தைப்பூச திருவிழாவை முன்னிட்டு கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருக்கல்யாண உற்சவம் விமரிசையாக நடைபெற்றது. .
கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய விழாவையொட்டி தினமும் வேள்வி பூஜைகள் நடைபெற்றன.
நேற்று காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை திருக்கல்யாண மண்டபத்தில் சுப்பிரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது.
தொடர்ந்து தங்க மயில் வாகனத்தில் சுவாமி எழுந்தருளி வீதி உலா வந்தார். விழாவின் சிகர நிகழ்ச்சியாக தேரோட்டம் நடைபெறுகிறது. திருவிழாவையொட்டி 1, 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்
















