திருச்சி மாவட்டம் துறையூரில், மதுபோதையில் போக்குவரத்து பெண் காவலரின் கையை கடித்த இருவர் கைது செய்யப்பட்டனர்.
துறையூர் போக்குவரத்து காவல்நிலையத்தில் அம்பிகா என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் பாலகரை பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் கீழே விழுந்தனர். அவர்களை போக்குவரத்து காவலர் காப்பாற்ற முயன்றார். விசாரணையில் அவர்கள் மதுபோதையில் இருந்ததால், வாகனத்தில் இருந்த சாவியை காவலர் எடுத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த ஜெகதீஷ் என்பவர் பெண் காவலர் அம்பிகாவின் கையை கடித்துள்ளார். காவலர் வலியால் துடித்ததை கண்டு, அங்கு வந்த பொதுமக்கள், இருவரையும் பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.
விசாரணையில் அவர்கள் முசிறியை சேர்ந்த அஜித், ஜெகதீசன் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
















