறப்படுகிறது. இக்கப்பல் ஐரோப்பாவை நெருங்கிக் கொண்டிருந்தபோது, (Night Stalkers), நைட் ஸ்டாக்கர்ஸ் என்று அழைக்கப்படும் அமெரிக்காவின் இராணுவக் கட்டளைப் பிரிவு, பிரிட்டனின் உதவியுடன், இக்கப்பலை கைப்பற்றியுள்ளது.

மேலும் அனைத்து கப்பல் ஊழியர்களையும் கைது செய்துள்ள அமெரிக்கா, அவர்கள்மீது தடைகளை மீறியதற்காகக் கிரிமினல் வழக்குத் தொடரப்படும் என்று கூறப்படுகிறது. வெனிசுலாவில் அமைதியை ஏற்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாகவே Marinera கப்பல் கைப்பற்றப்பட்டதாக அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா கைப்பற்றிய இந்தக் கப்பலில் எண்ணெய் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஈரான் மற்றும் வெனிசுலா இடையே ஆயுதங்கள் உட்பட சட்டவிரோத வர்த்தகம் இந்தக் கப்பல்மூலம் நடத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Marinera கப்பல் ரஷ்யக் கொடியின் கீழ் சர்வதேச கடல் பகுதியில் சட்டப்பூர்வமாகவே பயணிப்பதாகவும் அமைதியாகச் செல்லும் ரஷ்யாவின் கப்பலை அமெரிக்காவும் நேட்டோவும் நியாயமற்ற முறையில் கைப்பற்றியுள்ளதாகத் தெரிவித்துள்ள ரஷ்யா, அமெரிக்கா கடல்சார் சட்டத்தை மீறிவிட்டதாகக் குற்றஞ்சாட்டியுள்ளது.

இதற்கிடையே, ஐ.நா.வின் அடிப்படைக் காலநிலை ஒப்பந்தம் மற்றும் மேலும் 65 சர்வதேச ஒப்பந்தங்கள் மற்றும் உடன்படிக்கைகளிலிருந்து அமெரிக்கா விலகும் என்று தெரிவித்துள்ள அதிபர் ட்ரம்ப், ரஷ்யா மீதான பொருளாதார தடைகள் மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக அமெரிக்க செனட்டர் கிரஹாம் தெரிவித்துள்ளார்.

இந்த ஒப்புதல் ரஷ்ய கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்யும் இந்தியா, சீனா மற்றும் பிரேசில் உள்ளிட்ட நாடுகள் மீது 500 சதவீதம் வரி விதிக்க வழிவகை செய்கிறது. இதனால் ரஷ்யா- அமெரிக்கா நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் அதிகரிப்பது புவி சார் அரசியலில் புதிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.

Tags: oilempty oil tankerrussiausaputinDonald TrumpUnited Statesvenezuela
ShareTweetSendShare
Previous Post

இந்திய எல்லைகளில் நிலவும் புதிய பாதுகாப்பு சவால்கள் – சீனாவின் அழுத்தத்தால் சுயாதீனத்தை இழக்கும் பாகிஸ்தான்…

Next Post

ட்ரம்பை உதாசீனப்படுத்தினாரா மோடி? – அமெரிக்க அமைச்சரின் பொய் தகவலுக்கு மறுப்பு

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

இங்கிலாந்தில் பெண்ணை உருளைக்கிழங்கு என கிண்டல் செய்த நபருக்கு 29 லட்சம் ரூபாய் அபராதம்!

17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் சந்தையில் விடுவிக்க டிரம்ப் உத்தரவு!

ஈரான் போரில் AI-யை பயன்படுத்திய US ராணுவம் – அமெரிக்காவை எச்சரித்த சீனா!

ஈரான் போரால் கிடைத்த வாய்ப்பு – கச்சிதமா பயன்படுத்தி லாபத்தை அள்ளிய ரஷ்யா!

ஆபிரகாம் லிங்கன் கப்பல் மீது ஈரான் தாக்குதல்? – அமெரிக்கா மறுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies