தமிழகத்தில், புதிதாக 80 ஆயிரம் பேருக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என்ற அறிவிப்பு 2 ஆண்டுகளாகியும் அமலுக்கு வரவில்லை என சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் முதியோர், விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் புதிதாக 80 ஆயிரம் பேருக்கு ஓய்வூதிய வழங்கப்படும் என 2024ம் ஆண்டு சட்டப்பேரவை கூட்டத் தொடரில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
எனினும் அறிவிப்பு வெளியிட்டு 2 ஆண்டுகளாகியும் திட்டம் செயல்பாட்டுக்கு வரவில்லை. இதனிடையே கடந்த 4 ஆண்டுகளில் 16 ஆயிரத்து 684 ஓய்வூதியதாரர்களின் பெயர்களை அரசு நீக்கியுள்ளதாக குற்றம்சாட்டி உள்ள சமூக ஆர்வலர்கள், புதிதாக 80 ஆயிரம் பேருக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என்ற அறிவிப்பை உடனடியாக செயல்படுத்த வேண்டுமென வலியுறுத்தி உள்ளனர்.
















