சர்வதேச அளவில் முக்கிய பிரமுகர்களை உள்ளடக்கிய எப்ஸ்டீன் கோப்பு ஆவணங்களில் பிரதமர் மோடியின் பெயர் இடம்பெற்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பிரதமர் மோடியை பற்றியும், அவர் இஸ்ரேல் சென்றது பற்றியும் அந்த மின்னஞ்சல் குறிப்பில் இடம்பெற்றிருந்தது.
இத்தகைய சூழலில், பிரதமர் மோடி 2017ம் ஆண்டு இஸ்ரேல் சென்றார் என்பது மட்டுமே அதில் உண்மை என்று விளக்கமளித்த மத்திய வெளியுறவு அமைச்சகம், மற்ற குறிப்புகள் அனைத்துமே குப்பை போன்ற வதந்திகளை விட சற்று அதிகமானவை என்று பதிலளித்துள்ளது.
















