பழனியில் தைப்பூசத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண வைபவம் கோலாகலமாக நடைபெற்றது.
அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனியில் தைப்பூசத் திருவிழா கடந்த 26ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இந்நிலையில், விழாவின் முக்கிய நிகழ்வான முத்துக்குமாரசுவாமி -வள்ளி தெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சி பெரியநாயகி அம்மன் கோயிலில் விமரிசையாக நடைபெற்றது.
தொடர்ந்து, இன்று தேரோட்டம் நடைபெறுவதை முன்னிட்டு, பழனிக்கு ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர்.
















