உக்ரைனில் நிலவும் கடுமையான பனிப்பொழிவு காரணமாக தற்காலிக போர் நிறுத்தத்திற்கு புடின் ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா – உக்ரைன் இடையே கடந்த 4 ஆண்டுகளாக போர் நடந்து வரும் நிலையில், உக்ரைனுக்குள் நுழைந்து பல பகுதிகளை ரஷ்ய படைகள் கைப்பற்றியுள்ளன.
இந்தப் போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகள் செயல்பட்டு வரும் நிலையில், இருநாடுகளுக்கு இடையேயான போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க அதிபர் டிரம்ப் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், அமெரிக்க அமைச்சரவை கூட்டத்தில், உக்ரைன் போர் குறித்த தகவல்களை டிரம்ப் வெளியிட்டார்.
அதில், உக்ரைனில் கடும் குளிர் நிலவுவதால் கீவ் மற்றும் பிற நகரங்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என்று தனிப்பட்ட முறையில் ரஷ்ய அதிபர் புதினிடம் கேட்டுக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.
தற்காலிக போர் நிறுத்தத்திற்கு புதின் ஒப்புக் கொண்டதாகவும், இந்த தகவலை கேட்டு உக்ரைன் மக்கள் மகிழ்ச்சியடைந்ததாகவும் டிரம்ப் கூறினார்.
















