ராமநாதபுரம் அருகே பெண் காவலர் கழிவறையை பயன்படுத்தியபோது வீடியோ எடுத்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் கைது செய்யப்பட்டார்.
பரமக்குடியில் சுதந்திர போராட்ட வீரர் தியாகி இமானுவேல் சேகரனின் மணிமண்டபத்தை கடந்த 17ம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
முதல்வரின் வருகையை ஒட்டி அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்தநிலையில் மணிநகர் சோதனைச் சாவடியில் உள்ள கழிவறையை பெண் காவலர் ஒருவர் பயன்படுத்தினார்.
இதனை சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் முத்துப்பாண்டி, தனது செல்போனில் வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது. செல்போனில் வீடியோ எடுப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த பெண் காவலர், பரமக்குடி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதனையடுத்து காவலர் முத்துப்பாண்டியை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ராமநாதபுரம் கிளை சிறையில் அடைத்தனர்.
















